ஷாரூக்-தீபிகா இணையும் படத்திற்கு பாஜகவை அலறவிடும் டைட்டில் வைத்த அட்லி

ஷாரூக்-தீபிகா இணையும் படத்திற்கு பாஜகவை அலறவிடும் டைட்டில் வைத்த அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atleeவிஜய் நடித்த ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய திரைப்படங்களை அட்லி இயக்கியிருந்தார்.

இந்த 3 படங்களுமே விஜய் & அட்லிக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

இதனையடுத்து பாலிவுட்டில் ஷாருக்கானை அட்லி இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது.

தற்போது இது கிட்டத்தட்ட உறுதி என கூறப்படுகிறது.

இவர்கள் இணையும் படத்திற்கு சங்கி (Sanki) என்று பெயரிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறாராம்.

ஹேப்பி நியூ இயர், சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக கட்சியினரை கிண்டலாக சங்கி என அழைத்து வருகின்றனர் மக்கள். அப்படியிருக்கையில் இந்த தலைப்பை வைத்திருப்பதால் நிச்சயம் அரசியல் பிரச்னைகளை அட்லி சமாளிப்பாரா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.

SRK and Deepika to reunite for atlees Sanki

வீடியோ கான்பிரன்ஸி-ல் நீதி வழங்கும் நீதிமன்றம்..; சூர்யா மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட் ஜட்ஜ் கடிதம்

வீடியோ கான்பிரன்ஸி-ல் நீதி வழங்கும் நீதிமன்றம்..; சூர்யா மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட் ஜட்ஜ் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaநீட் தேர்வு பயத்தால் தமிழக மாணவர்கள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.

இதனை கண்டுக்காத அரசுகளை மாணவர்களின் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லாத அரசு என நடிகர் சூர்யா கடுமையாக விமர்சித்து இருந்தார்.

மேலும் அவரின் அறிக்கையில்.. கொரோனா காலத்தில் வீடியோ கான்பிரன்ஸி-ல் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சமில்லாமல் நீட் தேர்வு எழுத சொல்வதையும் கண்டித்திருந்தார்.

இந்த நிலையில் சூர்யாவின் இந்த பேச்சுக்கு (அறிக்கை) நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.

உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மை, சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.

சூர்யாவின் கருத்து மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல்,தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது

“நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது

சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும்

இவ்வாறு தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.

Madras HC wants contempt notice against actor Suriya

பாஜக.வில் இணைய காத்திருக்கிருக்கிறேனா..? விஷால் விளக்கம்

பாஜக.வில் இணைய காத்திருக்கிருக்கிறேனா..? விஷால் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Actor Vishal join in BJP Political partyஅடுத்தாண்டு 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சில காலம் அரசியல் களம் கண்ட நடிகர் விஷால் அவர்கள் பா.ஜ.கட்சி, தலைவர் முருகனை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து விஷால் பா.ஜ.வில் இணைய இருப்பதாக தகவல் பரவியது.

இதை மறுத்துள்ள விஷால், ”நான் பா.ஜ.,வில் இணைவதாக வந்த செய்தி உண்மையில்லை. யாரையும் சந்திக்க நேரம் கேட்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

Will Actor Vishal join in BJP Political party

மக்கள் சக்திதான் எல்லாமே..; மாஸான ரீ-என்ட்ரீ கொடுக்க போகும் வடிவேலு

மக்கள் சக்திதான் எல்லாமே..; மாஸான ரீ-என்ட்ரீ கொடுக்க போகும் வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vadiveluநேற்று செப்டம்பர் 12ஆம் தேதி காமெடி கிங் மீம்ஸ் அரசன் வடிவேலு தன் பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி அவருக்கு கோலிவுட்டே வாழ்த்து சொன்னது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்…

”மக்களை சிரிக்க வைக்க தினமும் நான் பிறக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் நகைச்சுவை செல்வமாக பிறக்கிறேன்.

என் அம்மாவுக்கு முதலில் நன்றி சொல்லணும், அவர் என்னை பெற்றெடுக்கவில்லை என்றால் நான் கிடையாது. அதன்பிறகு மக்கள் சக்தி தான். மக்கள் சக்தி இல்லாமல் இந்த வடிவேலு கிடையாது.

ஏன் நடிக்க மாட்டிறீங்கனு கேட்கிறாங்க.? சீக்கிரமே பெரிய என்ட்ரியோடு வருவேன். வாழ்க்கைன்னா சைத்தான், சனியன் இருக்கும். என் வாழ்வில் இல்லாமல் இருக்குமா, அங்கங்க ரெண்டு இருக்கத்தான் செய்து” என பேசியுள்ளார் வடிவேலு.

vadivelu talks about his re entry in kollywood

மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாத கல்விமுறை; சூர்யா சூடான அறிக்கை

மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாத கல்விமுறை; சூர்யா சூடான அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriyas statement about NEET exam and Education systemநீட் தேர்வு பயத்தில் 3 மாணவர்கள் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.

இது தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதை போல அவலம் எதுவும் இல்லை எனவும் வேதனை தெரிவித்தார்.

அவரது அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது…

நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது.

Suriyas statement about NEET exam and Education system

actor suriya about neet exam

‘சிகப்பு ரோஜாக்கள் 2’ படத்தில் கமல்-சிம்பு..; இது பாரதிராஜாவுக்கு தெரியுமா?

‘சிகப்பு ரோஜாக்கள் 2’ படத்தில் கமல்-சிம்பு..; இது பாரதிராஜாவுக்கு தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரதிராஜா இயக்கி கமல், ஸ்ரீதேவி நடிப்பில் உருவாகி வெளியான சூப்பர் ஹிட் படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’.

கிட்டதட்ட 30 வருடங்கள் ஆன இந்த படத்தின் 2ம் பாகம் வெளிவருமா? என்று சில ஆண்டுகளாக கேள்விகள் எழுந்தன.

கூடவே கட்டுக்கதைகளும் உலா வரத் தொடங்கியது.

இதனிடையில் பாரதிராஜா மகன் மனோஜ் இயக்கத்தில் ‘சிகப்பு ரோஜாக்கள் 2’ உருவாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அது என்ன ஆனதோ? அதன்பின் தகவல்கள் ஒன்றுமில்லை.

தற்போது ‘சிகப்பு ரோஜாக்கள் 2’ படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் முக்கிய வேடத்தில் கமல்ஹாசன் நடிப்பார் எனவும் புதிய தகவல் கோலிவுட்டில் உலா வருகிறது.

இது பாரதிராஜாவுக்கு தெரியுமா? அல்லது இதுவும் வழக்கம்போல் வதந்திதானா என்பதுதான் தெரியவில்லை.

சில மாதங்களுக்கு முன் ‘சிகப்பு ரோஜாக்கள் 2’ உருவானால் நாங்களே முறைப்படி அறிவிப்போம் என பாரதிராஜா தரப்பில் சொல்லப்பட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
bharathiraja sigappu rojakkal

Kamal and Simbu may joins together for sigappu rojakkal 2

More Articles
Follows