உயிரை பணயம் வைக்கும் ஜல்லிக்கட்டு வீரனுக்கு கார் பரிசா.? – தங்கர் பச்சான் கண்டனம்

உயிரை பணயம் வைக்கும் ஜல்லிக்கட்டு வீரனுக்கு கார் பரிசா.? – தங்கர் பச்சான் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழர்களின் பெருமையை பேசும் ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு நடந்தேறி வருவது வழக்கமான ஒன்று.

இந்த போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு இந்த ஆண்டு கார் பரிசு அளிக்கப்பட்டது.

இந்த கார் பரிசை கண்டித்து இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் நடிகருமான தங்கர் பச்சன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்..

அதில்…

சென்ற ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் போட்டியில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளித்த போது இதே கோரிக்கையை அரசிடம் அளித்திருந்தேன்.

அதேபோல் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு வீரருக்கும், மாட்டின் உரிமையாளருக்கும் முதல் பரிசாக மகிழுந்து (கார்) வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

வீரர்கள் உயிரைப்பணயம் வைத்து பங்கு பெரும் இப்போட்டிகளை நடத்துவதில் ஒவ்வொரு தமிழரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றோம்.

இப்போட்டியில் வென்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசுகள் குறித்து இப்பொழுதாவது அரசு சிந்திக்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் இதேபோல் காரினைப் பரிசாகப் பெற்ற வீரர்கள் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்?

எந்த மாதிரியான வாழ்க்கையை இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள், நிலம் இவைகளைத் தந்து அவருடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தித் தந்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம்.

பரிசு தரும் காரை வைத்துக்கொண்டு (எரிபொருள்) பெட்ரோல் டீசல் விற்கும் விலையில் அதற்கு செலவழிப்பதற்காகவே அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தயவு கூர்ந்து முதலமைச்சர் இக்கோரிக்கைக் குறித்து சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

– தங்கர் பச்சான்
17.01.2023

Thangar Bachan condemns Car gift for Jallikattu winner

செல்வராகவனின் ‘பகாசுரன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சர்ட்டிபிகேட்…

செல்வராகவனின் ‘பகாசுரன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சர்ட்டிபிகேட்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் தற்போது மோகன் ஜி இயக்கத்தில் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘பகாசுரன்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் செல்வராகவன், நடராஜன், ராதா ரவி, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தணிக்கை குழுவில் ‘பகாசுரன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

‘பகாசுரன்’ படத்தின் ரிலீஸ் தேதியை பட தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.

Selvaraghavan’s ‘Bakasuran’ gets U/A certificate

ரசிகர் மரணம்..; அஜித்குமார் செய்ய வேண்டியதை செய்த ‘வாரிசு’ பட நடிகர்

ரசிகர் மரணம்..; அஜித்குமார் செய்ய வேண்டியதை செய்த ‘வாரிசு’ பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜனவரி 11ஆம் தேதி விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ ஆகிய இரு படங்கள் வெளியானது.

இந்த இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவான நிலையில் பல கொண்டாட்டங்களை ரசிகர்கள் செய்திருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக லாரி மீது ஏறி ஆட்டம் போட்ட அஜித் ரசிகர் ஒருவர் தவறி விழுந்து மரணம் அடைந்தார்.

இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் தங்களின் வருத்தத்தையும் கண்டனங்களையும் தெரிவித்து இருந்தனர்.

சினிமா ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் இது போன்ற ஆட்டங்களை தவிர்க்க வேண்டும்.. சினிமாவை விட நடிகர்களை விட உயிரே முக்கியம் எனவும் குரல்கள் எழுந்தன.

மேலும் அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள்.. ரசிகர்களுக்கு இது போன்ற செயல்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அந்த ரசிகரின் மரணத்திற்கு அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் நடிகர் சரத்குமார் நேரில் சென்று குடும்பத்தாரை சந்தித்தார்.

இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. மேலும் சிலர் “அஜித் செய்ய வேண்டியதை சரத்குமார் செய்துள்ளார் இது பாராட்டுக்குரியது” எனவும் தங்களின் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

சரத்குமார்

Sarathkumar met Ajith fan family who died at Thunivu celebration

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ படத்திற்கு ‘யு/ஏ’ சர்ட்டிபிகேட்..!

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ படத்திற்கு ‘யு/ஏ’ சர்ட்டிபிகேட்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ‘ஃபர்ஹானா’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கோகுல் பெனாய் ஒளிப்பதிவு மற்றும் VJ சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் ஃபர்ஹானா என்ற முஸ்லீம் பெண்ணாக நடிக்கிறார்.

இந்நிலையில், தணிக்கை குழுவில் ‘ஃபர்ஹானா’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழுடன் அனுமதி கிடைத்துள்ளது என தெரிய வந்துள்ளது.

இப்படத்தை ஜனவரி 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Aishwarya Rajesh’s ‘Farhana’ gets U/A certificate

வாரிசுகளுடன் பொங்கலை கொண்டாடிய ‘ஏகே 62’ பட இயக்குனர்…!

வாரிசுகளுடன் பொங்கலை கொண்டாடிய ‘ஏகே 62’ பட இயக்குனர்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா கடைசியாக ‘கனெக்ட்’ என்ற ஹாரர் த்ரில்லரில் நடித்தார்.

அவர் பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘ஜவான்’ படத்தின் ஷெட்யூலை விரைவில் முடிக்கவுள்ளார்.

நயன்தாராவும் அகமது இயக்கிய ‘இறைவன்’ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

இதற்கிடையில், நடிகர் அஜித்துடன் விக்னேஷ் சிவன் தற்காலிகமாக ‘ஏகே 62’ படப்பிடிப்பை தொடங்க உள்ளார்.

நயன்தாரா தனது பிஸியான ஷூட்டிங் ஷெட்யூலில் இருந்து தனது மகன்களுடன் நேரத்தை செலவிட ஒரு சிறிய இடைவெளி எடுத்துள்ளார்.

இந்நிலையில், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணத்திற்கு பிறகு தல பொங்கல் பண்டிகையை ஒன்றாக கொண்டாடினர்கள்.

மேலும், சமூக ஊடகங்களில், இயக்குனர் தனது மனைவி மற்றும் இரட்டை மகன்களுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். குடும்பம் ஒன்று சேர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் இதுவாகும்.

விக்னேஷ் சிவன் அவர்களை உயிர் மற்றும் உலகம் என்று அன்புடன் அழைக்கிறார்கள், அதாவது வாழ்க்கை மற்றும் உலகம்.

Nayanthara and Vignesh Shivan celebrated Thala Pongal

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் முதல் ஷெட்யூலில் முடிந்தது..!

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் முதல் ஷெட்யூலில் முடிந்தது..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த ‘ஜிகர்தண்டா’ படம் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசானது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்று அறிவித்தார் கார்த்திக் சுப்புராஜ்.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மதுரையில் ஒரே ஷெட்யூலில் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. மொத்த படமும் 36 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸுடன் தான் இருக்கும் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட எஸ்.ஜே.சூர்யா, “36 நாட்கள் ஏக் தாம் ஒர் ஷெட்யூல் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் என்ன ஒரு அட்டவணை, என்ன ஒரு கான்செப்ட், என்ன ஒரு தொகுப்பு, என்ன ஒரு புகைப்படம், என்ன செலவு, என்ன தயாரிப்பு மதிப்பு இந்த வாய்ப்புக்கு மிக்க நன்றி. என கூறி இருந்தார்.

‘Jigarthanda Double X’ finished in the first schedule

More Articles
Follows