தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படம் போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்த படம் கடந்தாண்டு வெளியானபோதே இப்பட கதை தன்னுடையது எனக்கூறி வழக்கு தொடர்ந்தார் உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு.
இதை விசாரித்த தென்னிந்திய எழுத்தாளர் சங்கத் தலைவரான பாக்யராஜ், இரண்டு கதைகளிலும் ஒற்றுமை இருப்பதாகவும், கதை திருட்டு உண்மைதான் என தெரிவித்தார்.
இதையனை அடுத்து கதை திருட்டு தொடர்பாக போஸ்கோ பிரபு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வேறு மொழிகளில் வெளியிடவும், டிஜிட்டல், சாட்டிலைட், மொழிமாற்றம் செய்து வெளியிடவும் தடைவிதித்து உத்தரவிட்டு இருந்தது.
ஆனாலும் கடந்த மார்ச் 20-ம் தேதி இத்திரைப்படம் தெலுங்கில் சக்தி என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிட உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது.
ஆனால் கொரோனா ஊரடங்கு உத்தரவு படம் தெலுங்கில் ரிலீசாகவில்லை.
இதனிடையில் ஹீரோ திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடப்பட்டது.
எனவே டிஜிட்டல் தளத்தில் வெளியிட இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை போஸ்கோ பிரபு அமேசான் பிரைம் தளத்துக்கு அனுப்பவே தற்போது படத்தை தங்கள் இணையத்தளத்தில் இருந்து நீக்கியுள்ளது அமேசான்.
Sivakarthikeyans Hero removed from Amazon Prime