தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் அவரின் தோழி சசிகலா.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது….
“ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும்.
இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என்று சொல்லிவிட்டு சென்றார் அம்மா.
அதை மனதில் வைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். நானும் அதற்கு உறுதுணையாக நிற்பேன். ஒன்றாக இணைந்து மீண்டும் ஆட்சியமைப்போம். பொது எதிரி திமுகவை வீழ்த்துவோம்” என தெரிவித்தார்.
இதனையடுத்து சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் பாரதிராஜாவும் சந்தித்து பேசினர்.
இவர்களுக்கு முன்னதாக சசிகலாவை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் சந்தித்து பேசினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சரத்குமார்.
அவர் பேசியதாவது…“‘நன்றி மறப்பது நன்றன்று. நன்றல்லது அன்றே மறப்பது நன்று’. நான் 10 ஆண்டுகளாக சசிகலாவோடு பயணித்துள்ளேன்.
சசிகலாவுடன் அதிமுகவினரும் நல்ல உறவோடு இருந்திருக்கிறார்கள். அதை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.” என பேசினார்.
சசிகலா பேச்சு மற்றும் சரத்குமார் சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது…
“சசிகலா அழைப்பு அதிமுகவினருக்கு பொருந்தாது. அவர் அமமுகவினரைத்தான் அப்படி அழைத்துள்ளார்.
சரத்குமார் – ராதிகா அதிமுக கூட்டணியில்தான் இருக்கின்றனர்” என கூறினார்.
TN Politicians meet Sasikala at her residence