தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, புதுக்கோட்டை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மரங்கள் அனைத்தும் வேறோடு சாய்ந்துள்ளன.
விவசாயிகளின் 20 ஆண்டுகால உழைப்பு வீணாகியுள்ளது.
பிரபலங்கள் பலரும் நிவாரண நிதியை அளித்து வருகின்றனர்.
சிவகுமார், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், டைரக்டர் ஷங்கர், ஜிவி. பிரகாஷ் உள்ளிட்டோர் நிதியுதவி அளித்துள்ளனர்
இந்நிலையில் விஜய் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதை விஜய்யின் மக்கள் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்து நிவாரணப் பணிகளை செய்தது குறிப்பிடத்தக்கது.