முதன் முறையாக சிவகுமார்-சூர்யா-கார்த்தி இணைந்து நடிக்கும் படம்

முதன் முறையாக சிவகுமார்-சூர்யா-கார்த்தி இணைந்து நடிக்கும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakumar Suriya Karthi join hands together for new movieசூர்யாவுக்கும் சரி கார்த்திக்கும் சரி தமிழ் சினிமாவில் முக்கிய இடமுண்டு.

இவரது படங்களுக்கு தமிழகத்தை போன்று ஆந்திராவிலும் அமோக வரவேற்புள்ளது.

ஆனால் அண்ணன் தம்பியான இவர்கள் இருவரும் இதுவரை இணைந்து நடிக்கவில்லை.

நல்ல கதை அமைந்தால் இணைந்து நடிப்போம் என்று கூறியிருந்தனர்.

தற்போது அந்த வாய்ப்பு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிஜ வாழ்க்கைப் போல இந்த படத்திலும் அண்ணன் தம்பியாகவே அவர்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் முக்கிய கேரக்டரில் சிவகுமார் நடிக்கவுள்ளாராம்.

இப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவுள்ளது.

Sivakumar Suriya Karthi join hands together for new movie

ஓவியாவுடன் டூயட் பாடும் ‘பனங்காட்டு நரி’ சினேகன்

ஓவியாவுடன் டூயட் பாடும் ‘பனங்காட்டு நரி’ சினேகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss fame Oviya and Lyricist Snehan teams up for new projectடிவியில் இருந்து சினிமாவுக்கு செல்லவே எல்லாரும் விரும்புவார்கள்.

சினிமாவிலிருந்து டிவிக்கு சென்றால் நம் மதிப்பு குறைந்துவிடும் என்ற எண்ணிய பல நடிகர் நடிகைகள் உண்டு.

ஆனால் இப்போது சினிமாவுக்கு நிகராக டிவி நடிகர்களுக்கும் பல ரசிகர்கள் உருவாகி வருகின்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு கமல் வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி டிவியில் ஒளிப்பரப்பான போது சினிமா தியேட்டர்களில் வசூல் குறைந்து விட்டது என நடிகர் மன்சூர் அலிகானே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அந்தளவு புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தற்போது சினிமாவில் பிஸியாகி வருகின்றனர்.

இதில் கவிஞர் சினேகன் அவர்கள் பனங்காட்டு நரி என்ற படத்தில் நடிக்கிறார். இதில் ஹீரோயினாக ஓவியா கமிட் ஆகியுள்ளாராம்.

விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss fame Oviya and Lyricist Snehan teams up for new project

ரஜினியை ஆன்மிக பெரியாராக மாற்றி ரசிகர்கள் போஸ்டர்

ரஜினியை ஆன்மிக பெரியாராக மாற்றி ரசிகர்கள் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini turns Aanmiga Periyar Fans design Flex Bannersதிராவிடத்தில் திளைத்து வரும் தமிழக அரசியலில் முதன்முறையாக ஆன்மிக அரசியலை கொண்டு வரவுள்ளார் ரஜினிகாந்த்.

இனிமேதான் நீங்க ஆன்மிக அரசியலை பாப்பீங்க என அதிரடியாக அண்மையில் ஒரு பொதுநிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

இந்நிலையில் இவரது ரசிகர்கள் ஆன்மீக பெரியாரே என்ற வாசகங்களை வடிவமைத்து பேனர் வைத்துள்ளனர்.

அந்த பேனரில் ரஜினிக்கும் பெரியார் கெட்டப் டிசைன் செய்துள்ளனர்.

கடவுள் பற்றிய மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடிய பகுத்தறிவாளர் பெரியார்.

தற்போது அவரது உருவத்தில் இப்படியொரு போஸ்டரை ரசிகர்கள் அடித்துள்ளதால் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rajini turns Aanmiga Periyar Fans design Flex Banners

சிம்பு படத்தை இயக்கும் விஜய்சேதுபதி பட இயக்குனர்

சிம்பு படத்தை இயக்கும் விஜய்சேதுபதி பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rekka fame director Rathina Siva teams up with Simbuமுதன்முறையாக மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் சிம்பு.

செக்கச் சிவந்த வானம் என்ற தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, அருண்விஜய், விஜய்சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை முடித்துவிட்டு விஜய்சேதுபதியை வைத்து றெக்க படத்தை இயக்கிய ரத்தினசிவா இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இது தொடர்பாக சிம்புவை டைரக்டர் சந்தித்து பேசியதாகவும் அவரும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு மொட்ட சிவா கெட்ட சிவா பட புகழ் அம்ரீஷ் இசையமைப்பார் எனவும் கூறப்படுகிறது.

Rekka fame director Rathina Siva teams up with Simbu

முதல்வர் ரஜினி என்ற மந்திரச்சொல் அதிர்வலையை உண்டாக்கும் : தமிழருவி மணியன்

முதல்வர் ரஜினி என்ற மந்திரச்சொல் அதிர்வலையை உண்டாக்கும் : தமிழருவி மணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

CM Rajini word will become magic word It will create Vibes says Tamilaruvi Manianவேலூர் ஒன்றியம் கேவி குப்பம் நகரில் பொதுமக்கள் பூங்கா, மகாத்மா காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தம் திறப்பு விழா நடைபெற்றது.

ரஜினி மக்கள் மன்ற வேலூர் மாவட்ட நிர்வாகி கேவி பாஸ்கர் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விழாவில் தமிழருவி மணியன் பேசுகையில்…

“ரஜினிகாந்தின் ரசிகர்கள் சேர்ந்து மகாத்மா காந்தியின் சிலையை புனரமைப்பார்கள் என்று யாராவது ஒரு ஆண்டுக்கு முன்பாக சொல்லியிருந்தால் நான் நிச்சயம் நம்பியிருக்க மாட்டேன்.

ரஜினி ரசிகர்களுக்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம்? இந்த மண்ணில் இருக்கிற மக்கள் காந்திய வழியில் நடப்பார்கள் என்ற நம்பிக்கை முற்றாகத் தகர்ந்துவிட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் என்று நீங்கள் கொண்டாடுகிற ரஜினியின் ரசிகரான பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் காந்தி சிலையைப் புனரமைத்திருப்பதை நான் உள்ளம் திறந்து பாராட்டுகிறேன்

காந்திக்கும் ரஜினிகாந்துக்கும் ஒற்றுமை இருக்கிறது. இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள்.

தனக்காக எதையும் செய்யத் தயாராக உள்ள உங்களையெல்லாம் இந்த மண்ணை நேசிப்பவர்களாக மாற்றிய ரசவாதத்தைச் செய்திருக்கிறார் ரஜினி.
ரஜினி ரசிகர்களான உங்களை, இப்போது மக்கள் நலன் சார்ந்த பாதுகாவலர்களாக அவர் மாற்றியிருக்கிறார்.

நீங்கள்தான் நாளை மாற்று அரசியல் மலரக்கூடிய சூழலை உருவாக்கப் போகிறீர்கள். அந்த மனிதனை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வராக அமர்த்தி தமிழகத்தில் நல்லாட்சி மலரக்கூடிய சூழலை உருவாக்கப் போகிறீர்கள்.

காந்திக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்? உடனே இதை சிலர் ஏளனம் பேசுவார்கள். ஏறுகிற மேடைக்கு ஏற்றார்போல் கச்சேரி வாசிக்கும் கலைஞன் நானில்லை. என் நெஞ்சில் பட்டதை நேர்ப்படப் பேசுவதுதான் வழக்கம்.

இந்த 50 ஆண்டு கால அரசியல் வாழ்வில் ஒரு செப்புக்காசைக் கூட அறத்துக்கு மாறாக நான் பெற்றவனுமில்லை, நெறிக்கு மாறாக நான் வாழ்ந்தவனும் இல்லை. ஆகவே மனம் கனிந்து சொல்கிறேன்.

ரஜினிகாந்த் தன்னளவில் உண்மையாக இருக்கும் மனிதன். இந்த சமூகத்தை, மக்களை உண்மையாக நேசிக்கும், அன்பு செலுத்தும் மாமனிதன். தான் வாழக்கூடிய இந்த மண் முழுவதையும் அன்பால் ஆரத் தழுவி அரவணைத்துக் கொள்ள வேண்டும் எனத் துடித்துத் தவமிருக்கும் மனிதன் ரஜினிகாந்த்.

உண்மையாக இருப்பதும், அன்பாக இருப்பதும்தான் காந்தியம் என்றால், ரஜினிகாந்த் உண்மையான காந்தியவாதி. அவரது ரசிகர்களான நீங்களும் காந்தியவாதிகளே. முடிந்துவிட்ட வரலாறாக காந்தியத்தை நினைத்து நான் கண்ணீர் விட்டிருக்கிறேன்.

ஆனால் இன்று அந்த காந்தியத்துக்கு உங்களால் புத்துயிர் கிடைத்திருப்பதைப் பார்க்கிற போது நெகிழ்ச்சியாக உள்ளது. ரஜினிகாந்தின் வாசகம் உண்மை, உழைப்பு, உயர்வு. உண்மையாக உழைத்தால் உயர்வு வரும்.

ரஜினிகாந்த்தை முதல் முறையாக நான் சந்தித்தபோது, தமிழகத்தின் சூப்பர் ஸ்டாரைச் சந்திக்கப் போகிறேன் என்ற நினைப்புடன்தான் போன்ற பல. அடுத்த முறை சந்தித்த போது, அவரை மிகச் சிறந்த மனிதனாகப் பார்த்தேன். அடுத்து அடுத்து அவரை நான் சந்தித்துக் கொண்டே, பேசிக் கொண்டே இருக்கிறேன்.

என் முதல் சந்திப்பில் அவர் நடிகர் என்கிற மாயை மறைந்தது. அவரை அடுத்தடுத்து சந்தித்த போது அவர் நடிகர் என்ற நினைப்பே எனக்கு இல்லாமல் போனது.

மலேசிய கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, உங்கள் லட்சியம் என்ன என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் சொன்னார்: “ஒரு நடிகனாக என் வாழ்வைத் தொடங்கினேன். நடிகனாகவே முடிந்துவிடுவது என் வாழ்வின் லட்சியம் அல்ல,” என்றார்.

இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அது ஆறு. எவ்வளவு சுத்தமான தண்ணீராக இருந்தாலும், அது ஓரிடத்தில் தங்கிவிட்டால் அது சாக்கடையாகிவிடும். எனவே மனிதர்கள் தேங்கிவிடக் கூடாது. அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்றுகொண்டிருக்க வேண்டும்

ஒரு நடிகனாக மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கக் கூடிய மனிதனுக்கு அதுதான் உச்சம். அதுவே போதும்.

ஆனால் அதற்கு அடுத்த கட்டத்தை நோக்கி நடக்க வேண்டும் என்று நினைக்கிற போதுதான், சூப்பர் ஸ்டார் என்கிற இடத்திலே இருந்து அடுத்த இடம் நோக்கி நகர்கிறார்.

அதுதான் தமிழகத்தின் மக்களுக்கு நல்வாழ்வு தருகிற முதல்வர் என்கிற இடம். அந்த இடத்தை நோக்கி அவர் நடக்க வேண்டும், அவர் அப்படி நடக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வாழ்க’ என்று சொல்வதை நிறுத்திவிட்டு, ‘தமிழக முதல்வர் ரஜினிகாந்த் வாழ்க’ என்று சொல்லிப் பழகுங்கள்.

ஒவ்வொரு சொல்லும் ஒரு மந்திரம். சொல்லற்ற ஓசையும் கூட ஒரு மந்திரம். வட மொழி மந்திரங்களைக் கேட்டால் நமக்கு அர்த்தமே புரியாது. வெறும் ஓசையாகத்தான் இருக்கும்.

ஆனால் அந்த ஓசையைத் தொடர்ந்து உச்சரித்தால் மந்திரமாக மாறும். அந்த மந்திரமே அதிர்வலைகளை உருவாக்கும்.

அந்த அதிர்வலைகள் மாபெரும் மாற்றத்தையே உருவாக்கும். தமிழகம் முழுவதும் எந்தத் திசை நோக்கித் திரும்பினாலும் ‘ரஜினிகாந்த் முதல்வர்’ என்று சொல்லிக் கொண்டே இருங்கள்.

அதுவே மந்திரச் சொல்லாக, அதிர்வலைகளாக மாறும். தேர்தலில் அவர் வென்று மக்கள் ஆதரவுடன் நல்லாட்சி அமைக்க உதவும்.” என்றார்.

CM Rajini word will become magic word It will create Vibes says Tamilaruvi Manian

rajini fans meeting jeeva

காலா உடன் களம் காண காத்திருக்கும் 22 சூப்பர் ஹீரோக்கள்

காலா உடன் களம் காண காத்திருக்கும் 22 சூப்பர் ஹீரோக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala to clash with 22 heros of Avengers Infinity Warரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் ஏப்ரல் 27ல் வெளியாகவுள்ளது. இந்தியளவில் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் என்ற ஹாலிவுட் திரைப்படமும் இந்த படத்துடன் மோத உள்ளது.

அதுப்பற்றிய விவரம் வருமாறு….

மார்வல் காமிக்ஸ் அனைத்து தலைமுறை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை கவர்ந்த தயாரிப்பு நிறுவனம்.

மார்வல் காமிக்ஸ் மூலம் திரையில் வந்து நம்மை கவர்ந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களுக்கும் இந்த பூமியில் வாழும் அனைத்து மக்களின் மனத்திலும் தனி இடம் உண்டு.

அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் இணைத்து நம்மை மகிழ்விக்கும் வகையிலான படைப்பாக கொடுப்பதில் அவேஞ்சர்ஸ்க்கு முக்கிய பங்கு உண்டு.

ஒவ்வொரு வெளிவந்த அவேஞ்சர்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் முன்னர் அவேஞ்சர்ஸ் (2012) , இதன் இரண்டாம் பாகம் அவேஞ்சர்ஸ் அல்ட்ரான் ( 2015) ஆகியவை வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.

தற்போது இதன் மூன்றாம் பாகம் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்) 22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு (தாநோஸ்) மோதும் வகையில் தற்போது வெளியாகவுள்ளது.

படத்தில் இடம்பெற்றுள்ள எல்லா கதாபாத்திரங்களுக்கும் இங்கே பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வாரில் மிகப்பெரிய ஹாலிவுட் நடிகர் பட்டாளமே உள்ளது

ராபர்ட் டவுனி ஜூனியர் டோனி ஸ்டார்க் / ஐயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

க்ரிஸ் ஹேம்ஸ்வார்த் தார் என்ற கதாபாத்திரத்திலும் மார்க் ரூபலோ ப்ருஸ் பண்ணேர் / ஹல்க் கதாபாத்திரத்திலும் க்ரிஸ் ஈவனஸ் ஸ்டீவ் ரோஜெர்ஸ் கதாபாத்திரத்திலும் ஸ்கார்லெட் ஜோகன்சன் நடாஷா / ப்ளாக் விடோவ் கதாபாத்திரத்திலும் தாம் ஹாலேன்ட் பீட்டர் பார்கர் / ஸ்பைடர் மேனாகவும்
சாட்விக் போஸ்மன் T ‘சல்லா / ப்ளாக் பாந்தராகவும் பவுல் பேட்டனி விசனாகவும் எலிசபத் ஒல்சென் வண்டா / ஸ்கார்லெட் விடசாகவும்
செபஸ்டின் ஸ்டான் பக்கி பர்ன்ஸ் / வைட் வொல்பாகவும்
டாம் ஹிட்டில்சன் லோகியாகவும் நடித்துள்ளனர்.

இதில் பெரும்பாலும் மார்வல் உலகில் எல்லோரும் ஏற்று நடித்த தங்களுடைய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துவருகிறார்கள்.

படத்தின் தெலுங்கு வெர்ஷனில் இடம் பெறும் தாநோஸ் கதாபாத்திரத்துக்கு தெலுங்கின் முன்னணி நடிகர் ரானா டகுபாதி டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூசோ சகோதர்கள் – அந்தோணி ரூசோ மற்றும் ஜோ ரூசோ இப்படத்தை இயக்கியுள்ளனர். ஆலன் சில்வர்ஸ்திரி இசையில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு ட்ரென்ட் ஒப்லேச்.

அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதி இந்தியாவில் நான்கு மொழிகளில் (தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்) வெளியாகிறது.

Kaala to clash with 22 heros of Avengers Infinity War

More Articles
Follows