தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் தன் உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
ஆனாலும் ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு தன்னால் சேவை செய்ய முடியும் என அறிவித்தார்.
ரசிகர்களும், தமிழக மக்களும் தன்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார்.
இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆனாலும் தலைவர் அரசியலுக்கு வர வேண்டும் என ரஜினி ரசிகர்கள் தினம் தினம் வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் தர்ணா & ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் அறவழி அமைதி போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 10.01.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
“படையெடுத்து வாரீர்…
தலைவர் தலைமையேற்றிட..
தமிழகம் நலம் பெற்றிட மாற்றத்தை விரும்புவர்கள் அணி திரண்டு வாரீர்.”
என அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்தாண்டு மார்ச் 12ஆம் தேதி ரஜினி பேசும் போது.. “அரசியல் மாற்றத்திற்கான மக்கள் புரட்சி.. ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் எழுச்சி உருவானால் அரசியலுக்கு வருவேன்” என்று சொன்னார்.
ஒரு வேளை அந்த புரட்சியை உருவாக்கி அவரை அழைக்கிறார்களோ ரஜினி ரசிகர்கள்?
ரஜினி தன் முடிவை மறுபரிசீலனை செய்வாரா?
Rajini fans protest on Jan 10 in chennai