தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரிட்டனில் புதிய கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது.
இதனால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய கட்டுப்பாடு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், மும்பை விமான நிலையம் அருகே இருக்கும் ட்ராகன் ஃபளை கிளப் என்ற இடத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நேரம் செலவிட்டதாக சுரேஷ் ரெய்னா, ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூஸன் கான், பாடகர் குரு ரந்தவா உள்ளிட்ட 34 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இத்துடன் கிளப்பைத் திறந்த குற்றத்துக்காக அந்த கிளப்பின் பணியாளர்களையும் கைது செய்துள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கிளப்பைத் திறந்து வைத்தல், சமூக விலகல், முகக்கவசம் அணிதல் என கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் எதையும் பின்பற்றாமல் இருந்துள்ளனர்.
வைரஸ் தொற்று பரப்பி உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவது எனப் பல குற்றங்களுக்காக, 188, 269, 34 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Suresh Raina & Sussanne Khan arrested in a raid at a pub