ரஜினி-விஜய் யார் வள்ளல்..? விஜய் ரசிகரை கொன்ற ரஜினி ரசிகர்

ரஜினி-விஜய் யார் வள்ளல்..? விஜய் ரசிகரை கொன்ற ரஜினி ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini or Vijay good human Vijay fan killed by Rajini fanகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் பிரபலங்கள் பலரும் நிவாரண நிதி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் எந்த நடிகர்? அதிகம் நிவாரணம் கொடுத்துள்ளார் என்ற விவாதங்கள் அடிக்கடி இணையத்தில் எழுகின்றன.

இந்த சண்டை வீதிக்கும் வந்து ஒரு கொலைகளமாக மாறியுள்ளது.

விழுப்புரம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் யுவ்ராஜ். இவர் நடிகர் விஜய் ரசிகர். இதே ஊரில் வசிக்கும் தினேஷ்பாபு தீவிர ரஜினி ரசிகர்.

இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதால் ஊரடங்கிலும் பிளாக்கில் சரக்கு வாங்கி குடித்துள்ளனர்.

போதை தலைக்கேறியதால் அண்ணாத்த மற்றும் மாஸ்டர் பட விவாதங்கள் எழுந்துள்ளது.

மேலும் கொரோனா நிவாரண நிதியை அதிகம் கொடுத்தது யார்? என்ற பேச்சும் தீவிரமாக எழுந்துள்ளது.

இந்த வாக்கு வாதம் முற்றி கைகலப்பாக மாற ரஜினி ரசிகர் தினேஷ் பாபு, விஜய் ரசிகர் யுவ்ராஜை நெஞ்சில் கை வச்சி வேகமா தள்ளியிருக்கிறாராம்.

நிலை தடுமாறி யுவ்ராஜ் கீழ விழ அவர் தலையில் கல் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துட்டார்.
இப்போ ரஜினி ரசிகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் ஊரடங்கிலும் அவர்களுக்கு மதுபானம் எப்படி கிடைத்தது? எனவும் விசாரணை நடத்திவருகின்றனர்.

Rajini or Vijay good human Vijay fan killed by Rajini fan

ரஜினி கட்டளையை மீறிட்டோம்; சொல்லாம இருக்க முடியல.. – பேரரசு

ரஜினி கட்டளையை மீறிட்டோம்; சொல்லாம இருக்க முடியல.. – பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We Disobeyed Rajinis order says director Perarasuகொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகெங்கும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் இந்த உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் வேலையிழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

சினிமா தொழிலாளர்கள் சங்கமான FEFSI க்கு நடிகர் ரஜினி 50 லட்சம் ரூபாய் வழங்கியிருந்தார். மற்ற சினிமா சார்ந்த சங்கங்களுக்கு அவர் உதவி தொகை எதுவும் வழங்கவில்லை.

மேலும் முதலமைச்சர் நிவாரண நிதி மற்றும் PM Cares நிதிக்கும் அவர் நிவாரணம் எதையும் இன்று வரை வழங்கவில்லை.

இந்த நிலையில் சினிமா சார்ந்த 1500 குடும்பங்களுக்கு சுமார் 24 டன் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை ரஜினி வழங்கியிருந்தார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த உதவி தகவலை எந்த மீடியாவுக்கும் செய்தி கொடுக்க வேண்டாம் என்று தான் கூறியிருந்தாராம்.

ஆனால் அதையும் மீறி இயக்குனர் சங்கம் ரஜினிக்கு நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது பற்றி இயக்குனர் பேரரசு விளக்கம் அளித்துள்ளார்.

“ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம்!

இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை,மளிகைப் பொருட்கள் வழங்கும் போது ‘பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம்’ என்ற நிபந்தனையோடுதான் கொடுத்தார்.

அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம். பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது!” என பேரரசு தெரிவித்துள்ளார்.

We Disobeyed Rajinis order says director Perarasu

BREAKING 5 மாநகராட்சிகளில் கடுமையான ஊரடங்கு.; முதல்வர் உத்தரவு

BREAKING 5 மாநகராட்சிகளில் கடுமையான ஊரடங்கு.; முதல்வர் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Complete Lock down for 4 days in 5 cities of Tamilnaduசென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை முதல் 29ம் தேதி (4 நாட்கள்) இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி (3 நாட்கள்) இரவு வரை முழு ஊரடங்கு என்றும் அவர் அறிவித்துள்ளார்

எவை எல்லாம் செயல்பட அனுமதி உண்டு..:

அந்த காலக்கட்டத்தில், மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அத்யாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம், குடும்பநலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.

இதர மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

அம்மா உணவகங்கள், ஏடிஎம் மையங்கள் வழக்கம் போல் செயல்படும். உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். மேலும், முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி புரிவோருக்கு அனுமதி வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் செயல்படும். கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும். காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

மேற்கண்ட பணிகளைத் தவிர, பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்.
பிற நிறுவனங்கள் செயல்படாது.

மேற்குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர பிற இடங்களில் அல்லது பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதிகள் தொடரும். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Complete Lock down for 4 days in 5 cities of Tamilnadu

#BetheREALMAN… சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சவால் விட்ட சிரஞ்சீவி

#BetheREALMAN… சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சவால் விட்ட சிரஞ்சீவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Be the REAL MAN Chiranjeevi challenges Rajinikanthகொரோனா வைரஸ் தொற்றை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் மற்ற தொழில்களைப் போல சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனவே திரை நட்சத்திரங்கள் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில் சமைப்பது, வீட்டு வேலை, வீட்டை சுத்தம் செய்வது என பலவற்றி வீடியோவாக எடுத்து அதை இணையத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா டுவிட்டரில் புதிய சவால் ஒன்றை தொடங்கினார்.

#BetheREALMAN எனும் ஹேஷ்டேக்கில் பதிவிடுமாறு அவர் கூறியிருந்தார்.

அவரின் சவாலை ஏற்று பாகுபலி டைரக்டர் ராஜமவுலி இந்த சவாலை செய்தார்.

இதனையடுத்து ராஜமவுலியின் சவாலை ஏற்று வீட்டுவேலை செய்தார் ஜூனியர் என்.டி.ஆர். இவர் சிரஞ்சீவிக்கு சவால்விட்டார்.

இதனை ஏற்று வீட்டை சுத்தம் செய்து தனது தாயாருக்கு தோசை சுட்டு கொடுத்து ஊட்டிவிட்டார் சிரஞ்சீவி.

இந்த சவாலை அவர் ரஜினிக்கு விட்டுள்ளார்.

சிரஞ்சீவியின் சவாலை ரஜினி ஏற்பாரா? வீட்டு வேலை செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Be the REAL MAN Chiranjeevi challenges Rajinikanth

1500 நலிந்த கலைஞர்கள் குடும்பத்தினருக்கு ரஜினியின் கொரோனா நிவாரணம்

1500 நலிந்த கலைஞர்கள் குடும்பத்தினருக்கு ரஜினியின் கொரோனா நிவாரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini to provide grocery to 1500 actors and Asst Directors கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகமே ஸ்தம்பித்துள்ளது.

மக்களின் நெருக்கத்தை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் இந்திய மக்கள் கடந்த ஒரு மாதமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

இதனால் தின வருமானத்தை நம்பியுய்ய ஏழைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை போல சினிமாவை நம்பி வாழும் பல தொழிலாளிகளும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

இவர்களுக்கு பல முன்னணி நடிகர்கள் தாங்களாகவே முன்வந்து நிறைய உதவிகளை செய்து வருகின்றனர்.

நடிகர் லாரன்ஸ் தினம் தினம் ஒரு அறிவிப்பாக பல லட்சங்களை நிவாரண நிதியாக கொடுத்து வருகிறார்.

சினிமா தொழிலாளர்கள் சங்கமான FEFSIகக்கு சில வாரங்களுக்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் ரூ. 50 லட்சம் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களில் உள்ள உதவி இயக்குனர்கள், நலிந்த கலைஞர்கள் என 1500 பேரின் குடும்பத்தினருக்கு (24 டன் அத்தியாவசிய) அரிசி மற்றும் மளிகை பொருட்களை நிவாரணமாக கொடுத்துள்ளார்.

ரஜினியின் ரசிகர்களும் தமிழ்நாடு முழுவதும் தங்களால் இயன்ற வகையில் காய்கறிகள், மளிகை பொருட்கள், அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை ஏழைகளுக்கு கொடுத்து உதவி வருகின்றனர்.

Rajini to provide grocery to 1500 actors and Asst Directors

ஜோதிகா கோயில் பேச்சு; மன்னிப்பு கேட்க இந்து அமைப்புகள் எச்சரிக்கை

ஜோதிகா கோயில் பேச்சு; மன்னிப்பு கேட்க இந்து அமைப்புகள் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jyothikas Speech Controversy She should apologise for hurting Hindu beliefsஓரிரு தினங்களுக்கு முன் விருது விழா நிகழ்ச்சி தனியார் டிவியில் ஒளிப்பரப்பானது. அதில் நடிகை ஜோதிகா பேசினார்.

ஜோதிகா பேசியதாவது,… தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் புகழ்பெற்றது, கண்டிப்பாக பார்க்கனும் என்றார்கள். ஏற்கெனவே பார்த்துள்ளேன்.

உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி நன்கு பராமரித்து வருகிறார்கள்.

அடுத்த நாள் என் பட சூட்டிங் மருத்துவமனையில் இருந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் கண்டதை என் வாயால் சொல்ல முடியாது.

எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். ‘ராட்சசி’ படத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார்.

கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள்.

தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம்” என பேசினார் ஜோதிகா.

ஜோதிகாவின் இந்த பேச்சு இந்துக்களிடையே பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மயிலாடுதுறை ஆன்மீக பேரவை கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும் பல இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.

அகில உலக ஆன்மிக இந்து மத கட்சி தலைவர் ஜெயம் ஜேஎஸ்கே கோபியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை கட்ட வேண்டுமென்றால் மருத்துவமனை கட்டுங்கள் என ஜோதிகா சொல்லியிருக்கலாம். அதை விடுத்து கோயிலுக்கு பதிலாக மருத்துவமனை கட்டுங்கள் என ஏன் சொன்னார்?

ஏற்கெனவே இந்துக்களை மதம் மாற்ற ஒரு கூட்டம் அலைந்துக் கொண்டிருக்கிறது. எனவே ஜோதிகா வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்து தமிழர் கட்சித் தலைவர் இராம. ரவிக்குமார் என்பவர் கூறியுள்ளதாவது…

அடிப்படையில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் ஜோதிகா. இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆலயங்களை கட்ட வேண்டாம் என அவர் சொல்லவில்லை.

ஆனால் இந்து கோயிலை மட்டுமே சொன்னது தவறு. கலை கூத்தாடி ஜோதிகா தமிழர் கட்டிடக் கலையை கொச்சைப்படுத்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Jyothikas Speech Controversy She should apologise for hurting Hindu beliefs

More Articles
Follows