திட்டிவாசல் படத்தை பார்த்தாவது அரசு அதிகாரிகள் திருந்துவார்களா?

திட்டிவாசல் படத்தை பார்த்தாவது அரசு அதிகாரிகள் திருந்துவார்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thittivasal movie making awareness in Suicide issuesசமூகத்துக்கு எதிரான கோபமே தற்கொலை என்பது. அண்மையில் நடந்து வரும் தற்கொலைகள், தொடர் தீக்குளிப்புகள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் பாதிப்புக்குள்ளானவர்கள் என்ன செய்வது,?

சராசரி மனிதர்கள் நீதியை தேடி காவல்துறை வருகின்றனர்.அங்கு அவர்களுக்குண்டான நீதியும் குறைந்தபட்ச மரியாதையும் கிடைப்பதில்லை.

பிறகு வேறு வழியின்றி கலெக்டர் அலுவலகம் சென்று மனு தருகின்றனர்.

தமது பிரச்சனைக்கு தீர்வு எட்டவில்லை என வருந்துகின்றனர். சிலர் விரக்தியடைகின்றனர்.

ஒரு ஜனநாயக நாட்டில் நீதி கிடைக்காத சாமானிய மக்கள் வாழ்வை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் விரக்தியின் உச்சத்திற்கு சென்று விடுகின்றனர் வேறு வழியின்றியும் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து இறக்கின்றனர்.

அரசும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளும் அதி தீவிரமாக செயல்படுவதுபோல பாவ்லா காட்டி அச்சம்பவத்தை மூடி மறைத்துவிடுகின்றனர்.

கண்ணெதிரில் சிறுவர்கள் எரிந்து கொண்டிருப்பதைப் பல கோணங்களில் புகைப்படமும் வீடியோவும் எடுத்து தனது திறமையை நிரூபித்துக்கொள்கிறது மனிதநேயமில்லா ஒரு கூட்டம்.

இப்படிப்பட்ட சாமானிய மக்களின் பிரச்சனைக்காக கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு பெண் இறந்துவிடுகிறாள்.

இறந்த பெண் யார்?.அவளின் பிரச்சனைகள் என்ன? அதன் தீர்வு என்ன? என்பதே ‘திட்டிவாசல் ‘படத்தின் மையக்கதை.

சமூக யதார்த்தமும் மக்கள் வாழ்க்கையும் பிரதிபலிக்கும் இக்கதை பிடித்துப் போய் நாசர் முக்கிய வேடமேற்று நடித்துள்ளார்.

வருகின்ற நவம்பர் 3 ம் தேதி இந்த திட்டி வாசல் வெளியாகிறது.

K3 சினி கிரயேஷன்ஸ் வழங்க.சீனிவாசப்பா தயாரித்துள்ளார்.பிரதாப் முரளி என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார்.

அண்மையில் தமிழகத்தில் நடந்த தற்கொலைகள் பிரதிபலிக்கும் படமாக ‘திட்டி வாசல் ‘உருவாகியிருக்கிறது .

இதுபோன்ற படங்களை பார்த்த பிறகாவது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் திருந்துவார்களா?

Thittivasal movie making awareness in Suicide issues

2.0 விழாவுக்கு துபாய்க்கு அழைத்தும் போக மறுத்த பார்த்திபன்; ஏன் தெரியுமா?

2.0 விழாவுக்கு துபாய்க்கு அழைத்தும் போக மறுத்த பார்த்திபன்; ஏன் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

6கேபிள் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 6 அத்தியாயம்.

ஷாம் இசையமைத்துள்ள இப்படத்தின் சிங்கிள் ட்ராக் மற்றும் டிரைலர் இன்று வெளியானது.

இப்படத்தின் கதையை ஆறு அத்தியாயங்களாக வகைப்படுத்தியுள்ளனர். எனவே 6 இயக்குனர்களை கொண்ட 6 குழுக்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

இதனையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பும் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பார்த்திபன், சேரன், சசி, வெற்றிமாறன், சுரேஷ் காமாட்சி, அறிவழகன், மீராகதிரவன், வெங்கடேஷ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

அப்போது பார்த்திபன் பேசியதாவது…

நடிகர் இயக்குநர் பார்த்திபன்

மழை வணக்கம். மத்திய அரசு செய்யவேண்டியதையும் சேர்த்து விவசாயிகளுக்கு செய்யும் மழைக்கு என் நன்றிகள்.

2.ஓ ஆடியோ நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள். அங்கு நான் போகாமல் இங்கே வந்திருக்கிறேன்.

இங்கு நான் தேவை. அங்கு நான் தேவை இல்லை. 6 பேர் சேர்ந்து ஒரு படம் இயக்குவது பெரிய வேலை இல்லை.

இங்கே 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என்ன? இந்த கதைகள் இணைக்கப்பட்டிருக்கும் விதம் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விஷயம் உள்ளவர்களை பார்த்தால் தான் சின்ன மிரட்சி ஏற்படும். அப்படி அஜயன்பாலாவை பார்த்து மிரட்சி அடைந்திருக்கிறேன்.

தி நகரில் ஒரிஜினல் நெய்யினால் செய்யப்பட்ட போளியை விற்பார்கள். போளியை விற்கவே ஒரிஜினாலிட்டி தேவைப்படுகிறது. போலிகள் நிறைந்திருக்கும் சினிமாவிலும் ஒரிஜினாலிட்டி தேவை. 6 அத்தியாயங்கள் அப்படி ஒரு படமாக அமையும்.” என்றார்.

Parthiban refuse to attend 2pointO movie audio launch at Dubai

6 athiyayam

ரஜினியின் காலா ஜனவரியில் ரிலீஸ்.; என்ன சொல்கிறார் தனுஷ்.?

ரஜினியின் காலா ஜனவரியில் ரிலீஸ்.; என்ன சொல்கிறார் தனுஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini dhanush20 வருடங்களுக்கு முன்னர் ஒரு வருடத்திற்கு அரை டஜன் படங்களை கொடுத்தவர் ரஜினிகாந்த்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இரண்டு வருடத்திற்கு ஒரு படத்தை மட்டுமே கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் இதுவரை இல்லாத திருநாளாக அடுத்த 2018ல் இரண்டு படங்களை கொடுக்கவுள்ளார்.

அதில் ஒன்று ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படம்.

இப்படம் 2018 ஜனவரி 26ல் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் திடீரென சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்படலாம் என செய்திகள் வந்ததை பார்த்தோம்.

ஆனால் ஜனவரியில் படத்தை வெளியிடும் முடிவில் லைகா நிறுவனம் உறுதியாகவுள்ளதாம்.

இந்நிலையில் 2.0 படம் தள்ளிப்போனால் ரஞ்சித் இயக்கி வரும் காலா படம் ஜனவரியில் வெளியாகும் என சில செய்திகள் வந்தன.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது தனுஷின் வுண்டர்பார் நிறுவனம்.

காலா படத்தை ஜனவரியிலோ அல்லது பொங்கல் தினத்திலோ வெளியிட வாய்ப்பு இல்லை என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Dhanush production house clarifies regarding Kaala release date
Wunderbar Films‏ @WunderbarFilms_
Contrary to rumours and articles, #Kaala would not be ready for a January nor Pongal release. @dhanushkraja @vinod_wunderbar

சிவகார்த்திகேயனை பாலோ செய்யும் பிக்பாஸ் ஜூலி.?

சிவகார்த்திகேயனை பாலோ செய்யும் பிக்பாஸ் ஜூலி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg boss fame Julie became anchor in TV reality Showவிஜய் டிவி நடத்திய காமெடி நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொள்ள வந்தார் சிவகார்த்திகேயன்.

அவர் அதில் வெற்றிப் பெறவே அவரின் திறமையைக் கண்டு பல நிகழ்ச்சிகளுக்கு அவரை தொகுப்பாளர் ஆக்கியது விஜய் டிவி நிர்வாகம்

சின்னத்திரையில் அதிக ரசிகர்கள் வட்டம் உருவாக சினிமாவில் நுழைந்தார். தற்போது சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளார்

தற்போது இவரது ரூட்டில் பிக்பாஸ் ஜுலியும் தன் பயணத்தை தொடங்கியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்ட நிகழ்ச்சியில் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார்.

தற்போது கலைஞர் டிவி நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இணைந்துள்ளார்.

விரைவில் சினிமாவுக்கு இவர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒரு சக்ஸஸ்ஃபுல் தொகுப்பாளினியாக நான் வலம் வருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு என ஜூலி தெரிவித்துள்ளார்.

Bigg boss fame Julie became anchor in TV reality Show

16 ஆண்டுகளுக்கு பிறகு 2018ல் சூர்யாவின் டபுள் டார்கெட்

16 ஆண்டுகளுக்கு பிறகு 2018ல் சூர்யாவின் டபுள் டார்கெட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya artஅடுத்த 2018ல் சூர்யா நடித்த இரு படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது என்பதை பார்த்தோம்.

பொங்கல் தினத்தில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து தீபாவளி தினத்தில் செல்வராகவன் இயக்கவுள்ள மற்றொரு படத்தை வெளியிட உள்ளதையும் பார்த்தோம்.

இதற்கு முன் கடந்த 2001ல் இதே போல சூர்யாவின் இரண்டு படங்கள் ஒரே ஆண்டில் பொங்கல் மற்றும் தீபாவளி தினத்தன்று வெளியானது.

அதாவது விஜய்யுடன் இணைந்த ப்ரெண்ட்ஸ் படம் பொங்கல் தினத்திலும் பாலா இயக்கிய நந்தா படம் தீபாவளியன்றும் வெளியானது.

இவையிரண்டும் மாபெரும் வெற்றிப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அது போன்ற வெற்றியை அடுத்த 2018 ஆண்டும் சூர்யா பெற வாழ்த்துவோம்.

After 16 years Suriya targetting two festivals on 2018

கருணாநிதியின் கொள்ளு பேரனை மணந்தார் விக்ரம் மகள்

கருணாநிதியின் கொள்ளு பேரனை மணந்தார் விக்ரம் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikrams Daughter Marries Karunanidhis Great Grandsonதி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து-சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது.

திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். அரசியல் கட்சியினர் யாரும் பங்கேற்கவில்லை.

காலை 9.50 மணியளவில் மணமகள் அக்‌ஷிதாவை கோபாலபுரம் இல்லத்துக்கு நடிகர் விக்ரம் காரில் அழைத்து வந்தார்.

மணமகளுக்கு மாலை அணிவித்து உள்ளே அழைத்து சென்றனர்.

காலை 10 மணியளவில் மணமகன் மனோரஞ்சித் வந்தார். அவருக்கு மாலை அணிவித்து வரவேற்று அழைத்து சென்றனர்.

மணமக்கள் கருணாநிதியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

காலை 10.25 மணிக்கு கெட்டி மேளம் முழங்க தமிழ் முறைப்படி கருணாநிதி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

Vikrams Daughter Marries Karunanidhis Great Grandson

vikram daughter marriage

More Articles
Follows