தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
அதன்பின்னர் இந்த 2 1/2 ஆண்டு இடைவெளியில் தன் அரசியல் கட்சி பணிகளை கட்டமைத்து வருகிறார்.
வருகிற 2021 ஆம் ஆண்டில் தேர்தலை சந்திக்க ரஜினிகாந்த் தயாராகி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தயாராகி விட்டதாகவும் பிரச்சார கூட்டம் குறித்த யுக்திகள் அனைத்தையும் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் ரஜினியை அவ்வப்போது நேரில் சந்திக்கும் அரசியல் விமர்சகர் ஒருவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அதில்…. ’தேர்தல் பிரச்சாரங்களில் ரஜினிகாந்த் பல்வேறு யுக்திகளை கடைபிடிப்பார்.
சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்னர் மெரினா கடற்கரையிலுள்ள உழைப்பாளர் சிலை அருகில் ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருப்பார் என்றும் அந்த உண்ணாவிரதத்தில்…
நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தவறாது வாக்களிக்க வேண்டும்.
மக்கள் தயவு செய்து பணத்திற்காக ஓட்டு போட வேண்டாம்.. ஜாதி மதம் பார்த்து ஓட்டு போட வேண்டாம் என வலியுறுத்த போகிறாராம்.
இதுபோல பல யுக்திகளை ரஜினி வகுத்து இருப்பதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.