தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்றது.
கடந்த மே 22-ஆம் தேதி போராட்டக்காரர்களுக்கும் போலீசுக்கும் தகராறு ஏற்பட, வன்முறை ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்த 13 பேர் (அரசு அறிவிப்பின்படி) பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையில் தமிழக அரசு சார்பாக ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்து வருகிறார்.
அங்கு சிகிச்சை பெறும் 48 பேரை சந்தித்து நலம் விசாரித்து வருகிறார் ரஜினிகாந்த்.
காயமடைந்தவர்களுக்கு நிதி மற்றும் தேவையான பொருட்களை வழங்கி வருகிறார்.
காயமடைந்தவர்களுக்கு 10,000 ரூபாயை ரஜினிகாந்த் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு ரூ. 2 லட்சம் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தொடர்பில் இருங்கள்…
Rajini met peoples injured during anti Sterlite protests at Tuticorin