பாவேந்தர் பாரதிதாசனின் மகன் தமிழ்மாமணி மன்னர் மன்னன் காலமானார்!

பாவேந்தர் பாரதிதாசனின் மகன் தமிழ்மாமணி மன்னர் மன்னன் காலமானார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mannar mannan*புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மைந்தரும் முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப்போராட்ட வீரருமான தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி அவர்கள் இன்று 06-07-2020 பிற்பகல் புதுச்சேரியில் காலமானார்.*

அவருக்கு வயது 92 . கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றி இருந்தார்.

புதுச்சேரி வானொலி நிலையத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய மன்னர் மன்னன் ஏறத்தாழ 50 நூல்கள் எழுதியுள்ளார்.

பல அமைப்புகளில் முக்கிய பொறுப்பில் இருந்தார். புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்து அதற்கு சொந்தக் கட்டிடம் கட்டித்தந்தார்.

தமிழக அரசின் திரு.வி.க விருது கலைமாமணி விருது புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.

மிகச் சிறந்த பேச்சாளர் எழுத்தாளர் கவிஞர் . பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளியிட்டார்.

இந்திய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டதியாகி. மொழிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார்.

தமிழறிஞர்கள் பலருடன் நெருங்கிப் பழகிய இவர் காமராசர் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி முன்னாள் முதல்வர் எம்.ஜி ‌ஆர். ஜெயலலிதா தலைவர்கள் நெடுஞ்செழியன் , அன்பழகன் போன்றவர்களுடன் பழகி அவர்களின் அன்பைப் பெற்றார்.

இவர் மனைவி சாவித்திரி 30 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். இவருக்கு செல்வம், தென்னவன், கவிஞர் பாரதி ஆகிய மகன்களும் அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர்.

புதுச்சேரியில் ஜூலை 7 மாலை 4 மணியளில் அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும் .

இந்தத் தகவலை மன்னன் மகன் பாரதிதாசன் அறக்கட்டளைத்தலைவர் கவிஞர் கோ.பாரதி தெரிவித்துள்ளார்.
Attachments

புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா

புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director bhuvanaதமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு குறைவாக இருக்கிறது. தமிழ் சினிமா பேச ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் இயக்குனர்கள் வந்து போயிருக்கின்றனர்.

அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் புவனா. பத்திரிகையாளராக தனது கேரியரைத் தொடங்கிய இவர், விபி பிலிம் மேக்கர்ஸ் என்ற நிறுவனம் மூலம் திரைப்படம், குறும்படம் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களை தயாரித்தார். யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல், 2005 ஆம் ஆண்டு ரைட்டா தப்பா என்ற படத்தை இயக்கி தயாரித்தும் இருந்தார். அந்தப்படம் வணிகத்தை விட விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழக அரசின் 2 மாநில விருதுகள் இப்படத்திற்கு கிடைத்தது. தன்னை இன்னும் மெருகேற்றுவதற்காக அமெரிக்காவில் பிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்தார். வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட பல கோர்ஸைகளையும் முடித்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும்போது அங்கிருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கி தயார் நிலையில் வைத்திருக்கிறார்.

இவர் இதற்கு முன் பல குறும்படங்களை தயாரித்து இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய குறும்படங்கள் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் வெற்றி பெற்று இருக்கிறது. தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு “காதலிக்க நேரமுண்டு” என்ற படத்தை இயக்கி தயாரிக்க இருக்கிறார்.

இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்தபின் தொடங்க இருக்கிறது.

இவர் புவனா மீடியா என்ற இணையதளத்தையும் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். மிக முக்கியமாக விஜய்சேதுபதியை ஒரு குறும்படத்தில் அறிமுகப்படுத்தியதும் இவரே.. 2009-இல் வெளியானது இந்தக் குறும்படம். அடிப்படையில் ஒரு பத்திரிக்கையாளராக இருப்பதால் இவரது மீடியா தளம் கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது. ஒரு தரமான அறம் சார்ந்த படத்தை அடுத்த வருடம் தர இருக்கிறார்.

‘தடயம் முதல் அத்தியாயம்’ … உளவியல் குற்றங்களை வைத்து சைக்லாஜிக்கல் த்ரில்லரை உருவாக்கிய மணி கார்த்திக்

‘தடயம் முதல் அத்தியாயம்’ … உளவியல் குற்றங்களை வைத்து சைக்லாஜிக்கல் த்ரில்லரை உருவாக்கிய மணி கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thadayamநான் மணி கார்த்திக். ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சுமார் 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். திரைத்துரையால் ஈர்க்கப்பட்டு இயக்குனராக முயற்சி செய்து வருகிறேன் .

சில குறும்படங்கள் இயக்கி முடித்த பின்னர் தனித்தன்மை கொண்ட சுவாரஸ்யமான திரைக்கதை ஒன்றைச் செய்யத் திட்டமிட்டு, தற்போது ‘தடயம்: முதல் அத்தியாயம்’ என்ற படத்தை எழுதி இயக்கி இருக்கிறேன்.

‘தடயம் முதல் அத்தியாயம்’ உளவியல் குற்றங்களை பின்னனியியாக வைத்து அமைக்கப்பட்ட ஒரு psychological த்ரில்லர்.

போலிஸ் அதிகாரியாக வரும் மதிவாணனைச் சுற்றி நடக்கும் தொடர் கொலைகள் அதில் கிடைக்கும் திடுக்கிடும் தடயங்கள் அவரை மேலும் முன்னோக்கி நகர்த்த அதில் அவர் சந்திக்கும் இன்னல்கள், இறுதியில் எதிரியின் சதியை முறியடித்தாரா என்று முதல் அத்தியாயம் தொடர்கிறது.

தமிழில் psychological த்ரில்லர் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு தடயம் ஒரு நல்ல விருந்தாகும். தடயம் முதல் அத்தியாயத்தின் காட்சிகள் அனைத்தும் கொடைக்கானல் பிண்ணனியில் அமைக்பட்டுள்ளது .

கதையின் நாயகனாக பென்குயின், சிந்துபாத் மற்றும் சேதுபதி படங்களில் நடித்த லிங்கா, ‘மதிவாணன்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – சுகுமாரன் சுந்தர் , படத்தொகுப்பு-விஐய் அன்டரிவ்ஸ், இசை – ஜோன்ஸ் ரூபர்ட் , ஒலி வடிவமைப்பு – அருன் காந்த், கலரிஸ்ட் – அனில் கிருஷ் என்று அனைவரும் தங்களது திறமையை விதைத்திருக்கிறார்கள். தடயம் முதல் அத்தியாயம் விறுவிறுப்பான ஒரு சஸ்பன்ஸ் திரில்லராக ரசிகர்கள் மத்தியில் வலம் வரும் என்பதில் எங்கள் படக்குழு நன்னம்பிக்கை கொண்டுள்ளோம். உங்கள் ஆதரவு தொடர்ந்து கிடைக்கவும் வேண்டுகிறோம்.

நடிகர்-நடிகையினர்

லிங்கா
விஜய் ஆனந்த் TR
கார்த்திக்கேயன் அய்யாச்சாமி
ராஜா பழநிவேல்
சுரேஷ் PT
கலங்கல் தினேஷ்
மோகன் பிரதிப்
வெங்கடேஷ் G
மகேஷ்வரன் E
கலங்கல்’தினேஷ்
சேதுபதி

தாயாரிப்பு மேற்பார்வை
ராஜேஷ் தோபியாஸ்

இனை இயக்குனர்
மோகன் பிரதிப்

உதவி இயக்குனர்
தியாகேஷ் ராமலிங்கம்
விக்கி வினாயக்

ஒலி வடிவமைப்பு
அருன் காந்த்
Info Pluto media

இசை
MS ஜோன்ஸ் ரூபர்ட்

பாடல் வரிகள்
விஜய் ஆனந்த் TR

கலரிஸ்ட்
அனில் கிருஷ்
Pixilate Studio

சிறப்பு காட்சிகள்(VFX)
வென்கி

விளம்பர வடிவமைப்பு
கௌஷிக் சந்திரன்

கலை இயக்குனர்
கார்த்திக் லீ
கார்த்திக் அன்பு (வரைபடங்கள்)

படத்தொகுப்பு
விஜய் அண்டிரிவ்ஸ்

ஒளிப்பதிவு
சுகுமாரன் சுந்தர்

எழுத்து இயக்கம்
மணி கார்த்தி

#ThadayamMudhalAdhyayam A film where the mystery case treats a cop, just away from the usuals.

Premiering exclusively on Regal Talkies, on July10th At 8pm

#RegalTalkiesOriginal
#TMAonRegalTalkies

@RegalTalkies @mani_karthi_dir @MSJonesRupert @icvkumar @onlynikil @digitallynow
#News23

Attachments

கொரோனாவை விட கொடிய நோய் பரவல்.; 24 மணி நேரத்தில் உயிரிழக்கும் அபாயம்!

கொரோனாவை விட கொடிய நோய் பரவல்.; 24 மணி நேரத்தில் உயிரிழக்கும் அபாயம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bubonic Plagueசீனாவில் ஆரம்பமான கொரோனா வைரஸ் பாதிப்பு மனித இனத்தையே அச்சுறுத்தி வருகிறது.

இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் உலக மருத்துவ நிபுணர்களே திணறி வருகின்றனர்.

இதில் இருந்து மீண்டு வர முடியுமா? என விடை தெரியாமல் கொரோனாவுடன் போராடி வருகின்றன.

இதனால் பல உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

தற்போது இதைவிட கொடிய நோய் சீனாவில் பரவத் தொடங்கியுள்ளது.

அங்கு புபோனிக் பிளேக் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. (புபோனிக் பிளேக் என்பது பாக்டீரிய நோய்.)

இதனையடுத்து சீனாவின் பயன்னூர் மற்றும் மங்கோலியாவின் சில பகுதிகளில் மூன்றாம் கட்ட எச்சரிக்கை 2020ம் ஆண்டு டிசம்பர் வரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட 2 பேர் மர்மோட் இறைச்சியை சாப்பிட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த நோய் மர்மோட் போன்ற காட்டில் வாழும் கொறித்து திண்ணும் உயிரினங்களால் பரவுகிறது.

இதற்கு உடனடி சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட நபர் 24 மணி நேரத்தில் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் ரஷ்யாவை முந்தி 3வது இடத்தில் இந்தியா.; முதல் 2 இடங்களில் எந்தெந்த நாடு.?

கொரோனா பாதிப்பில் ரஷ்யாவை முந்தி 3வது இடத்தில் இந்தியா.; முதல் 2 இடங்களில் எந்தெந்த நாடு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

corona virusகொரோனா வைரஸ் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது இந்தியா.

இது குறித்த முழு விவரம் இதோ…

இந்தியாவில் இதுவரை 4,24,433 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,53,287 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுவரை இந்தியாவில் 19,693 பேர் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 24,248 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

425 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

15,350 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை 2,06,619 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

1,11,740 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தமட்டில் இதுவரை 1,11,151 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரை 62,778 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர்.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி…

ரஷ்யாவின் ஒட்டு மொத்த கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை என்பது 6.8 லட்சமாக உள்ளது.

தற்போது சர்வதேச அளவில் ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா.

அதாவது இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்ந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசில் 15 லட்சம் கொரோனா நோயாளிகள் உள்ளனர்.

28 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகளைக் கொண்டு முதல் இடத்தில் உள்ளது அமெரிக்கா.

விஷாலுடன் சமாதானமா..? மீண்டும் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் மிஷ்கின்.

விஷாலுடன் சமாதானமா..? மீண்டும் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் மிஷ்கின்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal mysskinதுப்பறிவாளன் பட வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்காக அதே கூட்டணி மீண்டும் இணைந்தது.

விஷால் தயாரித்து நடிக்க மிஷ்கின் இயக்கி வந்தார்.

லண்டனில் இப்பட சூட்டிங்கும் சில நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் மிஷ்கின் ஒரு சில கண்டிஷன்களை போட டைரக்டரையே படத்தில் இருந்து நீக்கினார் விஷால்.

மேலும் விஷாலே படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மிஷ்கின் மற்றும் விஷால் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல்கள் கசிய தொடங்கியது

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை இரு தரப்பும் இதுவரை உறுதி செய்யவில்லை.

ஈகோவை விட்டு நல்ல கலைஞர்கள் இணைந்து நல்ல படைப்புகளை கொடுத்தால் நமக்கும் நல்லது தானே..

More Articles
Follows