டிஸ்னியின் ‘ஃபோரஸன் 2’ படத்துக்காக பின்னணி குரல் கொடுத்ததுடன் பாடலையும் பாடிய ஸ்ருதி ஹாசன்

டிஸ்னியின் ‘ஃபோரஸன் 2’ படத்துக்காக பின்னணி குரல் கொடுத்ததுடன் பாடலையும் பாடிய ஸ்ருதி ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shruti Haasanமிகப் பெரும் பொருட்செலவில் தயாரான டிஸ்னினியின் ‘ஃபோரஸன் 2’ திரைப்படம் இந்திய ரசிகர்களுக்கு மந்திரம் போன்ற மகத்தான அனுபவத்தைத் தர இருக்கிறது. புதிய தலைமுறை போராளியாக திரையில் உருவகப்படுத்தப்பட்ட இளவரசி எலிசாவை உண்மையில் பிரதிபலிக்கும் வகையில் தனித்துவம் மிக்க ஒருவரை படத்தில் பங்கு கொள்ள வைக்க தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவில் தேர்வானவர்தான் ஸ்ருதி ஹாசன். ஆம்… பெரிதும் எதிர்பார்க்கப்படும் துணிவு மிக்க எலிசாவுக்கு தமிழ்ப் பதிப்பில், ஸ்ருதி ஹாசன் குரல் கொடுத்து உயிரூட்டியிருக்கிறார். அது மட்டுமின்றி, மிகச் சிறந்த குரல் வளம் மிக்க ஸ்ருதி ஹாசன் மூன்று பாடல்களையும் பாடியிருக்கிறார். இன் டு தி அன்னோன்… என்ற ஒரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்கள், பாடகியாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் தங்கள் அபிமான நடிகையின் குரலை ரசிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இது குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன், “ஃபோரஸன் திரைப்படத்தில் எல்ஸா மற்றும் அன்னா சகோதரிகளுக்கிடையிலான பந்தம் உள்ளத்தை உருக்கும் வகையிலானது. எல்ஸா தன் இளைய சகோதரி அன்னாமீது கொண்ட பேரன்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் நானும் என் இளைய சகோதரிமீது அந்த அளவுக்கு பாசம் கொணடிருக்கிறேன். ஒவ்வொரு பெண்னின் ரோல் மாடல் எல்ஸா என்பதும், நான் அந்தப் பாத்திரத்துக்கு குரல் கொடுத்து பாடியிருப்பதும் என்னால் மறக்க முடியாத அனுபவம். பரபரப்பான இந்த அனிமேஷன் திரைப்படத்தில் பாடல்கள், படத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைவதுடன் எனது தமிழ்ப்பட ரசிகர்களையும் வெகுவாகக் கவரும்” என்றார்.

தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவிருக்கும் படம்தான் ‘ஃபோரஸன் 2’. புதிரான கதைக்கரு, மறக்க முடியாத கதாபாத்திரங்கள், மற்றும் எல்ஸா -அன்னா ஆகியோரின் சாகசங்களால் ஈர்க்கப்படுவார்கள் என்பது திண்ணம்.

இது மட்டுமின்றி இன்னும் சில சிறப்பம்சங்களும் இப்படத்துக்கு உண்டு ‘.ஃபோரஸன் 2’ படத்தின் இந்திப் பதிப்புக்காக பிரியங்கா சோப்ரா மற்றும் ப்ரனிதி சோப்ரா குரல் கொடுக்க, தெலுங்கு பதிப்புக்காக நித்யா மேனன் குரல் கொடுத்திருக்கிறார். ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நவம்பர் 22ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ்

ஃபோரஸன் 2

ஆங்கிலக் குரல் கலைஞர்கள்: கிறிஸ்டன் பெல், ஜோனாதன் க்ரோப். மற்றும் ஜோஸ் காட்

இயக்கம்: கிறிஸ் பக், ஜெனிஃபர் லீ
தயாரிப்பு: பீட்டர் டெல் வெச்சோ
இந்திய வெளியீடு 22 நவம்பர் 2019!

ஃபோரஸன் 2 படம் குறித்து….

எல்ஸா ஏன் மந்திர சக்தியுடன் பிறந்தாள்? இதற்கான விடை தேடும் முயற்சி, அவளது ராஜ்ஜியத்தை பயமுறுத்துகிறது. அன்னா, கிறிஸ்டாப், ஒல்ப் மற்றும் சுவெனுடன் பிரசித்தமான இந்த ஆபத்து மிக்க பயணத்தைத் துவக்குகிறாள் எல்ஸா. ‘ஃபோரஸன்’ படத்தில் தனது பலம் அனைத்தும் உலகுக்கு அதிகம் என்று பயப்படும் அன்னா, ‘ஃபோரஸன் 2’ படத்தில் போதும் என்று நினைக்கிறாள்.

ஆஸ்கர் விருது வென்ற ஜெனிஃபர் லீ கிறிஸ் பக் இயக்கத்தில், பீட்டர் டெல் வெச்சோ தயாரிப்பில் உருவாகியிருக்கிறது ‘ஃபோரஸன் 2’. கிறிஸ்டன் ஆன்டர்ஸன் லோபஸ் மற்றும் ராபர்ட் லோபஸ் எழுதிய பாடல்களுக்கு இன்டினா மெல்ஸல், கிறிஸ்டன் பெல், ஜொனாதன் கிராஃப் மற்றும் ஜோஸ் காட் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர்.

டெயில் பீஸ்

2013ஆம் ஆண்டு வெளியான ‘ஃபோரஸன்’ திரைப்படம் உலக அளவில் அனிமேஷன் படங்களிலேயே மிக அதிக வசூல் சாதனை புரிந்த படம் என்பது குறிப்பிடத் தக்கது.

2013ஆம் ஆண்டு மிகச் சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதையும் ‘ஃபோரஸன்’ பெற்றது. மேலும் இப்படத்தில் இடம் பெற்ற லெட் இட் கோ பாடல் மற்றும் இசைக்காக ஆன்டர்ஸன் லோபஸ் மற்றும் ராபர்ட் லோபஸ் ஆகியோரும் ஆஸ்கர் விருது வென்றார்கள்.

BREAKING தமிழகத்தில் வெற்றிடம் இருக்கு; ரஜினி மீண்டும் பரபரப்பு பேச்சு

BREAKING தமிழகத்தில் வெற்றிடம் இருக்கு; ரஜினி மீண்டும் பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini talks about his politics entry and next moviesநடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டருகே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதன் பின்னர் இன்று தன் வீட்டருகே செய்தியாளர்களை மீண்டும் சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது… ’நான் எப்போதும் வெளிப்படையாகப் பேசுபவன்.

நான் பாஜகவில் சேரப்போவதாக சொல்வார்கள். முடிவெடுக்க வேண்டியது நான்தான். அதற்காக, அவர்கள் என்னை நம்பிதான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

கட்சி ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன். தமிழகத்தில் சரியான, ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது.

அயோத்தி வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் மக்கள் அமைதிகாக்க வேண்டும். மிசாவில் ஸ்டாலின் கைது பற்றி கேட்கிறீர்கள். அதுபற்றி எனக்குத் தெரியாது. தெரியாதது பற்றி கருத்துச் சொல்ல முடியாது’’ என பேசினார்.

Rajini talks about his politics entry and next movies

BREAKING ரஜினி பட வெற்றிகளில் எனக்கு பங்கிருக்கு… கமல் ஓபன் டாக்

BREAKING ரஜினி பட வெற்றிகளில் எனக்கு பங்கிருக்கு… கமல் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I have part in Rajinis success says Kamal at Rajkamal films eventநேற்று நடிகர் கமல் தன் 65வது பிறந்தநாளை கொண்டாடினார். அதன் தொடர்சியாக இன்று கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவன புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

இதில் மறைந்த இயக்குனர் கே. பாலசந்த்தர் அவர்களின் சிலை திறப்பு நடைபெற்றது. மேலும் கே.பி.யின் நெருங்கிய நண்பர் அனந்து அவர்களின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய விழாவில் ரஜினிகாந்த், வைரமுத்து, தனஞ்செயன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

இறுதியாக கமல்ஹாசன் பேசினார். அவர் பேசியதாவது…

எங்கள் ஆரம்பகாலங்களில் நானும் ரஜினியும் நிறைய பேசிக் கொள்வோம். எங்கள் பேச்சை கேட்டால் எங்கள் ரசிகர்களே ஆச்சரியப்படுவார்கள்.

ரசிகர்கள் அடித்துக் கொண்டாலும் நாங்கள் நட்பாக இருப்போம். நிச்சயம் இரண்டு அணிகள் இருந்தால்தான் மேட்ச் நன்றாக இருக்கும்.

ஒரு சமயத்தில் ரஜினி சினிமாவை விட்டு விலக இருந்தார். நான்தான் அவரை தொடர்ந்து நடிக்க சொன்னேன்.
நீங்க போய்ட்டால் என்னையும் போக சொல்லிடுவாங்க. நீங்க நடிக்கனும்.

ரஜினி நிறைய வெற்றி படங்களை கொடுத்துள்ளார். எனவே அதில் என் பங்கும் இருக்கிறது.

சினிமாவில் ரஜினியின் 40 வருட சாதனைக்கு ஐகான் விருது கொடுக்கவுள்ளனர். அவர் சினிமாவில் நடிக்க வந்த முதல் வருடமே ஐகான் ஆகிவிட்டார். எல்லாருக்கும் அந்த வாய்ப்பு அமையாது.

பராசக்தி என்ற முதல் படத்தில் சிவாஜிக்கு அது அமைந்துவிட்டது.

விரைவில் எங்கள் நிறுவனத்தின் 50வது படம் குறித்த அறிவிப்பு இருக்கும் “ என கமல் பேசினார்.

I have part in Rajinis success says Kamal at Rajkamal films event

BREAKING திருவள்ளுவரும் மாட்ட மாட்டார்; நானும் மாட்ட மாட்டேன்.. ரஜினி நெத்தியடி

BREAKING திருவள்ளுவரும் மாட்ட மாட்டார்; நானும் மாட்ட மாட்டேன்.. ரஜினி நெத்தியடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini press meet regarding Thiruvalluvar and BJP Controversyரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது…

’திருவள்ளூவர் ஞானி, சித்தர். அவர் நாத்திகரல்ல, ஆத்திகர். கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பாஜக, அவங்க டிவிட்டர்ல தனிப்பட்ட முறையில அதுபற்றி போட்டாங்க. அது அவங்க விருப்பம்.

நாட்டில் இவ்வளவு பிரச்னை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு அதை, இவ்வளவு பெரிய விஷயமாக்கி, சர்ச்சையாக்கியது சில்லியாக இருக்கிறது.

என்னை, பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்தது பேசினார். பாஜகவில் இணைய சொல்லி எனக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை.

எனக்கு, பாஜக சாயம் பூச முயற்சி நடக்கிறது. திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூசறாங்க. திருவள்ளுவரும் மாட்ட மாட்டார்.. நானும் மாட்ட மாட்டேன். எனக்கு ஐகான் விருது கொடுத்திருப்பதற்கு நன்றி.’ என்று பேசினார்.

Rajini press meet regarding Thiruvalluvar and BJP Controversy

BREAKING கமலின் கடைசி காலங்கள் பற்றி ரஜினி பேச்சு

BREAKING கமலின் கடைசி காலங்கள் பற்றி ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini talks about Kamals last period in life at KB Statue inauguration சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது.

அப்போது மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் சிலையை ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து திறந்து வைத்தனர்.

இவ்விழாவில் ரஜினி பேசும்போது…

‘கமலின் கலையுலக தகப்பனார், என்னுடைய குரு கே.பாலசந்தர் சிலையை ராஜ்கமல் அலுவலகத்தில் திறந்து வைத்திருக்கிறார் கமல்.

கமல் அரசியலுக்கு வந்தாலும் தாய் வீடான சினிமாவை விடமாட்டார். கமலுக்கு கலை உயிர்.

கமல் தன் கடைசி காலங்களில் அவர் சினிமாவில் நடிக்கவிட்டாலும் இந்த அலுவலகத்தில் வந்து இருப்பார். அவர் வேறு துறையில் (அரசியல்) இருந்தாலும் இங்கு வந்து அமருவார்.

ராஜ்கமல் தயாரிப்பில் எனக்கு ரொம்ப பிடித்த படம் அபூர்வ சகோதரர்கள். இந்த படத்தை இரவு 2 மணிக்கு பார்த்து முடித்து கமல் வீட்டிற்கு சென்றேன். அப்போது அவரை பார்க்க முடியாது. உறங்குகிறார்கள் என்றார்கள்.

அவரை எழுப்பி கைகொடுத்து வாழ்த்தினேன். அவர் என்னை விட சின்ன வயது. இல்லை என்றால் அவர் காலில் விழுந்துருப்பேன்.

தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே அப்படியொரு முயற்சியை செய்திருந்தார் கமல்.

கமல் தயாரித்த அடுத்த படமான தேவர் மகன் ஒரு காவியம். கமல் எவ்வளவு சிந்தனை செய்து அந்த படத்தை எடுத்திருப்பார்.

நான் நிறைய சினிமா பார்ப்பேன். எனக்கு போர் அடித்தால் அடிக்கடி காட்பாதர், திருவிளையாடல், ஹேராம் படங்களை பார்ப்பேன். இதுவரை ஹேராம் படத்தை 30, 40 முறை பார்த்திருப்பேன்.

கே.பாலசந்தர் சிலையை திறந்தவுடன் அவருடன் நான் இருந்த ஞாபகங்கள் கண்முன் வந்து நிற்கிறது.

என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய கே பாலசந்தர் ஒன்றை சொன்னார். தமிழ் மட்டும் கற்றுக்கொள். நான் உன்னை எங்கு கொண்டுபோய் உட்கார வைக்கிறேன் பார் என்றார்.

அவர் தமிழ் ரசிகர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை அது.

கே.பி.க்கு மிகவும் பிடித்த குழந்தை கமல். அவர் மீது அபார பிரியம், தூரத்தில் இருந்துக் கொண்டே கமலை ரசித்துக் கொண்டே இருப்பார்’ என்றார்.

Rajini talks about Kamals last period in life at KB Statue inauguration

பிரசவ நேரத்தில் நிறுத்தி விட்டனர்; நடிகர் சங்க கட்டிடம் பற்றி நாசர்

பிரசவ நேரத்தில் நிறுத்தி விட்டனர்; நடிகர் சங்க கட்டிடம் பற்றி நாசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nadigar sangam members interaction with Press and Mediaநடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விபரம் வருமாறு:-

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த தேர்தல் முதல் எங்கள் அணி சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை நாங்கள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

இம்முறை தேர்தலுக்கு பல பிரச்சனைகள் வந்த போதிலும் அவற்றை சட்ட ரீதியாகவே சந்தித்தோம். இப்போது சங்கத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிப்போம். அது எங்கள் கடமை.

ஆனால், எங்கள் மீது எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் வைக்க முடியாத நிலையில் இதனை ஜனநாயக படுகொலையாகவே பார்க்கிறோம். ஆனால், அனைத்தையும் சட்ட ரீதியாகவே சந்திப்போம் என்று உறுதி கூறுகிறோம்.

அதிகாரிக்கு ஒத்துழைப்பு அளிக்கிறேன் என்கிறீர்கள் அப்படியானால் இதனை ஏற்றுக்கொள்கிறீர்களா ?

இல்லை. ஆனால் அவர் இன்று பொறுப்பேற்று கொண்டார் என்கிற போது அவருக்கு ஒத்துழைத்து கணக்கை ஒப்படைப்பது எங்களது கடமை. ஆனால் இதனை சட்டப்படி நாங்கள் எதிர்கொள்வோம்.

விஷால் அரசியலில் ஈடுபட்டதால் தான் இந்த பிரச்சனை நடப்பதாக சொல்வது பற்றி?

இது முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையாலானது. அவர் மீது குற்றமே சொல்லவில்லை எனும்போது ஏதாவது ஆதாரத்தின் படி குற்றம் சாட்டினால் நடவடிக்கை எடுக்கலாம் அப்படி எதுவுமே இல்லையே.

அமைச்சர்களை சந்தித்தீர்களா ?

சந்தித்தோம். ஆனால், அது பற்றி வெளியிட முடியாது. பிரச்சனை என்னவென்றால் கடந்த ஏப்ரல் மாதம் வரை பென்சன் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இப்போது வழக்கு நடப்பதால் கட்டடம் கட்டுவது தொடர்பாக எதுவும் நடக்க வாய்ப்பில்லை.

அடுத்த உறுப்பினர்கள் வந்து பொறுப்பேற்றால் தான் எல்லாம் நடக்க முடியும். ஆனால், நடிகர் சங்கத்தில் உதவி பெறுபவர்கள் சிலர் வழக்கு தொடர்கிறார்கள். அவர்களுக்கு ஆஜராகும் வக்கீல்கள் லட்சங்களில் ஃபீஸ் வாங்குபவர்கள்.

இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். நியாயமான தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். அதற்கு சட்டப்படி போராடுவோம் என்றார் கார்த்தி.

அரசு சங்கத்திற்கு எதிராக இருக்கிறதா?

அதனை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

சிறப்பு அதிகாரியால் என்ன பிரச்சனை?

முன்னால் முதல்வர்கள் பலரும் பங்கு கொண்ட அமைப்பு தான் இந்த நடிகர் சங்கம். நாங்கள் வந்த பிறகு கடனை அடைத்திருக்கிறோம். கட்டடம் கிட்டதட்ட முடித்திருக்கிறோம். ஆனால், பிரசவ நேரத்தில் இதனை நிறுத்தி வைத்துள்ளார்கள்.

அரசு ஏன் சங்கத்திற்கு எதிராக இருப்பதாக நினைக்கிறீர்கள்?

அரசு அப்படி இல்லை என்றே நம்புகிறோம். ஆனால் இப்போது நடக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் சட்ட ரீதியாக சந்தித்து வெல்ல முடியுமென்று நம்புகிறோம். பத்திரிகைகளை நம்புகிறோம்.

கடைசியாக பூச்சி முருகன் அவர்கள் இப்போது நடந்து கொண்டிருப்பது ஜனநாயக படுகொலை இதனை பத்திரிகையாளர்கள் தான் தட்டிக்கேட்க வேண்டும் என்றார்.

Nadigar sangam members interaction with Press and Media

More Articles
Follows