தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சிவகுமாரின் மகன்களும் நடிகர்களுமான சூர்யா கார்த்தி இருவரும் சமூக சேவைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அகரம் பவுண்டேசன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு சூர்யா உதவி வருகிறார். நிறைய மாணவர்கள் இதன் மூலம் பலன் அடைந்துள்ளனர்.
அதுபோல் நடிகர் கார்த்தி உழவர் பவுண்டேஷன் என்ற அமைப்பின் சார்பில் விவசாயிகளுக்கு உதவி வருகிறார்.
இந்த நிலையில் கார்த்தியின் உழவர் பவுண்டேஷன் சார்பில் ‛உழவர் விருதுகள் 2022′ என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய விதை மீட்பு, இயற்கை விவசாயம் நீர்நிலை, விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த குழுக்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் தனிநபர் மற்றும் குழுக்கள் என மொத்தம் 6 விருதுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியதாவது…
“எங்கள் வீட்டில் இருந்த ஒரு மரம் திடீரென காய்ந்துவிட்டது. இனி அந்த மரம் வளராது என தோட்டக்காரர் சொன்னார்.
ஆனால் நாம் மரம் அருகே உட்கார்ந்து பேசினால் மரம் வளரும் என படித்தேன். அதை கார்த்தியிடம் சொன்னேன்.
அந்த மரத்தின் பக்கத்தில் சென்று, ‘உன் பக்கத்தில் உள்ள மரம் எப்படி வளருது. அதை மாதிரியே நீயும் வளர்ந்தால் என்ன?’ என்று அந்த மரத்திடம் பேசினேன்.
நான் ஒருநாள் மட்டும்தான் பேசினேன். கார்த்தி தினமும் மரத்துடன் பேசினார்.
தற்போது, காய்ந்த அந்த மரம் உயரமாக வளர்ந்துவிட்டது.”
இவ்வாறு சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசியதாவது…
கல்லூரியில் ப்ராஜெக்டை காசு கொடுத்து மாணவர்கள் வாங்க வேண்டாம். இன்றைய சமூகத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளது. விவசாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
நான் ஆலிவ் ஆயில் பயன்படுத்த வில்லை நம்ம ஊரு நல்லண்ணெய் தான் சாப்பிடுகிறேன் என்று சொல்ல வேண்டும். நுகர்வோரை விவசாயம் நோக்கி பார்க்க வைப்பதுதான் எங்களின் நோக்கமாக உள்ளது.
இன்ஜினியர்களுக்கு பஞ்சமே இல்லாத மாநிலம் தமிழ்நாடு. நானும் இன்ஜினியர் தான். ஆனால் இப்போ வேறு தொழில் செய்து கொண்டு இருக்கிறேன். இன்ஜினியர்கள் நினைத்தால் விவசாயத்தை மாற்ற முடியும்.
இவ்வாறு நடிகர் கார்த்தி பேசினார்.
Suriya and Karthi speech at Uzhavar Virudhugal 2022 event