தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் இணைந்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில்…
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செலுத்தி வந்த கியூப் அல்லது யுஎப்ஓ-க்கான கட்டணத்தை இனி வரும் காலங்களில் செலுத்த முடியாது.
திரைப்பட இடைவேளைகளில் தியேட்டர்களில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் அந்த நாளில் திரையிடப்படும் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பங்கு கொடுக்க வேண்டும்.
ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வருவாயில் ஒரு பகுதியைத் தர வேண்டும்.
இத்துடன் சில கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தன் அண்மை பேட்டியில் கூறியிருப்பதாவது..
தயாரிப்பாளர்கள் சொல்லியுள்ள எந்த நிபந்தனையையும் ஏற்க முடியாது.
அவர்களின் அப்படி ஏற்காவிட்டால் படங்களை ரிலீஸ் செய்ய முடியாது என்கிறார்கள்.
அது அவர்கள் விருப்பம். விரும்பினால் ரிலீஸ் செய்யட்டும்.
விருப்மாவிட்டால் விட்டுவிடட்டும். படத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் அவர்களை நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது.
திரைப்படங்களே ரிலீசாகவில்லை என்றால் கல்யாணம் மண்டபமாக நாங்கள் தியேட்டரை மாற்றிக்கொள்கிறோம்.
தயாரிப்பாளர்களுக்கு வழி இருக்கும் போது, எங்களுக்கு ஒரு வழி இருக்கும்.
தயாரிப்பாளர்கள் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்படுவது வாடிக்கையாகிவிடும். இனி தியேட்டர்கள் இருக்காது.” என தெரிவித்துள்ளார்.
tirupur subramanyam reply to bharathi raja