தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் எஸ்.பி.பி.சரண்.
இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் எஸ்.பி.பி.சரண் கூறியதாவது…
“சினிமா மீதுள்ள ஆர்வத்தால் படங்கள் தயாரித்தேன்.
நான் தயாரித்த உன்னை சரணடைந்தேன் படத்திற்கு மாநில அரசு விருது கிடைத்தது. ஆனால் படத்திற்கு லாபம் கிடைக்கல.
தெலுங்கில் வெளியான ‘வர்ஷம்’ படத்தை தமிழில் மழை என்ற பெயரில் தயாரித்தேன். அதிலும் நஷ்டம்.
‘சென்னை 28’ படத்தை எடுத்தேன். படம் வெற்றி பெற்றாலும் பெரிய லாபமில்லை.
ஆரண்ய காண்டம் படம் தயாரித்தேன். அதற்கு தேசிய விருதுகள் கிடைத்தது.
ஆனால் பணம் வரவில்லை. நல்ல நல்ல படங்கள் எடுத்தும் எனக்கு லாபமில்லை. இதனால் மன உளைச்சல் தான் வந்தது.
சினிமாவில் நஷ்டம் இயல்பானது என அப்பா ஆறுதல் சொன்னார்..
இதனையறிந்தவர்கள் எஸ்.பி.பாலு சம்பாதித்த பணத்தையெல்லாம் பையன் அழிச்சிட்டான் என்றார்கள். மொத்த சொத்தும் கரைந்தது.
மேடை கச்சேரிகள் தான் பொருளாதார ரீதியாக கை கொடுத்தன.
கொரோனாவால் அப்பாவை இழந்துவிட்டோம். வாழ்க்கை மீண்டும் சீர்குலைந்து விட்டது.
தெலுங்கு டி.வி.யில் அப்பா தொகுத்து வழங்கிய இசை நிகழ்ச்சியை இனி நான் நடத்தவுள்ளேன். எனது தந்தை குரலில் பாடவும் இருக்கிறேன்.”
இவ்வாறு எஸ்.பி.பி.சரண் அந்த பேட்டியில் உருக்கமாக கூறியுள்ளார்.
SPB Charan talks about his losses