தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன.
தற்போது ஊரடங்களில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோயில்கள், வணிக நிறுவனங்கள் தியேட்டர்கள் உள்ளிட்டவைகள் திறந்தாலும் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
இதனையடுத்து 9,10,11,12-ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 16-ஆம் தேதி முதல் (தீபாவளிக்கு பின்) பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பியதும், பெற்றோரின் கருத்துக்களை கேட்ட பின், பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கருத்து கேட்பு கூட்டம், தமிழகம் முழுவதும், 9ம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல கல்லூரிகள் திறப்பையும் ஒத்திவைத்துள்ளது.
ஆனால் முதுநிலை இறுதியாண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு டிசம்பர் 2-ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Schools and colleges not to reopen in TN on 16th november