தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை தமிழகத்தில் இந்த பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இதற்கு முன்பு சினிமா சூட்டிங் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் FEFSI பெப்சி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
எனவே தொழிலாளர்களுக்கு உதவ நடிகர்கள் முன்வர வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதில் நடிகர்களில் முதல் நபராக சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி குடும்பத்தினர் இணைந்து 10 லட்ச ரூபாய் நிதியை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கினார்கள் என்பதை பார்த்தோம்.
அவர்களைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் 250 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார்.
இயக்குநர் மனோபாலா 10 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் 150 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சமும் விஜய்சேதுபதி 10 லட்சமும் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பெப்சி தொழிலாளர்களுக்காக 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இவர்களை அடுத்து இன்னும் நிறைய நடிகர்கள் நிதியுதவி வழங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.
Rajini Sivakarthikeyan and Vijay Sethupathi donation to Fefsi union