தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிகரித்து வருகிறது.
கடந்தாண்டை விட இந்தாண்டு இதன் பாதிப்பு அதிகமாகி வருவதால் உயிரிழப்புகள் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதனால் தமிழகம் புதுச்சேரி கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் நோயாளிகளை கூட்டி வருவதற்கான ஆம்புலன்ஸுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தனியார் ஆம்புலன்ஸ்களில் நோயாளிகளை ஏற்றிச் செல்ல அதிக கட்டணம் வசூலித்து வருகின்றன.
இது தொடர்பாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தனியார் ஆம்புலன்ஸுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து சுகாதாரச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில்…
சாதாரண ஆம்புலன்ஸ்களில் முதல் 10 கி.மீ.க்கு ரூ. 1500, கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 25 என நிர்ணயம்.
ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் முதல் 10 கி.மீ.க்கு ரூ. 2000.
இதன் பின்னரும் கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 50 நிர்ணயம்.
வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் முதல் 10 கி.மீ.க்கு ரூ. 4000 எனவும் கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 100 நிர்ணயம் செய்து தமிழக சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
Tamil Nadu govt fixes charges of private ambulances transporting Corona patients