மகனை இழந்த இரண்டே வாரத்தில் கணவரையும் இழந்த நடிகை கவிதா

மகனை இழந்த இரண்டே வாரத்தில் கணவரையும் இழந்த நடிகை கவிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் தன் 11 வயதில் ‘ஓ மஞ்சு’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கவிதா.

பின்னர் கதாநாயகி, குணச்சித்திர நடிகை என அறியப்பட்டவர் கவிதா.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கவிதா.

தமிழில் மட்டுமே 50-ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர்.

தற்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும், ‘என்றென்றும் புன்னகை’ சீரியலில் நடித்து வருகிறார் கவிதா.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார் இவர்.

இவரது மகன், சஞ்சய் ரூப் மற்றும் இவரது கணவர் தசரத ராஜு ஆகிய இருவருக்கும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டது.

இருவரும் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இருவருக்குமே உடல் நிலை மோசமாகி கொண்டே போனது.

சிகிச்சை பலனின்றி கவிதாவின் மகன் சஞ்சய் ரூப் ஜூன் 15ல் உயிரிழந்தார்.

அவரது கணவரும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்துள்ளார்.

இவரது மகன், கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இன்று கவிதாவின் கணவர் தசரத ராஜுவும் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார்.

காமெடி நடிகர் பாண்டு, ‘தொரட்டி’ பட ஹீரோ ஷமன் மித்ரு, நடிகர் நிதீஷ் வீரா, இயக்குனர் அருண் ராஜா காமராஜின் மனைவி, பாடகர் கோமகன் என பலர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil actress Kavitha lost her family due to covid 19

capturerre-jpg

சூர்யா சிறந்த நடிகர் அவ்வளவு தான்.; முடிந்தால் இதை நடத்தட்டும் – கரு.நாகராஜன் (பாஜக)

சூர்யா சிறந்த நடிகர் அவ்வளவு தான்.; முடிந்தால் இதை நடத்தட்டும் – கரு.நாகராஜன் (பாஜக)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya (2)பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் நீட் தேர்வு குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது…

12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தபோது, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களின் மருத்துவக் கனவுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஆனால் நீட் தேர்வில் 3 வாய்ப்புகள் வழங்கப்படுகிறது; முதல்முறை தோல்வி அடைந்தாலும், அடுத்தடுத்த முறைகளில் எழுதி மருத்துவர் கனவை நனவாக்கிக்கொள்ளலாம்.

நடிகர் சூர்யா ஒரு சிறந்த நடிகர், அவ்வளவு தான். முடிந்தால் ஏழை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சூர்யா பயிற்சி மையம் நடத்தி மருத்துவராக்கட்டும்”

என பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் பேசியுள்ளார்.

BJP Karu Nagarajan reply to Actor Suriya

ஆபாச யூடியூபர் மதனின் ஜாமீன் தள்ளுபடி.; மனைவி கிருத்திகாவுக்கு மட்டும் ஜாமீன்

ஆபாச யூடியூபர் மதனின் ஜாமீன் தள்ளுபடி.; மனைவி கிருத்திகாவுக்கு மட்டும் ஜாமீன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madan wife krithikaஆபாச பேச்சு யூடியூபர் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா இருவரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இருவருக்கும் அவர்களது தரப்பில் ஜாமீன் கேட்கப்பட்டது.

இந்த நிலையில் மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சைதாப்பேட்டை நீதிமன்றம்.

ஆபாச பேச்சுக்கு உடந்தையாக இருந்த அவனது மனைவி கிருத்திகாவுக்கு மட்டும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

8 மாத கைக்குழந்தை இருப்பதால், குழந்தையின் உடல் நலனை சுட்டிக்காட்டி கிருத்திகாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பப்ஜி மதனுக்கு ஜாமீன் வழங்கினால், வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை அழிப்பதற்கும் வாய்ப்பிருப்பதால் பூந்தமல்லி சிறையில் இருக்கும் மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவிட்டது.

Youtuber Madan bail rejected by court

நேற்று : அமெரிக்கா சென்ற ரஜினியை கமெண்ட் அடித்த கஸ்தூரி.; இன்று : தலைவரை வரவேற்க தயாராகட்டும் தமிழகம்.!

நேற்று : அமெரிக்கா சென்ற ரஜினியை கமெண்ட் அடித்த கஸ்தூரி.; இன்று : தலைவரை வரவேற்க தயாராகட்டும் தமிழகம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kasthuriநடிகர் ரஜினிகாந்த் தன் மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி அமெரிக்கா செல்வது வழக்கம்.

கடந்த 16 மாதங்களாக கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா செல்லவில்லை.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மத்திய அரசிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று தன் மனைவி லதாவுடன் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார் ரஜினிகாந்த்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்தியாவிலிருந்து வருபவர்களுக்குத் தடை விதித்து இருந்தது அமெரிக்கா.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் சமயத்தில் எப்படி சிறப்பு அனுமதி பெற்று ரஜினி செல்லலாம்? என கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவுகளில் கேள்வி மேல் கேள்வி கேட்டு இருந்தார்.

கஸ்தூரி கூறியிருப்பதாவது:

“இந்தியாவிலிருந்து நேரடியாக வருபவர்களுக்கு அமெரிக்கா மே மாதமே தடை விதித்துவிட்டது. இதில் எந்த விதிவிலக்கும் கிடையாது.

பிறகு எப்படி, ஏன் ரஜினிகாந்த் இந்தக் காலகட்டத்தில் பயணம் மேற்கொண்டார்?

அவர் அரசியலிலிருந்து விலகியது, இப்போது இது என எதுவும் சரியாகப் படவில்லை. ரஜினி அவர்களே, தயவுசெய்து தெளிவுப்படுத்துங்கள்.

தெளிவுக்காக: அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்காவில் படித்துக் கொண்டிருப்பவர்கள் இந்தியாவில் இருந்தால் அவர்கள் மீண்டும் அமெரிக்கா திரும்ப அனுமதி இருக்கிறது.

எனவே ரஜினியின் இந்தப் பயணம் கண்டிப்பாக மர்மமே.

இந்திய அரசிடமிருந்து மருத்துவக் காரணங்களுக்காக ரஜினி விதிவிலக்குக் கோரி அனுமதி பெற்றிருக்கலாம் என்று பலர் கூறுகின்றனர். இது இன்னும் கவலைக்குரியது.

இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகள் சிகிச்சை தர முடியாத அளவுக்கு அப்படி என்ன அவருக்கு உடல் உபாதை? வழக்கமான பரிசோதனை என்றார்கள்.

மாயோ க்ளினிக் என்பது இருதய சிகிச்சைக்கானது.

ரசிகர்களே, ரஜினிகாந்துக்கு விதிமுறைகள் கிடையாது என்றெல்லாம் வந்து சொல்லாதீர்கள்.

சொல்வதற்கே மோசமான விஷயம் அது. இப்படிப்பட்ட புகழ்பெற்ற மனிதர்கள் மிக ஜாக்கிரதையாகச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்.

இதற்கு தர்க்கரீதியாக ஒரு விளக்கம் இருந்தால் நம் அனைவருக்கும் அது தெரியவரும். ரஜினிகாந்த் உட்பட எவருமே விதிமுறைகளுக்கும், கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல”.

இவ்வாறு கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

கஸ்தூரியின் இந்த ட்விட்டர் பதிவுகள் சர்ச்சை ஆனது.

இந்த நிலையில் இன்று கஸ்தூரி தன் ட்விட்டரில் ரஜினி தரப்பில் அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அவரின் பதிவில்…

“அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள்.
ஆச்சரியம் கலந்த நன்றி !
நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது.
என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது.
நல்ல செய்தி- நானே முதலில் சொல்கிறேன்.
பூரண நலமுடன் புது பொலிவுடன்
‘தலைவரை’ வரவேற்க தயாராகட்டும் தமிழகம் ! #Rajinikanth #Annathe

என பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.

Kasthuri Questions About Rajinikanth Health

படிப்புக்கு சூர்யா உதவி.; குடும்பத்திற்கு உதவ சூப்பர் ஸ்டாரின் பேரன் முதல்வரிடம் மனு

படிப்புக்கு சூர்யா உதவி.; குடும்பத்திற்கு உதவ சூப்பர் ஸ்டாரின் பேரன் முதல்வரிடம் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நம் இந்திய தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பே (1935) ஆண்டே தமிழ் திரையுலகில் சாதனை படைத்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.

நடிகர், சினிமா தயாரிப்பாளர், கர்நாடக இசைப் பாடகர் என பன்முக திறமைக் கொண்டவர் இவர்.

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரே இவர்தான். இவர் நடித்த படமான ஹரிதாஸ் திரைப்படம், தொடர்ந்து 3 ஆண்டுகள் (3 தீபாவளி) திரையரங்கில் ஓடி வரலாற்று சாதனையும் படைத்தது.

இதுதான் தமிழ் சினிமாவின் முதல் படம் எனவும் சொல்லப்படுகிறது.

1959-ம் ஆண்டில் சர்க்கரை நோய் காரணமாக 49 வயதில் எம்.கே.தியாகராஜ பாகவதர் காலமானார்.

அதன்பின்னர் அவரது குடும்பம் வறுமையில் வாடியது.

கடந்த 2008ல் அவரது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி ஒரு லட்சம் ரூபாய் வழங்கினாராம்.

தற்போது இவரது பேரப்பிள்ளைகள் வறுமையில் வாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் தியாகராஜ பாகவதரின் மகள் வயிற்று பேரன் சாய்ராம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்- அமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு கொடுத்துள்ளார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது..

“என் சிறு வயதில் இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அம்மாவும் இல்லை. பாட்டிதான் எங்களை காப்பாற்றினார்.

தற்போது, செக்யூரிட்டி வேலை மற்றும் சமையல் வேலைகளுக்குச் சென்று வருகிறேன். வாடகை வீட்டில் இருக்கிறோம். எங்களால் வாடகை கொடுக்க முடியவில்லை.

எனவே எங்களின் நிலையறிந்து, வீட்டு வசதி வாரியத்தில் தமிழக அரசு ஒரு வீட்டை ஒதுக்கினால் அங்கேயே வசிப்போம்.

எங்கள் வாழ்க்கைக்கு அது பேருதவியாக அமையும் என நம்புகிறோம்” என கூறினார்.

இவரின் தங்கை குழந்தையின் படிப்புக்கு நடிகர் சூர்யா உதவி வருவதாக தெரிவித்துள்ளார்.

MKT grandson requests TN cm stalin

mkt-grand-son

முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதியளித்த தியாகராஜன் & பிரசாந்த்

முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதியளித்த தியாகராஜன் & பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Stalinகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பலரும் நிவாரண நிதியை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்த நடிகர் பிரசாந்த் மற்றும் அவருடைய தந்தையும் நடிகருமான தியாகராஜன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அப்போது கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை இருவரும் வழங்கினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது…

“முதலமைச்சரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன். மேலும் கொரோனாவிற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளேன்.

முதலமைச்சரின் வேகம் சிறப்பாக உள்ளதோடு, செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது.. மிகவும் கடினமாக உழைத்து வருகிறார்.. கலைஞரை பார்ப்பது போலவே உள்ளது. அவரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.

Prashanth family donated Rs 10 lakhs to corona relief fund

More Articles
Follows