தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘துருவங்கள் பதினாறு’ என்ற தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் டைரக்டர் கார்த்திக் நரேன்.
இதனையடுத்து அவரது இயக்கத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
சில மாதங்களில் ‘நரகாசூரன்’ படத்தை அறிவித்தார். படப்பிடிப்பும் நடைபெற்றது. ஆனால் படம் வெளியாகவில்லை.
சில நாட்களில் ‘நாடக மேடை’ என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார் கார்த்திக் நரேன்.
ஆனால் அந்த படமும் தயாராகவில்லை.
இந்நிலையில் அருண் விஜய்யை வைத்து கார்த்திக் நரேன் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த படத்திற்கு ‘மாபியா’ என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கவுள்ளதாக கூறப்பகிறது.
நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க. வில்லனாக பிரசன்னா நடிக்கிறாராம்.
விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
Prasanna turns villain for Arun Vijay in Karthick Narens next