திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suresh rainaகொரோனா வைரஸ் பரவலால் உலகமே திக்கு முக்காடி போய்க் கொண்டிருக்கும் நிலையில் காவல் துறையினர் தங்கள் உயிரை துச்சமென கருதி பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். ஆனால், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தனது செயல்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

புகார் அளிக்கப்பட்ட 72 மணி நேரத்திற்கு பிறகு ஒவ்வொரு புகார்தாரரிடமிருந்து வழக்கு விசாரணை பற்றி கருத்து கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

காணொளிக்காட்சி மூலம் துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள், வழக்குரைஞர் ஆகியோருடன் அவ்வப்போது கலந்தாலோசனை செய்து வருகிறார்.

அம்மாவட்ட திருநங்கையர்களும் காவல்துறையுடன் இணைந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்செயலைக் கண்டு அனைவரும் பாராட்டி வரும் நிலையில், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா,

மக்கள் அளிக்கும் புகார் குறித்து புகார்தாரர்களிடம் கருத்துக்களைக் கேட்க போன் அழைப்புகள் தொடங்கியதற்காக எஸ்.பி. விஜயகுமாருக்கு ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், இது அற்புதமான முயற்சி. இந்த செயல்முறைகளை மேலும் செம்மைப்படுத்துவதில் காவல்துறையினருக்கு உதவுவதோடு குடிமக்களுக்கு அதிக ஊக்கமளிக்கும் என்றார்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை காவல் பணியில் பயன்படுத்த தடை

தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை காவல் பணியில் பயன்படுத்த தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

friends of policeசாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ், ஊரடங்கு நேரத்தில் விசாரணை என்ற பெயரில் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

கைதிகளை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பேரில், அவர்கள் மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினருக்கும் தொடர்பு உள்ள நிலையில் தூத்துக்குடியில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பே விழுப்புரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை சரகத்தில் 4 மாவட்டங்களிலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்தக் கூடாது என டிஐஜி பிரவீன்குமார் அபினபு உத்தரவு

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்த தடை என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த கூடாது என அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.

கணக்கு காட்ட தயார்.. விஷால் ஆபிஸ் அக்கௌண்டன்ட் சவால்..; அடுத்த ட்விஸ்ட் இது.!

கணக்கு காட்ட தயார்.. விஷால் ஆபிஸ் அக்கௌண்டன்ட் சவால்..; அடுத்த ட்விஸ்ட் இது.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalநடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சென்னை, சாலிகிராமம் காவேரி ரங்கன் நகரில் உள்ளது.

இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையை, வருமான வரித்துறைக்கு விஷால் முறையாக செலுத்தவில்லை என்ற புகார் சில மாதங்களுக்கு முன்பு எழுந்தது.

இதனையடுத்து இந்த வழக்கில் விஷால் தரப்பில் 80 சதவீதம் வருமான வரித்துறைக்கு பணத்தைக் கட்டினர்.

இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றதில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த நிறுவன மேலாளர் ஹரி கிருஷ்ணன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில் தங்களது நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா என்பவர் 45 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டார் என கூறியிருந்தார்.

இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் பணம் மோசடியில் ஈடுபட்டதாக விஷால் தரப்பு கூறியுள்ள குற்றச்சாட்டு பொய் என கணக்காளர் ரம்யா விளக்கம் அளித்துள்ளார்.

போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தனர்.

தான் பணியாற்றிய காலத்தில் உள்ள மொத்த கணக்கு வழக்குகளையும் சமர்ப்பிக்கத் தயார் எனவும் ரம்யா கூறியுள்ளார்.

இந்த வழக்கில் இது புதிய ட்விஸ்ட் ஆக பார்க்கப்படுகிறது.

எனவே யார் கூறுவது உண்மை? என்ற குழப்பம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

கொரோனா கொடுமை..; ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் நடிகை மஞ்சு

கொரோனா கொடுமை..; ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் நடிகை மஞ்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

serial actress manjuகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் 3 மாதங்களாக மக்கள் வீட்டிலேயே முடங்கிகிடந்தனர்.

தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தாலும் சினிமா துறைக்கு இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை.

தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. சூட்டிங்குகள் நடைபெறவில்லை. அதுபோல் மேடை நாடக கலைஞர்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கேரளாவில் மஞ்சு என்ற நாடக நடிகை பிழைக்க வேண்டி தற்போது ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறாராம்.
கடந்த 15 ஆண்டுகளாக மேடை நாடகங்களில் நடித்து வருகிறார் இவர்.

சில ஆண்டுகளில் ஒரு ஆட்டோ வாங்கியுள்ளார் அதிலேயே நாடகம் முடிந்து வீட்டுக்கு திரும்புவது தான் இவரது வாடிக்கை.

தற்போது கொரோனா ஊரடங்கால் நாடகம் கை விடவே இந்த ஆட்டோ அவருக்கு கை கொடுத்துள்ளது.

முழுநேரமாக ஆட்டோ ஓட்டி தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறாராம் மஞ்சு.

7 வயது சிறுமி ஜெயப்ரியா பாலியல் பலாத்காரம்.; தட்டிக் கேட்கும் பிரபலங்கள்

7 வயது சிறுமி ஜெயப்ரியா பாலியல் பலாத்காரம்.; தட்டிக் கேட்கும் பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayapriyaபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி ஜெயப்பிரியா கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு புதரில் வீசப்பட்டாள்.

இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதனையடுத்து Justice for Jayapriya என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு கோலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

ராதிகா சரத்குமார்…
அந்த சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி படிக்கும்போதே என் இதயம் நொறுங்குகிறது. கண்களில் கண்ணீர் சிந்தாமல் அதைப் பற்றி எழுதக்கூட வலிமை இல்லை, குற்றவாளிகளை விடக்கூடாது.

அதுல்யா ரவி…
தமிழகத்தில் இதயத்தை வலிக்கச் செய்யும் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்கிறவர்கள் மாற மாட்டார்கள். கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும்.

பிக்பாஸ் நடிகர் கவின்..
இன்னும் எத்தனை ஹேஷ்டேக் போடணும், இன்னும் எத்தனை நியாயம் கேட்கணும். இன்னும் எவ்வளவு போராடனும். அந்த குழந்தை மாஸ்க் போட்டு சிரிச்சுக்கிட்டு இருக்குற ஒரு போட்டோ, இன்னொரு போட்டோவை பார்க்க கூட முடியல.

நல்லா நல்லா இருப்பிங்ககளா டா நீங்க எல்லாம். ஒரு குழந்தையை கற்பழித்து கொல்றதை விட பெரிய தப்பு என்ன இருக்க முடியும். பொண்ண பெத்தவன் எல்லாம் பயப்படுற மாதிரி இந்த தப்பெல்லாம் செய்றவனும் பயப்படனும் தானே. அதுக்காகவாச்சும் ஒரு சட்டம் பொறக்க கூடாதா?

பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா
என்ன ஒரு வெட்கக்கேடான முட்டாள்தனம். 7 வயது பெண் குழந்தையை எப்படி பாலியல் பலாத்காரம் செய்ய முடியும்.. இதற்கு ஒரே ஒரு தண்டனை உடனே தூக்கிலிட வேண்டும். என் இதயம் நொறுங்கிவிட்டது. கடவுள் அந்த சிறுமியின் குடும்பத்திற்கு அதிக பலத்தை அளிக்கட்டும்.

கடந்த ஆட்சியில் போலீஸ் அராஜகம் குறித்து பேச ரூ 2 கோடி பேரம்.: சுசீத்ரா சீக்ரெட்ஸ்

கடந்த ஆட்சியில் போலீஸ் அராஜகம் குறித்து பேச ரூ 2 கோடி பேரம்.: சுசீத்ரா சீக்ரெட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suchitraசாத்தான்குளம் என்ற ஊரில் பொது முடக்கத்தின் போது மொபைல் கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அவர்களின் கொடூர தாக்குதால் இருவரும் மரணமடைந்தனர்.

இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது.

திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் முதல் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் பாடகி சுசித்ரா இந்த கொடூர தாக்குதல் குறித்து ஆங்கிலத்தில் பேசி வீடியோவாக பதிவிட்டார்.
இதனையடுத்து இந்த வீடியோ இந்தியா முழுக்க வைரலானது.
இந்த நிலையில் மற்றொரு போலீஸ் தாக்குதல் குறித்து திடுக்கிடும் தகவல் ஒன்றை சுசித்ரா வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆட்சியின்போது இதேபோன்று ஒரு போலீஸ் அராஜகம் குறித்த சம்பவம் நடந்தபோது என்னிடம் ஒரு வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று தனக்கு ரூபாய் 2 கோடி வரை பேரம் பேசப்பட்டது என சுசித்ரா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் என்ன விவகாரம்? பேரம் பேசியவர்கள் யார்? என்ற தகவல்கள் இல்லை.

More Articles
Follows