சூட்டிங் இல்லாத போதும் நடிகர் சங்க போராட்டத்திற்கு வராத ஹீரோயின்ஸ்

சூட்டிங் இல்லாத போதும் நடிகர் சங்க போராட்டத்திற்கு வராத ஹீரோயின்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Top heroines not participated in Nadigar Sangam protest for Cauvery and Sterlite issueகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம் சென்னையில் நடைபெற்றது.

இதில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிவகுமார், விஷால் உள்ளிட்ட நடிகர்களும் பிரபல இயக்குனர்களும் கலந்துக் கொண்டனர்.

மேலும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்ட சினிமா அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர்.

ஸ்ரீபிரியா, ரேகா, சத்யப்பிரியா, கஸ்தூரி உள்ளிட்ட மூத்த நடிகைகளும், தன்ஷிகா, ரித்விகா என சில இளம் நடிகைகளும் கலந்து கொண்டனர்.

ஆனால், ரசிகர்களின் இன்றைய பேவரைட் நாயகிகளாக வலம் வரும் அனுஷ்கா, தமன்னா, த்ரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சமந்தா, அமலாபால் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவில்லை.

கடந்த ஒரு மாத காலமாக எந்தவொரு தமிழ் படத்தின் சூட்டிங்கும் நடைபெறவில்லை.

அப்படியிருந்தும் தமிழகத்திற்காக நடைபெற்ற இந்த போராட்டத்தில் நடிகைகள் கலந்து கொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Top heroines not participated in Nadigar Sangam protest for Cauvery and Sterlite issue

ஐபிஎல் பற்றி அப்துல்கலாம் ஆன்மா அட்வைஸ்; சிம்புவின் செம காமெடி

ஐபிஎல் பற்றி அப்துல்கலாம் ஆன்மா அட்வைஸ்; சிம்புவின் செம காமெடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Late Abdul Kalam soul advice me to Ban IPL match at Chennai says Simbuகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம் நடத்தினர்.

இதில் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் சிம்பு ஆகியோர் கலந்துக் கொள்ளவில்லை.

அஜித் இதுவரை காவிரி விவகாரம் பற்றி வாய் திறக்கவில்லை. அவர் திறக்க போவதுமில்லை என்பது வேறு கதை.

இந்த போராட்டத்தில் கலந்துக் கொள்ளாத சிம்பு பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது அவர் பேசும்போது…

ஐபிஎல் போட்டியில் கலந்துக் கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இந்த காவிரி விவகாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

காவிரிக்கான போராட்டத்திற்கு தோனி ஏதாவது ஒரு வகையில் ஆதரவு அளிக்க வேண்டும்.

கிரிக்கெட் போட்டியாளர்கள் கறுப்பு கொடிகள் அணிய வேண்டும் என ரஜினி சார் சொன்னார். வேண்டாம் அவர் பேரை சொன்னால் ஏதாவது பிரச்சினை வரும்.

அப்துல் கலாம்… அவரு இறந்துட்டாரா? அப்படின்னா அவருடைய ஆன்மாதான் ஐபிஎல் போட்டியில் கறுப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்க சொன்னது.

எங்களை மட்டும் நீங்கள் போட்டி மைதானத்திற்குள் விட்டு பாருங்கள். அப்புறம் என்ன நடக்குதுன்னு பாருங்கள். மீதியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.” என்று பேசினார் சிம்பு.

Late Abdul Kalam soul advice me to Ban IPL match at Chennai says Simbu

 

Breaking: காவிரிக்காக நடிகர் சங்க போராட்டம்; முக்கிய தீர்மானங்கள் இதோ…

Breaking: காவிரிக்காக நடிகர் சங்க போராட்டம்; முக்கிய தீர்மானங்கள் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nadigar Sangam protest for Cauvery Management Board and Sterlite Factory Issueகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் இன்று மவுன போராட்டம் நடைபெற்றது.

இதன் நிறைவாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை…

  • மக்களின் அடிப்படை தேவைகளை பாதிக்கும் எந்த விஷயத்தையும் அரசு செய்யக்கூடாது.
  • ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்.
  • அரசியலற்ற பொது நோக்கத்தில் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.
  • திரையுலகினரின் கையெழுத்துக்களைப்பெற்று தீர்மானங்கள் ஆளுநரிடம் ஒப்படைக்கப்படும்.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Nadigar Sangam protest for Cauvery Management Board and Sterlite Factory Issue

nadigar sangam all stars

Breaking: எவருக்கும் அஞ்ச மாட்டோம்; ரஜினி-கமல் முன்னிலையில் சத்யராஜ் ஆவேசம்

Breaking: எவருக்கும் அஞ்ச மாட்டோம்; ரஜினி-கமல் முன்னிலையில் சத்யராஜ் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilan wont fear for Central Force says Sathyarajகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரையுலகினர் நடத்திய மவுன அறவழிப் போராட்டம் நடத்தினர்.

இதில் ரஜினி, கமல், சிவகுமார், இயக்குனர் எஸ்பி முத்துராமன், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், விஜயசேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

இது மௌன போராட்டம் என்பதால் யாரும் பேசவில்லை. நடிகர் சங்கத் தலைவர் நாசர் இந்த நிகழ்ச்சி தொடங்கும்போது பேசினார்.

பின்னர் இறுதியாக இயக்குனர் ஆர்கே. செல்வமணி நடிகர் சங்க கோரிக்கைகள் குறித்து அப்போது பேசினார்.

மக்களுக்கான அரசு என்றால் மக்களின் உணர்வுகளை மதியுங்கள் என திரையுலகினர் முழக்கமிட்டனர்.

எவரும் எதிர்பாரா நேரத்தில் நடிகர் சத்யராஜ் ஆவேசமாக பேசினார்.

அவர் பேசும்போது…

நாம் என்றுமே தமிழர்களின் பக்கம்; தமிழ் உணர்வுகளின் பக்கம் இயற்கை அன்னை கொடுத்த வளத்தை அரசியலாக்கி கெடுக்க வேண்டாம்.

எந்த அரசாக இருந்தாலும், ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம்.

காவிரிக்காக குரல் கொடுக்க தைரியம் இருந்தால் வாருங்கள்..! இல்லையெனில் ஓடி, ஒளிந்து கொள்ளுங்கள்” என்று பேசினார் சத்யராஜ்.

Tamilan wont fear for Central Force says Sathyaraj

Breaking: தமிழக நலனுக்காக நடிகர் சங்க போராட்டம்; அஜித்-சிம்பு புறக்கணிப்பு

Breaking: தமிழக நலனுக்காக நடிகர் சங்க போராட்டம்; அஜித்-சிம்பு புறக்கணிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith simbuகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழ் திரையுலகினர் இன்று மௌன அறவழிப் போராட்டம் நடத்தினர்.

இதில் ரஜினி, கமல், சிவகுமார், இயக்குனர் எஸ்பி முத்துராமன், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், விஜயசேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

ஆனால் பெரும்பாலான நடிகைகள் இதில் கலந்துக் கொள்ளவில்லை.

இது மௌன போராட்டம் என்பதால் யாரும் பேசவில்லை. நடிகர் சங்கத் தலைவர் நாசர் இந்த நிகழ்ச்சி தொடங்கும்போது பேசினார்.

ஆனால் ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற அஜித் மற்றும் அவரது ரசிகர் சிம்பு இதில் கலந்துக் கொள்ளவில்லை.

ஆனால் சிம்பு இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசவிருக்கிறார்.

தமிழகத்தின் நலனுக்காக நடைபெறும் போராட்டத்தில் அஜித் கலந்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இறுதிவரை வரவே இல்லை என்பதால் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.

Ajith and Simbu not participated in Nadigar Sangam Protest in Cauvery Issue

nadigar sangam all stars

BREAKING: ஐபிஎல்லை நிறுத்தனும்; இல்லேன்னா என்ன செய்யனும்.? ரஜினி ஐடியா

BREAKING: ஐபிஎல்லை நிறுத்தனும்; இல்லேன்னா என்ன செய்யனும்.? ரஜினி ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IPL match should be stopped if not CSK players must use black flag says Rajiniகாவிரி மற்றும் ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும் அனைத்துக் கட்சிகளும் ஒவ்வொரு நாள் ஒரு போராட்டம் பந்த் என அறிவித்து போராடி வருகிறது.

இதனால் தமிழகமே ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

நேற்று மும்பையில் மும்பை இந்தியன் அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி சென்னையில் மற்றொரு போட்டி நடைபெறவுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது ரஜினிகாந்த் பேசியதாவது…

காவிரிக்காக தமிழகமே போராடும்போது, ஐ.பி.எல். போட்டியை நிறுத்தினால் நல்லதுதான்.

அதை சம்பந்தப்பட்டவர்கள் செய்ய வேண்டும். ஒருவேளை முடியாவிட்டால் சென்னை அணி வீரர்கள் விளையாடும் போட்டிகளின்போது கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடலாம்.

இல்லையென்றால் போட்டியை காண போகும் மாணவர்கள், ரசிகர் ரசிகைகள் கருப்பு கொடி, கறுப்பு பேட்ஜ் அணிந்து செல்ல வேண்டும். அப்போது எல்லாருக்கும் தமிழகத்தின் பிரச்சினை தெரிய வரும்” என்று பேசினார் ரஜினி.

IPL match should be stopped if not CSK players must use black flag says Rajini

More Articles
Follows