தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மத்தியில் ஆளும் பாஜக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள் ‘டெல்லி சலோ’/போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றுடன், அந்த போராட்டம் 6 வது நாள்.
இதனால், இந்தியாவின் தலைநகர் டெல்லியே ஸ்தம்பித்து உள்ளது.
டெல்லி போலீசார் தண்ணீரைப் பீச்சி அடித்தும், புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தை கலைக்க முயன்றனர்.
இதனால், விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
நம் நாட்டில் 500 க்கும் மேற்பட்ட விவசாய குழுக்கள் இருக்கின்றன. ஆனால், பேச்சுவார்த்தைக்கு 32 குழுக்களை மட்டுமே அரசு அழைத்து உள்ளது.
அனைத்து குழுக்களும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடப்படும் வரையில், நாங்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளப் போவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில்.. இது வரை அமைதி காத்து வந்த சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, மத்திய அரசை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
“தேர்தல் சமயத்தில் விவசாயிகளிடம் வாக்கு கேட்கும் பாஜக அரசு, விவசாயிகளின் போராட்டம் நடந்தும் ஏன் விவாதிக்கக்கூடாது.
போராட்டம் நடத்தும் விவசாயிகள் பாகிஸ்தானிலிருந்து வந்தார்களா?”
இந்தப் போராட்டத்தில் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் ஆனாலும் விவசாயிகள் பொறுமையுடன் நிதானத்துடன் போராடுகின்றனர்.
விவசாயப் போராட்டத்தில் வன்முறை வெடித்தால் அது யார் பொறுப்பு?
“டெல்லி சலோ” போராட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்” என அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.
Social activist Anna Hazare condemns Central govt