தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பழம்பெரும் பாடகியான வாணி ஜெயராம் இன்று பிப்ரவரி 4ஆம் தேதி காலமானார்.
அவர் தலையில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி பாடகியான வாணி ஜெயராம் கணவர் இறப்பிற்கு பின்னர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு 78 வயதாகிறது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இவருடைய வீட்டு வேலைக்காக மலர்கொடி என்பவர் பணிபுரிந்து பணிபுரிந்து வந்துள்ளார்.
இன்று காலை வழக்கம் போல் வீட்டு வேலை செய்வதற்காக வந்த மலர்கொடி வீட்டின் கதவை பலமுறை தட்டியும் திறக்காததால், போன் செய்து பார்த்துள்ளார்.
பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராமின் சகோதரருக்கு போன் செய்து இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
உடனே வாணி ஜெயராம் வீட்டிற்கு வந்த அவருடைய சகோதரர், அவரிடம் இருந்த மற்றொரு சாவியின் மூலம் வீட்டின் கதவை திறக்க வாணி ஜெயராம் தன்னுடைய அறையில் தலையில் அடிபட்டு ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
பின்னர் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து ஆயிரம் விளக்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றியதோடு மட்டும் மின்றி, இந்திய தண்டனை சட்டம் 174 இன் படி இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேத பரிசோதனையில்… உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பிறகே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Suspect in Singer Vani Jayaram death Police filed Case