தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உட்பட 19 மொழிகளில் பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 18 மொழிகளில் 10,000-க்கு அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார்,
இந்தாண்டு 2023 குடியரசு தினத்தன்று மத்திய அரசின் பத்மபூஷன் விருது வாணி ஜெயராமுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வாணி ஜெயராம் சற்றுமுன் காலமானார். வயது 78.
படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தகவல்.
அவரது வாழ்க்கை வரலாறு..:
1945 – நவம்பர் 30-ம் தேதி வேலூரில் ‘கலைவாணி’ என்ற வாணி ஜெயராம் பிறந்தார்.
சென்னை ராணி மேரிக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்தார்..
இசை மீது அதிகம் ஆர்வம் கொண்டதால் இசையை முறையாக பயின்றார்.
வாணியின் இசை ஆர்வத்தை அறிந்த கணவர் ஜெயராம் அமைந்ததால் உஸ்தாத் அஹ்மத் கானிடம் முறையாக ஹிந்துஸ்தானி இசை கற்றார்.
1971 ஆம் ஆண்டு குட்டி GUDDI என்ற இந்தி படத்தில் பாடகியான அறிமுகமானவர். இதில் வசந்த் தேசாயின் இசையில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘மியான் மல்ஹார்’ ராகத்தை பாடி திரையுலகில் அறிமுகமானார்.
தமிழில் 1974 ஆம் ஆண்டு தீர்க்க சுமங்கலி படத்தில் …’ மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ…” பாடல் பாடி ரசிகர்களிடையே பிரபலமானார்.
வாணிஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ ‘சங்கராபரணம்’ படத்தில் இடம்பெற்ற ‘மானஸ ஸஞ்சரரே’, ‘ஸ்ருதிலயாலு’ தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற ‘ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்’ ஆகிய பாடல்களுக்காக 3 முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றவர் இவர்.
மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மொழிகளில் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
இவரது குரலில் ஒலித்த பல இனிமையான பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்… அதில் சிலவற்றை காண்போம்…
மீனவ நண்பன்’ படத்தில் இடம்பெற்ற ‘பொங்கும் கடலோசை’.
‘அவன்தான் மனிதன்’ படத்தில் இடம்பெற்ற ‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது’…
‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் ‘ஒரே நாள் உனை நான்’…
‘சாவித்திரி’ படத்தில் ‘வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்’…
‘சிறை’ படத்தில் ‘நான் பாடிக்கொண்டே இருப்பேன்’
‘சவால்’ படத்தின் ‘நாடினேன்.. நம்பினேன்’…
‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் ‘கட்டிக் கரும்பே கண்ணா’…
‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தில் ‘நானே நானா’..
‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில் ‘ஒருபுறம் வேடன்.
‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் ‘மணமகளே உன் மணவறைக் கோலம்’…
‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘என்னுள்ளே ஏதோ’…
BREAKING Padma Bhushan Vani Jayaram who sang in 18 languages passed away