விஜய்சேதுபதியுடன் மோதும் சுந்தர் – ஜெய்..; வெல்லப் போவது மனிதனா? பூச்சியா?

விஜய்சேதுபதியுடன் மோதும் சுந்தர் – ஜெய்..; வெல்லப் போவது மனிதனா? பூச்சியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோடை விடுமுறை என்றாலே தமிழ் சினிமாவில் புதிய படங்களுக்கு பஞ்சமிருக்காது.
மளமளவென படத்தின் ரிலீஸ் தேதியை முன்னணி தயாரிப்பாளர்கள் அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வருகிற ஜூன் 24ஆம் தேதி ரிலீசாக உள்ள சில படங்களைப் பற்றிய பார்வை இதோ…
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படம் ஜூன் 24ம் தேதி ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி மற்றும் ஜெய் இணைந்து நடித்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படமும் ரிலீசாக உள்ளது.
இந்த படங்கள் பற்றிய பார்வையை பார்ப்போம். இறுதியில் வெல்லப்போவது மனிதனா அல்லது பட்டாம்பூச்சியா என்பதை காண ஜூன் 24 வரை காத்திருப்போம்.
சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி 4வது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘மாமனிதன்’.
இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார்.
இவர்களுடன் குரு சோமசுந்தரம், சாஜி சென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்காக முதன்முறையாக இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தன் சொந்த பேனரில் தயாரித்துள்ளார். அவரின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
ஜூன் 24-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்த குற்றம் குற்றமே படம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் ரிலீஸானது.
மேலும்  ஜெய் நடிப்பில் அடுத்தடுத்து பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக, கலகலப்பு-2, கோபி நயினார் இயக்கத்திலும் ஒரு படத்தில் என நடித்து வருகிறார்.
அடுத்ததாக இயக்குனர் பத்ரி நாராயணன் இயக்கத்தில் சைக்கோ திரில்லர் திரைப்படமாக வெளிவர உள்ள படம் பட்டாம்பூச்சி.
இயக்குனர் சுந்தர்.C மற்றும் ஜெய் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பட்டாம்பூச்சி படத்தில் ஹனிரோஸ் வர்கீஸ் மற்றும் இமான் அண்ணாச்சி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
AVNI டெலி மீடியா சார்பில் குஷ்பூ சுந்தர் பட்டாம்பூச்சி திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
 இசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், நவநீத்.S இசையமைத்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்திற்கு ஃபின்னி ஆலிவர்.S படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த படமும் ஜூன் 24-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பத்து தல’ சூட்டிங் தள்ளிவைப்பு.; அமெரிக்கா பறந்தார் சிலம்பரசன்.; காரணம் இதுதான்

‘பத்து தல’ சூட்டிங் தள்ளிவைப்பு.; அமெரிக்கா பறந்தார் சிலம்பரசன்.; காரணம் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்திரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
எனவே தந்தையின் உடல் நலம் குறித்து அவரின் மகனும் நடிகருமான சிலம்பரசன் அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில்…
“எதையும் யாரும் நம்ப வேண்டாம். என் தந்தை மிக நலமாக உள்ளார். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.
பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம்.
அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தன் தந்தை டி.ராஜேந்தர் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்ய  அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தந்தையின் சிகிச்சை முடிந்து முழுவதும். குணமான பின்னரே  சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது அதுவரையில் பத்த தல படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்ப
வினோத்தின் வித்தியாசமான சிந்தனை.; அஜித் ரசிகர்கள் அப்செட்

வினோத்தின் வித்தியாசமான சிந்தனை.; அஜித் ரசிகர்கள் அப்செட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார்.
இந்த படம் அஜித்தின் 61வது படமாக உருவாகி வருகிறது.
நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.
தற்போது படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இது உண்மையை கதையை தழுவி எடுக்கப்படுகிறதாம்.
அதாவது BANK ROBBERY (வங்கி கொள்ளை) தொடர்பான கதை என கூறப்படுகிறது.
இதில் அஜித் நெகட்டிவ் வேடத்தில் நடித்து வருகிறார்.
இது சஸ்பென்ஸ் நிறைந்த பரபரப்பான கதை என்பதால் படத்தில் பாடல்கள் இல்லையாம். இது வினோத்தின் வித்தியாசமான சிந்தனை என்றாலும் அஜித் ரசிகர்கள் அப்செட் ஆகாமல் இருப்பார்களா ?
சினிமாவில் ரஜினி அறிமுகமான தினத்தில் ‘தலைவர் 169’ டைட்டில் அப்டேட்.; சிவகார்த்திகேயனுக்கு இதான் கேரக்டர்.!

சினிமாவில் ரஜினி அறிமுகமான தினத்தில் ‘தலைவர் 169’ டைட்டில் அப்டேட்.; சிவகார்த்திகேயனுக்கு இதான் கேரக்டர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அண்ணாத்த’ படத்திற்குப் பிறகு மீண்டும் சன்பிக்சர்ஸ் கூட்டணியில் இணைகிறார் ரஜினிகாந்த்.
இவர்கள் இணையும் கூட்டணிக்கு ‘தலைவர் 169’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க அனிருத் இசையமைக்க நெல்சன் இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இப்படம் பற்றிய நமக்கு கிடைத்த முக்கிய தகவல்களை பகிர்கிறோம்.
இடுத்த ஜூலை மாதம் இறுதியில் தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிகிறது.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க உள்ளார் என தகவல்.
 இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘எந்திரன்’  படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரஜினியின் மகளாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் ரஜினி் பயன்படுத்தவுள்ள கார் என ஓரிரு தினங்களாக ஒரு படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என கூறப்படுகிறது.
அன்றைய தினத்தில்தான் ரஜினிகாந்த் முதல் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1975 ஆம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்தப் படத்தில் நடிகரும் ரஜினியின் தீவிர ரசிகருமான சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
அவர் இளவயது ரஜினியாக பிளாஷ்பேக் மோஷனில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க உள்ளாராம்.
இப்படம் ஜெயிலர் மற்றும் சிறைக்கைதிகளை மையப்படுத்தி உருவாகிறதாம். எனவே அனைத்து இந்திய & அந்நிய மொழிகளுக்கு ஏற்றவாறு BOSS அல்லது JAILOR ஜெயிலர் என டைட்டில் வைக்க வைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த படம் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்துக் கொள்ள எங்களுடன் என்றும் இணைந்திருங்கள்…
‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ் மற்றும் 3 ஹீரோயின்ஸ் கேரக்டர் அப்டேட்ஸ்

‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ் மற்றும் 3 ஹீரோயின்ஸ் கேரக்டர் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனால் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.

ஆனால் இதற்கு பின் வெளியான வெளியான ‘ஜகமே தந்திரம்’ மற்றும் ‘மாறன்’ உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை தழுவியது.

எனவே ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக பணியாற்றி வருகிறார் தனுஷ்.

தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் கேரக்டர் குறித்து அறிவிப்பை கடந்த இரண்டு நாட்களாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது..

முதல் கட்டமாக அனுஷா என்ற கேரக்டரில் ராஷிகண்ணா நடித்து வருவதாக வீடியோ வெளியிட்டன்னர். இவர் தனுஷின் பள்ளி தோழியாக நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து கிராமத்து தென்றல் ரஞ்சனி என்ற கேரக்டரில் பிரியா பவானி சங்கர் நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

சீனியர் திருச்சிற்றம்பலம் கேரக்டரில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இன்ஸ்பெக்டர் நீலகண்டன் கேரக்டரில் பிரகாஷ்ராஜ், தனுஷின் தோழி ஷோபனா என்ற கேரக்டரில் நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருவதாகவும் ஒவ்வொரு வீடியோவாக அறிவித்தனர்.

இதனை அடுத்து தனுஷின் கேரக்டர் எப்போது வெளிவரும் என தனுஷ் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்று சற்று முன் ’திருச்சிற்றம்பலம்’ கேரக்டரில் தான் தனுஷ் நடித்து வருகிறார் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படம் ஜூலை முதல் வாரத்தில் ரிலீசாகலாம் எனத் தெரிகிறது

Dhanush and 3 Heroines Character Updates on ‘Tiruchirambalam’

திருப்பதியில் விதிகளை மீறிய புதுமண தம்பதி நயன்தாரா – விக்னேஷ்சிவன்

திருப்பதியில் விதிகளை மீறிய புதுமண தம்பதி நயன்தாரா – விக்னேஷ்சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் இருவரும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி சென்னையில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார் விக்னேஷ் சிவன்.

இதனையடுத்து இருவரும் ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மற்றும் கோலிவுட் பிரபல நட்சத்திரங்களும் பங்குபெற்று தம்பதியினரை வாழ்த்தினர்.

இதனையடுத்து மறுநாள் அதாவது நேற்று ஜூன் 10ஆம் தேதி இருவரும் திருப்பதி சென்று திருமலையானை தரிசித்தனர்.

ஏழுமலையான் கல்யாண உற்சவம் சேவையில் கலந்துக் கொண்டனர். அப்போது அங்கே மணமக்களுக்கு போட்டோ ஷுட் நடத்தினர்.

கோயிலுக்கு வெளியே வந்து அவர்கள் திருப்பதி மலையில் காலணி அணிய தடை விதிக்கப்பட்டுள்ள ஏழுமலையான் கோவில் முன்புறம் உள்ள பகுதியில் காலணியுடன் சென்று போட்டோ சூட் நடத்தியுள்ளனர்.

தற்போது இது விவாதமாக மாறியுள்ளது. இது பற்றிய தகவல் அறிந்த தேவஸ்தான நிர்வாகம் நடைபெற்ற தவறுக்கு யார் காரணம் என விசாரணை நடத்த உள்ளனர்

மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாம் தேவஸ்தான நிர்வாகம்.

Newly wed couple Nayanthara and Vignesh Sivan break the rules in Tirupati

More Articles
Follows