தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா தொற்றால் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட 50 நாட்கள் மருத்துவமனையில் உயர் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25-ம் தேதி காலமானார்.
அவரின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனையடுத்து எஸ்பிபி சிகிச்சைக்கு எம்.ஜி.எம் மருத்துவமனை அதிகப்படியான பில் போடப்பட்டதாகவும், இதனை கட்ட எஸ்பிபி குடும்பத்தினரால் முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் சில தகவல்கள் பரவியது.
ஆஸ்பிட்டல் பில் 10 கோடி வந்தா உங்களுக்கென்ன..? போன் செஞ்சு புரளி பத்தி கேட்காதீங்க.!?. – எஸ்பி சரண்
இதற்கு விளக்கம் கொடுப்பது தொடர்பாக எஸ்பிபி சரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்;
” மருத்துவமனை கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து வதந்தி ஒன்று வந்திருக்கிறது.
நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும், ஆனால் இன்னும் பணம் பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் தமிழக அரசிடம் கோரியதாகவும், அவர்கள் மறுத்ததால் குடியரசுத் துணைத் தலைவரிடம் நான் கோரிக்கை வைத்ததாகவும் தகவல் உலவுகிறது.
அஜித் வந்தாரா? ஆறுதல் சொன்னாரா? அது பிரச்னையில்ல.. அது தேவையில்ல ..; – சரண் ஆவேசம்
இவை அனைத்தும் சுத்த அபத்தங்கள். பொய்கள்.
இதுபோன்ற வதந்திகளைத் தெளிவுபடுத்த ஒரு செய்தி அறிக்கையை தரப்போகிறோம்.
மருத்துவமனைக் கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும்.
இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது என்பதே வருத்தமாக உள்ளது.
எம்ஜிஎம் ஹெல்த்கேர் எங்கள் குடும்பத்துக்குச் செய்த உதவிகளுக்கு என்றும் நன்றியுடன் இருப்போம்.
அப்பாவைப் பார்த்துக் கொண்ட செவிலியர்களை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.
தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். நீங்கள் எவ்வளவு பேரைக் காயப்படுத்துகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை.
இவ்வாறு எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
https://t.co/VVZTcF1mPx #MGMHospital #MGMHealthcare #mgm
SPB Charan on father SP Balasubrahmanyam’s health treatment cost