தேர்தல் முடிவுகள் வர தாமதமாகும்.; புதுச்சேரி் மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் வர தாமதமாகும்.; புதுச்சேரி் மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மாநலத்திலும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

அங்குள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நாளை நடைபெற உள்ளது.

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை லாஸ்பேட்டை அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி ஆகிய 3 மையங்களில் நடைபெறுகிறது.

காரைக்காலின் 5 தொகுதிகளுக்கு காரைக்கால் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்க அறையில் செய்தியாளர்களை பூர்வா கார்க் சந்தித்தார்.

“மத்திய அரசின் கொரோனா விதிமுறைகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள், உயர்நீதிமன்ற உத்தரவு ஆகியவை வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டும்.

கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யும் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அல்லது 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

அந்த நபர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தினுள் அனுமதி வழங்கப்படும்.

அவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்து கொண்டு வர வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைவரும் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அங்கு முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்படும்.

பிபிஇ கிட் வேண்டுமாலும் வாங்கிக் கொள்ளலாம்.

வெற்றி வேட்பாளர் சான்றிதழ் பெற வரும்போது 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி வெற்றி ஊர்வலம் நடத்தக்கூடாது.

கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. எனவே கூட்டம் கூடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு அறைக்கு 7 டேபிள்கள் போடப்பட்டது. தற்போது கொரோனா விதிகளை பின்பற்றப்படுவதால் ஒரு அறைக்கு 5 டேபிள்கள் மட்டுமே போடப்பட்டுள்ளது.

இதனால் தேர்தல் முடிவுகள் வர சற்று காலதாமதம் ஆகலாம்.

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளில் காலை 8 மணிக்கு, முதல் 8 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.

முன்னணி நிலவரம் 10 மணிக்கு தெரியவரும். இதன் முடிவு 12.30 மணி வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது கட்டமாக 1 மணிக்கு 8 தொகுதிகள் எண்ணப்படுகிறது. அதன் முடிவுகள் தெரிய 6 மணி வரை ஆகலாம்.

இறுதியாக மாலை 6 மணிக்கு 7 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இதன் முடிவு தெரிய நள்ளிரவு வரை ஆகலாம். ஒவ்வொரு தொகுதிக்கும் 4 முதல் 5 சுற்றுவரை செல்ல வாய்ப்புகள் உள்ளது.

நாளை ஞாயிறு ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்புடன் இருக்க வேண்டும்” என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

Puducherry Election Result will be delay says District Collector Purva Garg

2 வாரம் எல்லா கடையும் மூடுறோம்..; டாஸ்மாக்ல மட்டும் கொரோனா வராதா..? – வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் கேள்வி

2 வாரம் எல்லா கடையும் மூடுறோம்..; டாஸ்மாக்ல மட்டும் கொரோனா வராதா..? – வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா தொற்றின் பாதிப்பு தமிழகத்தில் தினம் தினம் அதிகரித்து வருகிறது.

எனவே கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுவதாகவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வார நாட்களில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள அனைத்து பெரிய கடைகளும் அடைக்கப்பட வேண்டும்.

உணவகங்கள், டீக்கடைகளில் பார்சல் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 15 நாட்கள் முழு ஊரடங்கு என்று அரசாங்கம் முடிவெடுத்தால் கடைகளை முழுமையாக அடைத்து ஒத்துழைப்பு தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

அதே சமயம்.. எந்த அடிப்படையில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் மூடப்பட வேண்டும் என்பதற்கு உரிய காரணங்கள் ஏதும் இல்லை என கேட்டுள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசலில் மதுபானங்களை வாங்கும்போது ஏற்படாத கொரோனா தொற்று, அத்தியாவசிய பொருள்களை வாங்கும் போது ஏற்படுகிறது என்பது ஏற்படையது அல்ல.

அரசின் இச்செயல் ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் விக்கிரமராஜா.

Will TN Govt close Tasmac shops for 2 weeks

‘கடைசி எச்சரிக்கை’ தரும் டவுட் செந்தில்.; தாணு சீமான் பாக்யராஜ் ஜிவிபி ஜஸ்டின் பிரபாகரன் & ஆரி ஆதரவு

‘கடைசி எச்சரிக்கை’ தரும் டவுட் செந்தில்.; தாணு சீமான் பாக்யராஜ் ஜிவிபி ஜஸ்டின் பிரபாகரன் & ஆரி ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ‘கடைசி எச்சரிக்கை’ எனும் 23 நிமிட குறும்படத்தை இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்கள் இன்று வெளியிட்டார்.

சுகுமார் கணேசன் எழுதி இயக்கியுள்ள படம் கடைசி எச்சரிக்கை.

மனிதனின் உணவுப் பழக்கம், சுற்றுச் சூழல் சீர்கேடு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் ‘கடைசி எச்சரிக்கை’

23 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் நாயகனாக சன் டிவி புகழ் டவுட் செந்தில் நடித்துள்ளார். அவருடன் நெல்லை சிவா, அமிர்தலிங்கம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை முன்னணி ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவர்கள் வெளியிட, முன்னணி மற்றும் முன்னோடித் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு அவர்கள் டீசரை வெளியிட்டு வாழ்த்தினார்.

படத்தின் ட்ரைலரை இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் வெளியிட்டார்.

பாடல்களை முன்னணி இசையமைப்பாளர்களான ஜிவி பிரகாஷ் மற்றும் ஜஸ்டின் பிரபாகரன் வெளியிட்டனர்.

மேலும் இப்படத்தை பார்த்து நடிகர் ஆரி அர்ஜுனன், சமீபத்தில் கலைமாமணி விருது பெற்ற சண்டை இயக்குனர்
ஜாகுவார் தங்கம், ஹீலர் பாஸ்கர் மற்றும் இசையமைப்பாளர் தாஜ் நூர் அவர்களும் படத்தை வெகுவாக பாராட்டி வாழ்த்தியுள்ளனர் .

இப்போது படத்தை நடிகர் மற்றும் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்கள் வெளியிட்டு வாழ்த்தினார்.

இத்தனை பிரபலங்கள் மொத்தமாக பாராட்டியது கடைசி எச்சரிக்கை குறும்படத்திற்கான மிகப் பெரிய அங்கீகாரமாகும்.

மேலும், 2020ம் ஆண்டு நடந்த கிளப்பி மினி மூவி ஃபெஸ்டிவலில் சிறந்த படத்துக்கான விருது, செய்ஹர் தேசிய திரைப்பட விழாவில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது, கோல்டன் ஸ்பேரோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது உள்பட மொத்தம் 6 விருதுகளை ‘கடைசி எச்சரிக்கை’ படம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது..

*கடைசி எச்சரிக்கை*

நடிகர்கள் – கலைஞர்கள் விவரம்:

நடிப்பு: டவுட் செந்தில், நெல்லை சிவா, அமிர்தலிங்கம்.

தயாரிப்பு: அரவிந்தன் V
என்டர்டெயின்மெண்ட் வ. சீனிவாசன்

எழுத்து – இயக்கம் : சுகுமார் கணேசன்

பாடல்கள் : சுகுமார் கணேசன்

இசை: ஏஐஎஸ் நவ்ஃபால் ராஜா

ஒளிப்பதிவு: வி சந்திரசேகர்

படத்தொகுப்பு: தீபக், விஜய் சங்கர், எம். கோடீஸ்வரன்

ஸ்டுடியோ: நாக் ஸ்டுடியோ

மக்கள் தொடர்பு: எஸ் ஷங்கர்

Doubt Senthil starring The Last Warning This movie won 6 awards

தன் 40வது பிறந்தநாளை தன் மகளுடன் கொண்டாடிய விஜய்-அஜித் பட நடிகை

தன் 40வது பிறந்தநாளை தன் மகளுடன் கொண்டாடிய விஜய்-அஜித் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

surekha vaniவிஜய்யுடன் ‘மெர்சல்’ மற்றும் ’மாஸ்டர்’ ஆகியப் படங்களிலும், அஜித்துடன் ‘விஸ்வாசம்’ படத்திலும் நடித்தவர் சுரேகா.

மேலும் பல தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் நடிகை சுரேகா வாணி.

இவர் தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அந்த கொண்டாட்டத்தில் இவரது மகள் சுப்ரிதாவும் கலந்துக் கொண்டார்.

பர்த்டே பார்ட்டி கொண்டாட்ட வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சுரேகா வாணி.

விரைவில் தெலுங்கு சினிமாவில் தன் மகள் சுப்ரிதாவை நாயகியாக்க உள்ளார் சுரேகா.

Actress Sureka Vani celebrated birthday with her daughter

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் மே 1ல் தொடங்காது..; மாநகர ஆணையர் அதிர்ச்சி தகவல்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் மே 1ல் தொடங்காது..; மாநகர ஆணையர் அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பிறகு மாநகர ஆணையர் பிரகாஷ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது…

“கொரோனா 2ம் அலை தீவிரமாக உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டை காட்டிலும் சென்னையில் 3 மடங்கு கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் பரிசோதனையின் போது 20% பாசிட்டிவ் ஏற்படுகிறது.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் மே 1 நாளையே உடனடியாக அமலுக்கு வராது. அதற்கான வாய்ப்பு தற்போது இல்லை.

தற்போது போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லை. எனவே திட்டம் நாளை தொடங்காது.

ஆனால் அதே நேரம் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் தொடர்ந்து செலுத்தப்படும்.

சென்னையில் 1.46 ஆக கொரோனா இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

தடுப்பூசி இருப்பை பொறுத்தே 2ம் தவணை செலுத்த முடியும். சிலருக்கு 2ம் தவணை தடுப்பூசிகள் தாமதமாகிவிட்டது.

2, 3 நாட்கள் தாமதமாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் தவறில்லை.

30 வயதை ஒட்டிய இளைஞர்கள் சிலர் அலட்சியமாக உள்ளனர்.

சாதாரண காய்ச்சல் என அலட்சியமாக இருக்காமல் உடனடியாக சோதனை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா பாதிப்பால் சிகிச்சை எடுப்பதில் யாரும் வெட்கப்படக்கூடாது.”

என மாநகர ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu not in a position to kick-start the vaccination for 18+ people

விஜய்சேதுபதியை அடுத்து சென்ராயனுக்கு ‘கோமாளி’ போட்டோ ஷூட் நடத்திய ராமசந்திரன்

விஜய்சேதுபதியை அடுத்து சென்ராயனுக்கு ‘கோமாளி’ போட்டோ ஷூட் நடத்திய ராமசந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் சென்ராயன்.

‘மூடர் கூடம்’ என்ற படத்தில் இவர் காமெடியனாக அறியப்பட்டாலும் ஜீவா நடித்த ‘ரௌத்திரம்’ படம் மூலம் வில்லனாக அடையாளம் காணப்பட்டார்.

2019ல் கமல் நடத்திய ‘பிக்பாஸ் சீசன் 2’-ல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் சென்ராயன்.

இந்த நிலையில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக புகழ் போட்டோகிராஃபர் ராமசந்திரன் நடத்திய போட்டோஷூட் ஒன்றில் பங்கேற்றார் சென்ராயன்.

இதன் மூலம் கொரோனா காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அதில் விளக்கியுள்ளார்.

கோமாளியாக இருந்துவிட்டால் கொரோனா நம்மை தொற்றிக் கொ(ல்)ள்ளும் எனவே பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி உள்ளனர்.

கொரோனா தொற்றை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்ற விழிப்புணர்வுக்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக கூறினார் போட்டோகிராஃபர் எல். ராமச்சந்திரன்.

எல். ராமச்சந்திரன் பற்றிய சிறுகுறிப்பு..

தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் அருகேயுள்ள வலங்கைமான் ஊரில் பிறந்தவர் எல். ராமசந்திரன்.

தனது படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்துள்ளார். கடுமையாக உழைத்து தற்போது படிப்படியாக முன்னேறி வருகிறார்.

உலகளவில் பிரபலமான பிளே பாய், மேக்ஸிம் உள்ளிட்ட மேகஸின்களுக்கு புகைப்படக் கலைஞராக பணியாற்றி புகழ்பெற்றவர்.

யாஷிகா ஆனந்த், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட நடிகைகளை மிக அழகாக அவர்களே வியக்கும் வண்ணம் போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்.

2020ல் கொரோனா லாக்டவுன் நேரத்தில் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்த ஒரு மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக விஜய்சேதுபதிக்கும் ஒரு வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தியிருந்தார்
ராமச்சந்திரன்.

Sendrayan comali photoshoot by photographer L Ramachandran

IMG-20210430-WA0048

IMG-20210430-WA0049

More Articles
Follows