Breaking: துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம்; ரஜினி அறிவிப்பு

Breaking: துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம்; ரஜினி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth photos in Thoothukudi (8)தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் 13 பேர் உயிரிழந்தனர். எனவே அவர்களின் குடும்பத்தினரை சந்திக்க இன்று ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றுள்ளார்.

அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது…

துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 10000 அளிக்க உள்ளேன்.

அதில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை இங்குள்ள ஹோட்டலில் சந்திக்கிறேன். அவர்களுக்கு ரூ. 2 லட்சம் கொடுக்கிறேன். என தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் வீட்டுக்கு ரஜினி செல்லக்கூடாது என தமிழக அரசு தடை போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini announce that he will give 2 lakhs compensation to people family those who lost a live in Sterlite protest
Rajinikanth photos in Thoothukudi (9)

 

#Breaking: பாதிக்கப்பட்டவர்கள் ரஜினியை பார்த்து மகிழ்ச்சி; என்ன சொன்னார்கள்.?

#Breaking: பாதிக்கப்பட்டவர்கள் ரஜினியை பார்த்து மகிழ்ச்சி; என்ன சொன்னார்கள்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tuticorin shooting injured peoples happy with Rajini visitதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்றது.

கடந்த மே 22-ஆம் தேதி போராட்டக்காரர்களுக்கும் போலீசுக்கும் தகராறு ஏற்படவே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 13 பேர் (அரசு அறிவிப்பின்படி) பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சற்றுமுன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.

அப்போது அவரை பார்த்த மக்கள் அந்த வேதனையிலும் ரஜினியை பார்த்து சந்தோஷப்பட்டனர்.

நீங்க அரசியலும் வரனும் தலைவா. எங்களை நீங்கத்தான் காப்பத்தனும் என்று கூறியுள்ளனர்.

ரஜினி இன்முகத்துடன் அவர்களை அரவணைத்து பாதிப்புக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தற்போது தூத்துக்குடியில் உள்ள ஹோட்டலில் அவர் சிறிது நேரம் ஓய்வு எடுக்கவுள்ளார்.

அதன்பின்னர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை அவர் சந்தித்து நிதியுதவி அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Tuticorin shooting injured peoples happy with Rajini visit

Big News: துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினி நிதியுதவி

Big News: துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினி நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini met peoples injured during anti Sterlite protests at Tuticorin

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்றது.

கடந்த மே 22-ஆம் தேதி போராட்டக்காரர்களுக்கும் போலீசுக்கும் தகராறு ஏற்பட, வன்முறை ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்த 13 பேர் (அரசு அறிவிப்பின்படி) பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையில் தமிழக அரசு சார்பாக ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்து வருகிறார்.

அங்கு சிகிச்சை பெறும் 48 பேரை சந்தித்து நலம் விசாரித்து வருகிறார் ரஜினிகாந்த்.

காயமடைந்தவர்களுக்கு நிதி மற்றும் தேவையான பொருட்களை வழங்கி வருகிறார்.

காயமடைந்தவர்களுக்கு 10,000 ரூபாயை ரஜினிகாந்த் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு ரூ. 2 லட்சம் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தொடர்பில் இருங்கள்…

Rajini met peoples injured during anti Sterlite protests at Tuticorin

Breaking: நடிகனாக என்னைப் பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.. : ரஜினி

Breaking: நடிகனாக என்னைப் பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.. : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tuticorin people will be happy when they see me as Actor says Rajiniதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று காலை ரஜினிகாந்த் தூத்துக்குடி புறப்பட்டு செல்கிறார்.

விமான நிலையத்திற்கு புறப்படும் முன் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது…

துப்பாக்கி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடிக்கு செல்கிறேன்.

ஒரு நடிகனான என்னை பார்த்தால் தூத்துக்குடி மக்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என நம்புகிறேன்.

திமுகவை அதிமுகவும் அதிமுகவை திமுகவும் விமர்சிப்பது அரசியல்.

முன்னே போகும் சிங்கம் பின்னாடி அடிக்கடி பார்க்கும். ஆனால் பின்னாடியே பார்த்துக் கொண்டிருந்தால் முன்னேற முடியாது.

பழையவற்றையே விமர்ச்சித்து பேசிக் கொண்டிருப்பது சரியல்ல.

சட்டப்பேரவையை திமுக புறக்கணித்தது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.

துப்பாக்கி துப்பாக்கிச் சூட்டுக்கு பிரதமர் மோடி ஒன்றும் சொல்லாதது பற்றி எனக்குத் தெரியாது. மீடியா பவர் இருக்கிறது. எனவே நீங்களே கேளுங்கள்” என்றார்.

Tuticorin people will be happy when they see me as Actor says Rajini

ஜெயலலிதா-ரஜினி படங்களை இயக்கிய முக்தா சீனிவாசன் மரணம்

ஜெயலலிதா-ரஜினி படங்களை இயக்கிய முக்தா சீனிவாசன் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் (88) சென்னையில் காலமானார்.

முக்தா சீனீவாசன் – சில நினைவுக் குறிப்புகள்

கதை, வசனகர்த்தா, திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என்று பன்முகத்தன்மை கொண்ட இந்தப் பெரியவர் தீவிரமான காங்கிரஸ்காரர்.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த மாளாபுரம் கிராமத்தில் பிறந்தவர் முக்தா சீனிவாசன். பெரும் சிரமத்திற்கிடையே பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சினிமாவில் உதவி இயக்குநராக வேலைக்கு வந்தவர். பின்னர் கலைத்துறையில் தனது கடின உழைப்பால் உயர்ந்து திரைப்பட இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர்.

பழம் பெரும் இயக்குநர்கள் கே.ராம்னாத், வீணை எஸ்.பாலசந்தர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1947 முதல் 1957ம் ஆண்டுவரையிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு.

1957-ல் இவர் இயக்கம் செய்த முதல் திரைப்படம் ‘முதலாளி’ வெளி வந்தது. இந்த முதல் திரைப்படமே, ஜனாதிபதி விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய அண்ணன் முக்தா வி.ராமசாமி அவர்களுடன் இணைந்து முக்தா பிலிம்ஸை துவக்கி அதன் மூலம் 41 திரைப்படங்களைத் தயாரித்து உள்ளார். இதுவரையிலும் மொத்தம் 61 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் முக்தா சீனிவாசன். கூடவே தெலுங்கில் புகழ் பெற்ற 12 திரைப்படங்களை டப்பிங் செய்தும் வெளியிட்டிருக்கிறார்.

இவர் தயாரித்து, இயக்கிய ‘தாமரைக்குளம்’ திரைப்படத்தில்தான் ‘நகைச்சுவைத் திலகம்’ நாகேஷ் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இவர் தயாரித்து, இயக்கிய ‘சூரியகாந்தி’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் தந்தை பெரியார் கலந்து கொண்டது அப்போதைக்கு மிகப் பெரிய பரபரப்பு செய்தி. அந்தப் பெருமையுடன் எனதருமை கவியரசன் கண்ணதாசனின் புகழ் பெற்ற பாடலான ‘பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது’ பாடலை வெளிக்கொணர்ந்த இயக்குநர் என்கிற முறையில் இவர் பெரும் பாராட்டுக்குரியவர்.

‘நடிகர் திலகம்’ சிவாஜியின் உற்ற நண்பரான இவர், ‘அந்தமான் காதலி’, ‘இமயம்’, ‘பரீட்சைக்கு நேரமாச்சு’, ‘கீழ்வானம் சிவக்கும்’ போன்ற படங்களை நடிகர் திலகத்தை நடிக்க வைத்து இயக்கினார். இதில் ‘அந்தமான் காதலியும்’, ‘இமயமும்’ நூறு நாள் ஓடிய திரைப்படங்கள்.. ‘அந்தமான் காதலி’யின் கிளைமாக்ஸ் காட்சியின் வசனங்கள் இன்னமும் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ‘சூப்பர்ஸ்டார்’ அண்ணன் ரஜினியின் ‘பொல்லாதவன்’, ‘சிவப்புசூரியன்’ திரைப்படங்களைத் தயாரித்து இயக்கியவரும் இவரே.

இன்றளவிலும் உலகின் மிகச் சிறந்த நூறு திரைப்படங்களில் ஒன்றாக ‘டைம்’ பத்திரிகையால் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் மணிரத்தினத்தின் ‘நாயகன்’ திரைப்படத்தைத் தயாரித்ததும் இவருடைய ‘முக்தா பிலிம்ஸ்’தான்..

1979-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலில் இவருடைய தலைமையில்தான் ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்’ முதல் முறையாக உருவாக்கப்பட்டது என்பது தமிழ்த் திரைப்பட உலகத்தின் வரலாறு..

துவக்கக் காலத்தில் தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்து வந்த முக்தா சீனிவாசன் அவர்கள், 1963-ம் ஆண்டு முதல் கதராடை அணிந்து காங்கிரஸ்காரராக பவனி வர ஆரம்பித்தார். பெருந்தலைவர் காமராஜரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்தார். அதோடு ஜி.கே.மூப்பனாரின் பள்ளித் தோழர். அவருக்கும் சிறந்த நண்பர் இவர்தான். தற்போது காங்கிரஸ் கட்சியின் தமிழகத் துணைத் தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

இவருடைய இன்னுமொரு மிகப் பெரிய தகுதி.. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் கோஷ்டி சேர்க்கத் தெரியாத ஒரு தலைவர் உண்டென்றால் அது இவராகத்தான் இருக்க முடியும்.. அப்பேர்ப்பட்டவர் நம் ஆந்தை ரிப்போர்ட்டர் வாசகராக, ரசிகராக இருந்தார் என்பது பெருமைக்குரியது..

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்

Muktha Srinivasan Passed away

நாளை தூத்துக்குடி பயணம்; மக்கள் களத்தில் ரஜினி.!

நாளை தூத்துக்குடி பயணம்; மக்கள் களத்தில் ரஜினி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நாளை தூத்துக்குடி செல்கிறார்.

அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக மக்கள் பிரச்னைக்காக களம் இறங்குகிறார்.

சென்னையிலிருந்து நாளை காலை 8 மணிக்கு தூத்துக்குடிக்கு புறப்படுகிறார் ரஜினிகாந்த்.

 

Tomorrow 30th May Rajinikanth visiting Tuticorin Sterlite Protestors

More Articles
Follows