தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று காலை ரஜினிகாந்த் தூத்துக்குடி புறப்பட்டு செல்கிறார்.
விமான நிலையத்திற்கு புறப்படும் முன் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது…
துப்பாக்கி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடிக்கு செல்கிறேன்.
ஒரு நடிகனான என்னை பார்த்தால் தூத்துக்குடி மக்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என நம்புகிறேன்.
திமுகவை அதிமுகவும் அதிமுகவை திமுகவும் விமர்சிப்பது அரசியல்.
முன்னே போகும் சிங்கம் பின்னாடி அடிக்கடி பார்க்கும். ஆனால் பின்னாடியே பார்த்துக் கொண்டிருந்தால் முன்னேற முடியாது.
பழையவற்றையே விமர்ச்சித்து பேசிக் கொண்டிருப்பது சரியல்ல.
சட்டப்பேரவையை திமுக புறக்கணித்தது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.
துப்பாக்கி துப்பாக்கிச் சூட்டுக்கு பிரதமர் மோடி ஒன்றும் சொல்லாதது பற்றி எனக்குத் தெரியாது. மீடியா பவர் இருக்கிறது. எனவே நீங்களே கேளுங்கள்” என்றார்.
Tuticorin people will be happy when they see me as Actor says Rajini