தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் பிரபலங்கள் பலரும் நிவாரண நிதி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் எந்த நடிகர்? அதிகம் நிவாரணம் கொடுத்துள்ளார் என்ற விவாதங்கள் அடிக்கடி இணையத்தில் எழுகின்றன.
இந்த சண்டை வீதிக்கும் வந்து ஒரு கொலைகளமாக மாறியுள்ளது.
விழுப்புரம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் யுவ்ராஜ். இவர் நடிகர் விஜய் ரசிகர். இதே ஊரில் வசிக்கும் தினேஷ்பாபு தீவிர ரஜினி ரசிகர்.
இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதால் ஊரடங்கிலும் பிளாக்கில் சரக்கு வாங்கி குடித்துள்ளனர்.
போதை தலைக்கேறியதால் அண்ணாத்த மற்றும் மாஸ்டர் பட விவாதங்கள் எழுந்துள்ளது.
மேலும் கொரோனா நிவாரண நிதியை அதிகம் கொடுத்தது யார்? என்ற பேச்சும் தீவிரமாக எழுந்துள்ளது.
இந்த வாக்கு வாதம் முற்றி கைகலப்பாக மாற ரஜினி ரசிகர் தினேஷ் பாபு, விஜய் ரசிகர் யுவ்ராஜை நெஞ்சில் கை வச்சி வேகமா தள்ளியிருக்கிறாராம்.
நிலை தடுமாறி யுவ்ராஜ் கீழ விழ அவர் தலையில் கல் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துட்டார்.
இப்போ ரஜினி ரசிகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் ஊரடங்கிலும் அவர்களுக்கு மதுபானம் எப்படி கிடைத்தது? எனவும் விசாரணை நடத்திவருகின்றனர்.
Rajini or Vijay good human Vijay fan killed by Rajini fan