தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போது தயாரிப்பாளர்களுக்காக மூன்று முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார்.
1, படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்கள் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், டெக்னிஷியன்கள் உள்ளிட்டவர்கள் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியத்திலிருந்து 30 சதவீதம் சம்பளத்தை தயாரிப்பாளர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்.
02. இந்த காலக்கட்டத்தில் 3 மாதங்கள் வட்டியோ, இஎம்ஐயோ வாங்க வேண்டாம் என்று வங்கிகளுக்கும், மற்ற நிதி நிறுவனங்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சினிமாவில் உள்ள பைனான்சியர்களும் இதை ஏற்று 3 மாதத்திற்கு வட்டி தொகையை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
இயல்பு நிலை திரும்பியதும் நல்ல முறையில் படத்தினை முடித்து வெளியிட உதவியாக இருக்கும்.
03. ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பு வெளியாகி ஓடிக்கொண்டிருந்த படங்களுக்கு இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்வதற்கு முன்னுரிமைக் கொடுக்க வேண்டும்.
தியேட்டர்கள் உரிமையாளர் சங்கத்திற்கும், விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கும் வேண்டுகோள் வைக்கிறேன்.
அதோடு வெளியீட்டுக்கு தயாராக உள்ள சிறிய படங்கள் வெளியிட முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் மற்ற தயாரிப்பாளர்களின் மனநிலையை உணர்ந்து சொல்கிறேன்.
என தயாரிப்பாளர் ஜேஎஸ்கே தெரிவித்துள்ளார்.