மயில்சாமி ஒரு இளிச்சவாயன்; பிச்சைக்காரன்… விவேக் பாராட்டு

மயில்சாமி ஒரு இளிச்சவாயன்; பிச்சைக்காரன்… விவேக் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivek praises Mayilsamy at Kasu Mela Kasu audio launchமயில்சாமி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் “காசு மேலே காசு”.

கே.எஸ். பழனி இயக்கியுள்ள இப்படத்தில் ஷாரூக், காயத்ரி ஜோடியாக நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், P.வாசு, பாண்டியராஜன், தரணி, நடிகர் விவேக், மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் விவேக் பேசும்போது மயில்சாமியின் நட்பு மற்றும் அவரது நல்ல குணங்களை பற்றி வெகு நேரம் பேசினார்.

அவர் பேசியதாவது…

எம்ஜிஆர் காலத்தில் இருந்தே சினிமாவில் மயில்சாமி சினிமாவில் இருக்கிறான்.

அவர் என்னை விட மூத்தவராக இருந்தாலும் நான் அவனை வாடா போடா என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவன்.

அவனிடம் யாராவது உதவி என்று கேட்டு சென்றுவிட்டால், கையில் இருப்பதை கொடுத்து உதவுவார்.

ஒருவேளை இல்லையென்றாலும் சும்மா விட மாட்டார். எங்களை போன்ற யாருக்காவது போன் செய்து உதவி கேட்டு அந்த நபருக்கு உதவி செய்வார்.

ஒரு முறை ஒரு பார்ட்டிக்கு சென்று இருந்தோம். அங்கு ஒருவர் நன்றாக இந்திப் பாடல் பாடிக் கொண்டே இருந்தார். இவன் ஒவ்வொரு பாடலுக்கு பணம் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

டேய். போகும்போது மொத்தமா பணம் கொடுத்துடலாம் என்றேன். அது வேற.. இந்த பாட்டு நல்லாயிருக்கு. அதுக்குதான் இந்த பணம் என்றான்.

பார்ட்டி எல்லாம் முடிஞ்சி போகும்போது டேய்.. ஆட்டோவுக்கு 50 ரூபா இருந்தா கொடு என்றான். இப்படி ஒரு நேரம் பணக்காரனாகவும் சில நிமிடங்களில் பிச்சைக்காரனாகவும் மாறிவிடுவான்.

இதேபோல்தான் உதவுவதிலும். காசு இருக்கும் போது கொடுத்துவிட்டு பின்பு பிச்சைக்காரனாக மாறிவிடுவான். அவன் ஒரு இளிச்சவாயன்/

அவனின் நல்ல குணத்துக்காகத்தான் சினிமாவில் சாதித்த பல இயக்குனர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.” என்று அவரை பாராட்டி பேசினார் விவேக்.

Vivek praises Mayilsamy at Kasu Mela Kasu audio launch

 

kasu mela kasu audio launch photos (5)

டாக்டர்களை அசிங்கப்படுத்திட்டார்; மனுசனா நீ பட இயக்குநருக்கு மிரட்டல்

டாக்டர்களை அசிங்கப்படுத்திட்டார்; மனுசனா நீ பட இயக்குநருக்கு மிரட்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Manusanaa Nee director Ghazali insulted Doctors profession Issueகஸாலி இயக்கத்தில் ஹெச்-3 சினிமாஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் “மனுசனா நீ”.

இப்படம் பரவலான விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதற்கிடையில் இந்த படத்தில் டாக்டர்களை கேவலமாக சித்தரித்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ள டாக்டர்கள் சிலர் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“மனுசனா நீ” படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான கஸாலி இதுபற்றி கூறுகையில்…

“சமீபகாலமாக திரைப்படங்களுக்கு சிலர் வேண்டுமென்றே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மெர்சல், பத்மாவதி என நீள்கிறது பட்டியல்.

அந்த வகையில் மனுசனா நீ படத்தில் டாக்டர்களை கேவலப்படுத்தியுள்ளார்கள், எனவே படத்தை வெளியிடக்கூடாது என்று சில டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம்.

இது சம்பந்தமாக எனக்கு மிரட்டலும் வந்திருக்கிறது.

எல்லா துறையிலும் பணத்தாசை பிடித்தவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் நீதி, நியாயம் எல்லாம் மறந்து கேவலமாக நடந்து கொள்கிறார்கள்.

அவர்களைப் பற்றிய உண்மையை சொன்னால் ஒட்டு மொத்தமாக அந்த துறை சார்ந்தவர்களை கேவலமாக சித்தரிப்பதாக அர்த்தமல்ல. அப்படி மருத்துவத்துறையிலுள்ள ஒரு கேவலமான பணத்தாசை பிடித்த டாக்டர் கதாபாத்திரம் மனுசனா நீ படத்திலும் வருகிறது.

ஆனால் அது ஒட்டுமொத்த டாக்டர்களையோ, மருத்துவத்துறையையோ கேவலப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு எனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள்.

உண்மையை சொன்னால் மிரட்டல் வருவது நம் ஊரில் இயல்பான ஒன்று தான். இந்த மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்.

படத்தை தியேட்டரில் பாருங்கள். அதன் பிறகு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். அப்போது எது சரி, எது தவறு என்று விவாதிக்கலாம்.

ஆனால், பொத்தாம் பொதுவாக விமர்சிப்பது, மிரட்டல் விடுவது எல்லாம், கலையை கலைஞர்களை அவமானப்படுத்தும் செயல்.

எனவே எங்கள் திரைத்துறைக்கு விடுக்கப்படும் மிரட்டலாக இதை நான் பார்க்கிறேன். இனிமேலும் மிரட்டல் தொடர்ந்தால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி யோசித்து களத்தில் குதிப்பேன்’ என்கிறார் இயக்குநர் கஸாலி.

Manusanaa Nee director Ghazali insulted Doctors profession Issue

Manusanaa Nee Movie Stills (6)

செக்ஸியா டிரெஸ் போட முடியாது; ஆதியுடன் கவர்ச்சி சண்டை போட்ட மாளவிகா

செக்ஸியா டிரெஸ் போட முடியாது; ஆதியுடன் கவர்ச்சி சண்டை போட்ட மாளவிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Malavika menon fight with her director Adhirajan at Aruva Sandai shooting spotசிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிராஜன் எழுதி இயக்கி வரும் “ அருவா சண்ட “ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி, அனுராதா பட் பாடிய “ ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மானாக…“ என்ற பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் படமாக்கப்பட்டது.

கதாநாயகியின் அறிமுகப் பாடலான இந்தப் பாடல் காட்சியில் கதாநாயகி மாளவிகா மேனன், இயக்குநர் கொடுத்த உடைகளை அணிய முடியாது என்று மறுப்பு தெரிவித்தார்.

இந்தப் பாடலில் கொஞ்சம் கவர்ச்சியாக தெரிய வேண்டும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் அப்புறம் என்ன என்று இயக்குநர் ஆதி கேட்க நீங்க சொன்னதை விட எடுத்த டிரஸ் ரொம்ப சிறியதாக இருக்கிறது. இதுவரை இப்படிப்பட்ட டிரஸ் அணிந்து ஆடியதில்லை என்று மாளவிகா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

இதனால் சுமார் ஒருமணி நேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நடன இயக்குநர் ராதிகாவும் மாளவிகாவுக்கு புரியவைக்க முயற்சி செய்தார். கடைசியில் வேறு சில உடைகளை வெட்டி தைத்துக் கொடுத்தார் இயக்குநர்.

பின்னர் ஓரளவு சமாதானம் அடைந்த மாளவிகா, கொட்டும் அருவியில் நனைந்தபடி நடனக் குழுவினருடன் செமத்தியாக ஆட்டம் போட்டார். ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில் ஏ.ராஜா தயாரித்து வரும் அருவா சண்ட திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

Malavika menon fight with her director Adhirajan at Aruva Sandai shooting spot

maalavika menon

சென்டிமெண்ட் சீனை கூட காமெடியாக்கிடலாம்.. வீரா பட இசையமைப்பாளர் பிரசாத் பேட்டி

சென்டிமெண்ட் சீனை கூட காமெடியாக்கிடலாம்.. வீரா பட இசையமைப்பாளர் பிரசாத் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Veera movie Music Director Prasad SN about his Background music scoreகிருஷ்ணா, கருணாகரன், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வீரா திரைப்படம் நேற்று வெளியானது.

இப்படத்திற்கு பிரசாத் S.N இசையமைத்துள்ளார். படத்தில் வரும் பின்னணி இசைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

படம் பார்த்த அனைவரும் பின்னணி இசையை பற்றி சமூகவலைத்தளங்களிலும், செய்தி தளங்களிலும் பேசி வருகிறார்கள்.

இதை பற்றி படத்தின் இசையமைப்பாளர் பிரசாத் S.N நம்மிடம் கூறியது.

படத்திற்கு பின்னணி இசை மிகவும் முக்கியமான ஓன்று. ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த படத்திற்கு பின்னணி இசை மிக சிறப்பாக இருக்கும்.

படத்தில் வரக்கூடிய நகைக்சுவை காட்சியையோ அல்லது சண்டை காட்சியையோ மாற்றியமைக்க கூடிய ஓன்றுதான் பின்னணி இசை.

உணர்ச்சி வசப்பட வைக்கும் காட்சியை கூட நகைச்சுவை காட்சியாக மாற்றியமைக்கலாம். படத்திற்கு பின்னணி இசை சரியாக அமையவில்லை என்றால் படம் முழுவதும் நன்றாக இருக்காது.

இந்த படத்தில் ரெட்ரோ வரிசையில் இசை வருவது போன்று முயற்சி செய்துள்ளோம் ஒரு புது முயற்சி. ஒரு இசைமைப்பாளருக்கு முழு படத்திற்கும் அல்லது பின்னணி இசையமைப்பதும் மிக முக்கியம்.

படத்திற்கு பின்னணி இசை மட்டும் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தால் அந்த படத்திற்கு மிக முக்கியமாக காரணங்கள் இருக்கும் போது கண்டிப்பாக இசையமைப்பேன்.

இப்படத்தில் வட சென்னையில் வாழ கூடிய மக்களின் வாழ்க்கையை தெளிவாக பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். இந்த மாதிரியான படங்களை அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் பார்க்கும் பட்சத்தில் கண்டிப்பாக சிறப்பாக இருக்கும் படத்தில் தேவையான இடங்களில் தான் நகைச்சுவை , சண்டை காட்சிகள் அமைந்துள்ளது.

தேவையில்லாமல் திணிப்பது போன்ற காட்சிகள் இல்லை. மிக சிறப்ப்பாக வந்துள்ளது. அடுத்த படமான “காட்டேரி” திரைப்படம் முந்திய படமான “யாமிருக்க பயமே” படத்தை விட மிகுந்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மீண்டும் அதே படக்குழுவுடன் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது.

“யாமிருக்க பயமே” , “காட்டேரி” திரைப்படத்தின் டைரக்டர் என்னுடைய முதல் விளம்பர வீடியோவில் இருந்து எனக்கு நன்றாக தெரியும். அதையும் தாண்டி நாங்கள் நல்ல நண்பர்கள். வீரா திரைப்படம் 16 ஆம் தேதி வெளியானது.

அதன் பின்பு “காட்டேரி” இந்த வருடத்தின் பாதியில் வெளியாக கூடும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதை தவிர்த்து இன்னும் 2 திட்டங்கள் உள்ளன.

Independent Music-ல் அதிக ஆர்வம் உள்ளது திட்டங்களும் உள்ளது. தற்போது நிறைய பாடல்கள் வருகின்றன மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சரியான தருணத்தில் கண்டிப்பாக பண்ணலாம்.” என்றார்.

Veera movie Music Director Prasad SN about his Background music score

கோர்ட் தீர்ப்பு தமிழகத்திற்கு ஏமாற்றம்; காவிரி விவகாரத்தில் ரஜினி கருத்து

கோர்ட் தீர்ப்பு தமிழகத்திற்கு ஏமாற்றம்; காவிரி விவகாரத்தில் ரஜினி கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Supreme Court Verdict in Cauvery Water issue disappoints says Rajiniதமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாக நீடித்து வரும் காவிரி நீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

அதன்படி 177. 25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அதனை குறைத்துள்ளது.

தற்போதை தீர்ப்பு காரணமாக 14.75 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும். ஆனால் தமிழகத்திற்கு குறைக்கப்பட்ட தண்ணீர் கர்நாடகாவிற்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கர்நாடாகவிற்கு 284.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகாவிற்கு 280 டிஎம்சி தண்ணீர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது கர்நாடகாவிற்கு கூடுதலாக நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதில் காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

இதுநாள் வரை காவிரி பிரச்சினையில் பல கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் தற்போது அவர் அரசியலுக்கு வருவதால் அவரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Supreme Court Verdict in Cauvery Water issue disappoints says Rajini

கோயிலும் குப்பையும் ஒண்ணா.? நாச்சியார் மீது இந்து மக்கள் கட்சி புகார்

கோயிலும் குப்பையும் ஒண்ணா.? நாச்சியார் மீது இந்து மக்கள் கட்சி புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Police complaint against Jyothikas dialogue in Baalas Naachiyaarஇளையராஜா இசையமைப்பில் பாலா இயக்கியுள்ள படம் ‘நாச்சியார்’.

இப்படத்தில் ஜோதிகா, ஜீ.வி.பிரகாஷ் குமார், இவானா, ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் வெளியானபோதே அதில் ஜோதியாக பேசிய தே… பயலே என்ற கெட்ட வார்த்தையால்து பல சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில் நேற்று ரிலீஸ் ஆன இப்படத்தில், ‘கோயிலும் குப்பை மேடும் ஒண்ணு தான்’ என போலீஸ் அதிகாரி பேசுவது போல் ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது.

இந்துக் கோயில்களை அவமதிக்கும் இந்த வசனத்தை நீக்கக்கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வசனத்தைப் பேசிய ஜோதிகா மற்றும் படத்தை இயக்கிய பாலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Police complaint against Jyothikas dialogue in Baalas Naachiyaar

More Articles
Follows