ஜனவரி 10ல் ரசிகர்கள் அறவழிப் போராட்டம்..; புரட்சி உருவாகுமா…? மறுபரிசீலனை செய்வாரா ரஜினி்..?

ஜனவரி 10ல் ரசிகர்கள் அறவழிப் போராட்டம்..; புரட்சி உருவாகுமா…? மறுபரிசீலனை செய்வாரா ரஜினி்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகொரோனா வைரஸ் பரவல் மற்றும் தன் உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனாலும் ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு தன்னால் சேவை செய்ய முடியும் என அறிவித்தார்.

ரசிகர்களும், தமிழக மக்களும் தன்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார்.

இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆனாலும் தலைவர் அரசியலுக்கு வர வேண்டும் என ரஜினி ரசிகர்கள் தினம் தினம் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் தர்ணா & ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் அறவழி அமைதி போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 10.01.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

“படையெடுத்து வாரீர்…
தலைவர் தலைமையேற்றிட..
தமிழகம் நலம் பெற்றிட மாற்றத்தை விரும்புவர்கள் அணி திரண்டு வாரீர்.”

என அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்தாண்டு மார்ச் 12ஆம் தேதி ரஜினி பேசும் போது.. “அரசியல் மாற்றத்திற்கான மக்கள் புரட்சி.. ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் எழுச்சி உருவானால் அரசியலுக்கு வருவேன்” என்று சொன்னார்.

ஒரு வேளை அந்த புரட்சியை உருவாக்கி அவரை அழைக்கிறார்களோ ரஜினி ரசிகர்கள்?

ரஜினி தன் முடிவை மறுபரிசீலனை செய்வாரா?

Rajini fans protest on Jan 10 in chennai

தன் மகளையும் சினிமாவில் களமிறக்கிய விஜய்சேதுபதி..; ‘முகிழ்’ படத்தில் இருவரும் கூட்டணி

தன் மகளையும் சினிமாவில் களமிறக்கிய விஜய்சேதுபதி..; ‘முகிழ்’ படத்தில் இருவரும் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mugizhஅருண்குமார் இயக்கிய ‘சிந்துபாத்’ படத்தில் விஜய்சேதுபதி உடன் அவரது மகன் சூர்யாவும் நடித்திருந்தார்.

தற்போது தன் மகள் ஸ்ரீஜாவையும் தன்னுடன் இணைந்து நடிக்க வைத்துள்ளார்.

யமக்கள் செல்வன் விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள ‘முகிழ்’ எனும் படம்.

எதார்த்த மனிதர்கள் முதல் எதார்த்தம் மீறிய மனிதர்கள் வரை எல்லோரையும் தனது நடிப்பால் திரையில் பிரதிபலிக்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ரெஜினா கசான்ட்ரா ஜோடியாகவும், 12 வயது பெண்ணுக்குத் தாயாகவும் மிக இயல்பாக நடித்துள்ளார்.

மேலும் முதல்முறையாக விஜய்சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் இப்படம் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் குறித்து இயக்குநர் கார்த்திக் பேசும்போது,

“ரொம்ப லைவ்-ஆன படம் இது. விஜய்சேதுபதி டிரைலரைப் பார்த்துவிட்டு, அவரின் சொந்த அனுபவங்கள் பலவற்றைப் பகிர்ந்து கொண்டார்.

தன் சொந்த வாழ்வோடு கனெக்ட் செய்யும் விதமாகவும் இந்த டிரைலர் இருப்பதாக சிலாகித்தார். இந்த டிரைலர் என்னை நிறைய பேசவைத்துள்ளது, எல்லாம் இந்தப்படம் செய்த வேலை என்றார்.

மேலும் “ஒரு பேமிலிமேனாக எனக்கு நிறைவா இருக்கு” என்றார். அவரது பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் 100% சதவிகிதம் தகுதியான படமாக ரசிகர்களின் பார்வைக்கும் இப்படம் இருக்கும்.

ரெஜினா கசான்ட்ரா இப்படத்தில் அவரே டப்பிங் பேசியுள்ளார். டப்பிங் பேசுவதற்காக அவர் மிகவும் மெனக்கெட்டுள்ளார், முதல் முறையாக தமிழில் டப்பிங் பேசியுள்ளதால் மிகவும் சிரத்தை எடுத்து அழகாகப் பேசியுள்ளார்.

படத்தின் கதை, ஒரு பெற்றோர் ஒரு குழந்தையை எப்படி வளர்க்கிறார்கள்..

அந்தக்குழந்தையாலும் அந்தக்குழந்தைக்கும் ஒரு பிரச்சனை வரும்போது பெற்றோர் அதை எப்படி கையாள்கிறார்கள் என்பதை மிக அழகாகச் சொல்லியுள்ளோம்.

இப்படத்தின் டிரைலரைப் பார்த்த அனைவரும் மிகப்பெரிய பாராட்டுக்களைக் கொடுத்து வருகிறார்கள். அது எங்களுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது” என்றார்.

இப்படத்தின் இசை அமைப்பாளராக ரேவா என்ற பெண் இசை அமைப்பாளர் தமிழில் அறிமுகம் ஆகிறார்.

இவர் மராட்டியிலும் மலையாளத்திலும் இசை அமைத்துள்ளார். மேலும் இப்படத்தின் டிரைலரில் வரும் பாடல் அனைவராலும் திரும்ப திரும்ப கேட்கும் விதத்தில் அமைந்துள்ளது. ஒருமுறை கேட்டாலே பலமுறை மனதில் ஓடும்படி ரேவா மிக கேட்சியான ட்யூனை அமைத்துள்ளார், இதுபோல மேலும் இரண்டு பாடல்கள் இருக்கிறது.

ஒளிப்பதிவாளராக சத்யா பணியாற்றி இருக்கிறார். இவர் தமிழில் கழுகு படத்தில் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தற்போது பாலிவுட்டிலும் ஒரு படம் செய்திருக்கிறார். முகிழில் கதைக்கு ஏற்ற கேமராக்கோணங்களை அமைத்துள்ளார்.

96 படத்தின் எடிட்டிங் மூலம் மக்களின் மனதில் பதிந்து எடிட்டர் கோவிந்தராஜ் இப்படத்தில் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

இப்படம் விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளது..

Vijay sethupathi daughter plays important role in Mugizh

‘ஆற்றல்’ படத்தில் ஓர் அதிசயம்..; நடிகர் விதார்த்தோடு இணைந்து நடித்த கார்.

‘ஆற்றல்’ படத்தில் ஓர் அதிசயம்..; நடிகர் விதார்த்தோடு இணைந்து நடித்த கார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aatralசெவ்வந்தி மூவிஸ் தயாரிப்பில் நடிகர் விதார்த் நடிக்கும் படம் ஆற்றல்.

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியானது .

இந்தப்படத்தில் விதார்த்தோடு இணைந்து ஒரு கார் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருக்கிறதாம்.

ஒரு கார் எப்படி மனிதனுக்கு ஒரு மனிதன் போல உதவ முடியும் , டெக்னலாஜியை வைத்து எப்படி எல்லாம் மனிதனுக்கு உதவி செய்யமுடியும் என்பதை இந்தப்படம் பேசுகிறது .

படம் முழுக்கஒரு காரை ஒரு கதாபாத்திரமாக வடிவமைத்து அதை ரசிக்கும் விதமாக படமாக்கியிருக்கிறோம் , படம் பார்ப்பவர்களுக்கு இது புதுமையாக இருக்கும்.

ஒரு கார் எப்படி நடித்திருக்க முடியும் என்பவர்களுக்கு படம் பார்க்கும் பொழுதுதான் தெரியும் என்கிறார் இயக்குனர் கே எல் கண்ணன்.

படத்தில் வில்லனாக வம்சி கிருஷ்ணா , கதாநாயகியாக ஸ்ரிதா , மற்றும் சார்லி முக்கிய கதாபாத்திரத்திலும் , வையாபுரி, விக்கி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள் .

ஒளிப்பதிவு – கொளஞ்சி குமார் .
இசை – அஸ்வின் ஹேமந்த்

எடிட்டர் – விஜய் வேலுக்குட்டி

பாடல்கள் – விவேகா

கலை – வீரசமர்

Pro . Guna.

Car plays importnat role n Vidharth’s Aatral

#BREAKING திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளிக்க விஜய் & சிம்பு கோரிக்கை..; அரசு அனுமதி

#BREAKING திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளிக்க விஜய் & சிம்பு கோரிக்கை..; அரசு அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Simbuகொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம் 17ந் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு கடந்தாண்டு நவம்பர் 10 முதல் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது.

50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டது.

மாஸ்டர் ரிலீஸ்… விஜய் வேண்டுகோள்.; முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் பேட்டி

எனவே இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டியும் இருக்கையில் தடுப்பு வைத்தும் தடுத்து வைத்தும் தியேட்டர்கள் இயங்கி வந்தன.

இதனால் சிறிய படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ரிலீசாகின.

இந்த நிலையில் 2021 பொங்கலுக்கு ரிலீசாகும் மாஸ்டர், ஈஸ்வரன் படத்திற்காக 100% இருக்கைகளுக்கு அனுமதியளிக்க விஜய், சிம்பு ஆகியோர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்

இவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் தமிழக அரசு அனுமதியளித்து இன்று ஜனவரி 4 அரசாணை வெளியிட்டுள்ளது.

TN govt allowing 100% occupancy in theatres

நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள்..; என் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ பாருங்கள்.. விஜய் ரசிகர்கள் ‘ஈஸ்வரன்’ பாருங்கள்… – சிம்பு அறிக்கை

நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள்..; என் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ பாருங்கள்.. விஜய் ரசிகர்கள் ‘ஈஸ்வரன்’ பாருங்கள்… – சிம்பு அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay simbuஇனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்!

“ஈஸ்வரன்” பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான்.

திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம்.

அதற்காகத்தான் இந்தக் கொராணா காலத்திலும் வெகுபிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில் நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல.

இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதேசமயம் அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய, அந்த மீடியமிற்கு செய்யும் மரியாதை.

அதில் எனது பங்கும் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள். மக்கள் எங்களைத் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள்.

அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டிருக்கலாம். ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டுமென பொறுத்திருந்து வெளியிடுகிறார்.

திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும்போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வரத் தொடங்குவார்கள்.

என் ரசிகர்கள், மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள்.

திரையரங்குகள் நிறையட்டும். கொராணா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றிபெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாக வேண்டும். அதற்கு இந்தப் படங்கள் நிச்சயம் உதவும். உங்களை மகிழ்விக்கும்.

விநியோகஸ்தர்கள், திரையரங்குகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டு வரவேண்டும்.

திரையுலகம் செழிக்க வேண்டும்.

அதற்கான வாசலை மாஸ்டரும், ஈஸ்வரனும் செய்யும் என்று நம்புகிறேன்.

அரசாங்கம் கடைகள், மால்கள் , கடற்கரை என எல்லாமே முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டன.

திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டாலொழிய அந்த பழைய நிலை வராது.

வசூல் நஷ்டமே ஏற்படும். அரசும் தயைகூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து, பாதுகாப்பு விதிகளை அதிகரித்து, திரையரங்க உரிமையாளர்களையும், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விரைந்து தமிழ்ப் புத்தாண்டிற்குள் நூறு சதவீத இருக்கை ஆக்ரமிப்பு குறித்து உத்தரவிட்டால், மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

நன்றி

#அன்புசெய்வோம்

இவண்

உங்கள்

சிலம்பரசன் TR

STR asks audiences to watch both Master and Eeswaran this Pongal in theatres

குரூப் 1 தேர்வில் ‘பரியேறும் பெருமாள்’ படம் பற்றிய கேள்வி

குரூப் 1 தேர்வில் ‘பரியேறும் பெருமாள்’ படம் பற்றிய கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TNPSC asks questions on Pariyerum Perumal movieபா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய படம் ‘பரியேறும் பெருமாள்’.

2018ல் வெளியான இந்த படத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தை அனைவருமே பாராட்டினர். பல விருதுகளை வென்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இன்று நடைப்பெற்ற குரூப் 1 தேர்வு கேள்வியில் இந்த படம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அந்த கேள்வியில் ‘தலைசிறந்த படைப்பான பரியேறும் பெருமாள் என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்து கீழ்காணும் கூற்றுகளில் தேர்வு செய்யவும்’ என்றுக் கூறி சில ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த கேள்வியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பரியேறும் பெருமாள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

TNPSC asks questions on Pariyerum Perumal movie

 

pariyerum perumal question in govt question paper

More Articles
Follows