தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. இவர் தற்போது கோலிவுட்டை தாண்டி அனைத்து மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டி மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் கர்நாடகா மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் மகாகாந்தி என்ற ஒரு நபர் ஓடிவந்து விஜய்சேதுபதி மீது தாக்குதல் நடத்தினார். அதாவது அவரை பின்னில் இருந்து எட்டி உதைக்கிறார்.
இதனையடுத்து விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல் நடத்த முயன்றவரை தடுத்து நிறுத்தினர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. ஆனால் என்ன காரணம் என வெளியே தெரியாமல் மூடப்பட்டது.
ஆனால் இது தொடர்பான எந்த புகாரும் காவல் நிலையத்திற்கு செல்லவில்லை.
‘இந்த விவகாரத்தை தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வதாக விஜய்சேதுபதியின் உதவியாளர் தெரிவித்தார்.
இது நடந்து சில தினங்கள் ஆன நிலையில் மகாகாந்தி என்ற அந்த நபர் பிரபல யூடியூப் தளத்தில்…”நான்தான் அடித்தேன். அது உண்மைதான். என தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 6.5 அடி உயரம் இருக்கும் இவர் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறாராம்.
அவரின் பேட்டியில்.. என் தமிழ் மக்களையும் என் குலதெய்வம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரய்யா அவர்களையும் விஜய்சேதுபதி தவறாக பேசினார். எனவே மனஉளைச்சல் ஆனது. எனவே அவரை தாக்கினேன்,
அவர் மக்கள் செல்வன் என்ற போர்வையில் உள்ளார். ஆனால் மக்களுடன் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
Reason behind Vijay Sethupathi attack at Bengaluru airport
நடிகர் விஜய்சேதுபதி மீது தாக்குதல் சம்பவம்.
ஏன் அடித்தேன் என சம்பந்தப்பட்டவர் பேட்டி.. pic.twitter.com/IXJvyISHwf
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) November 6, 2021