‘மாபியா’வில் இணையும் அருண் விஜய்-பிரசன்னா-கார்த்திக் நரேன்

‘மாபியா’வில் இணையும் அருண் விஜய்-பிரசன்னா-கார்த்திக் நரேன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prasanna turns villain for Arun Vijay in Karthick Narens next‘துருவங்கள் பதினாறு’ என்ற தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் டைரக்டர் கார்த்திக் நரேன்.

இதனையடுத்து அவரது இயக்கத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

சில மாதங்களில் ‘நரகாசூரன்’ படத்தை அறிவித்தார். படப்பிடிப்பும் நடைபெற்றது. ஆனால் படம் வெளியாகவில்லை.

சில நாட்களில் ‘நாடக மேடை’ என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார் கார்த்திக் நரேன்.

ஆனால் அந்த படமும் தயாராகவில்லை.

இந்நிலையில் அருண் விஜய்யை வைத்து கார்த்திக் நரேன் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்திற்கு ‘மாபியா’ என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கவுள்ளதாக கூறப்பகிறது.

நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க. வில்லனாக பிரசன்னா நடிக்கிறாராம்.

விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Prasanna turns villain for Arun Vijay in Karthick Narens next

ரஜினி-விஜய்-அஜித் ரசிகர்களுக்கு சவால் விட்ட சூர்யா ரசிகர்கள்

ரஜினி-விஜய்-அஜித் ரசிகர்களுக்கு சவால் விட்ட சூர்யா ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya fans set Worlds Biggest Cut Out for NGK releaseசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா முதன்முறையாக நடித்துள்ள படம் என்ஜிகே.

இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் இசையமைத்துள்ளார்.

இந்த கூட்டணிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நாளை மறுநாள் மே 31ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தை வரவேற்கும் நிலையில் சூர்யா ரசிகர்கள் அதிரடியாக மிகப்பெரிய கட் அவுட்தை திருத்தணியில் வைத்துள்ளனர்.

இதன் உயரம் மட்டும் 215 அடி என தெரிய வந்துள்ளது.

இதுவரை மற்ற நடிகர்களின் ரசிகர்கள் வைத்த கட் அவுட்களை இது மிஞ்சியுள்ளது.

ரஜினியின் பல படங்களுக்கு அவரது ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர்.

அதுபோல் சர்கார் பட ரிலீசின் போது கேரளாவில் விஜய்க்கு 175 அடியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டும், அதனைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்துக்காக அஜித்துக்கு திண்டுக்கல்லில் 190 அடியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டும் தான் மிகப்பெரிய கட்-அவுட் சாதனைகளாக இருந்தன.

மேலும் உலகத்தின் மிகப்பெரிய கட்அவுட் எனவும் ட்விட்டரில் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.

சூர்யா ரசிகர்களின் இந்த சாதனை இந்திய சினிமாவையே அதிர வைத்துள்ளது எனலாம்.

Suriya fans set Worlds Biggest Cut Out for NGK release

வினோத் இயக்கும் அரசியல் கதையை அவாய்ட் செய்த அஜித்

வினோத் இயக்கும் அரசியல் கதையை அவாய்ட் செய்த அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith avoid political story in his next movie Thala 60வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தை தயாரித்து வருகிறார் போனி கபூர்.

இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதே கூட்டணி மீண்டும் அஜித்தின் அடுத்த படத்திற்கும் இணைகிறது என்பதை பார்தோம்.

அப்படத்திற்காக அஜித்திடம் இரண்டு கதைகளைச் சொன்னாராம் இயக்குனர் வினோத்.

அதில் ஒரு கதை சமூகப் பிரச்சினை அலசும் கதையாம். மற்றொரு கதை அரசியல் கதையாம்.

ஆனால் அரசியல் கதை வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அஜித்.

மற்றொரு கதையான சமூக பிரச்சினையில் அதற்கான தீர்வு உள்ளதாம். எனவே தனக்கு அது செட்டாகும் என நினைத்து அதை ஓகே பண்ணி விட்டாராம் தல.

Ajith avoid political story in his next movie Thala 60

இதெல்லாம் ஒரு..??; ‘நேசமணி’ வடிவேலுவை ட்ரெண்டாக்கிய நெட்டிசன்கள்

இதெல்லாம் ஒரு..??; ‘நேசமணி’ வடிவேலுவை ட்ரெண்டாக்கிய நெட்டிசன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vadivelu Memes Pray for Nesamani became WW trend in twitterநாட்டில் எதுவும் பரபரப்பாக பேசப்பட்டால் அதை பற்றி மீம்ஸ் கிரியேட் செய்து ட்விட்டர் மற்றும் இணையத்தளங்களில் ட்ரெண்டாக்குவது நெட்டிசன்களில் பொழுதுபோக்குகளில் ஒன்றாகும்.

அரசியல் தலைவர்கள் அல்லது பிரபலங்கள் ஏதாவது ஒரு வார்த்தையை தவறாக உளறிவிட்டால் அதை லட்சக்கணக்கில் பேசுவதே இவர்களின் வேலையாகும்.

சிலது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதை செய்யலாம். ஆனால் சில நேரங்களில் பொய்யான ஒன்றையும் ட்ரெண்ட்டாக்குவதும் இவர்கள்தான்.

இவர்களை ட்விட்டர் போராளிகள் என்று அழைக்கும் பழக்கமும் உண்டு.

சில நேரம் நமக்கு தெரியாத நல்ல விஷயங்களை இவர்களே பரப்பியும் வருகின்றனர். அதையும் நம்மால் மறுக்கமுடியாது என்பதே உண்மை.

இந்த நிலையில் இன்று அவர்களுக்கு எந்த செய்தியும் கிடைக்கவில்லை போலும்.

ஆனால் சுத்தியல் பற்றி ஒரு கேள்வி ஒரு தளத்தில் இடம்பெற்றது. அதை வைத்து பலரும் பேச… அதுவும் ட்ரெண்ட்டானது.

விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

அதில் வடிவேலுவின் காண்டிராக்டர் நேசமணி என்ற கேரக்டர் பலரது பாராட்டையும் பெற்றது.

ஒரு காட்சியில் அவர் தலையில் சுத்தியல் விழும். அந்த காட்சியை வைத்து பல மீம்ஸ்களை கிரியேட் செய்து இந்தியாவே வியக்கும் அளவுக்கு ட்ரெண்ட் செய்துள்ளனர்.

மேலும் இது ட்ரெண்ட்டிங்கில் உலகளவில் 4வது இடத்தையும் ட்விட்டரில் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pray for Nesamani என்ற வார்த்தையே தான் அவர்கள் ட்ரெண்டாக்கினர்.

இதை நாம் என்ன சொல்வது..? அட நல்லா வச்சி செய்யிறாங்கய்யா… இதெல்லாம் ஒரு வேலையா..?

Vadivelu Memes Pray for Nesamani became WW trend in twitter

ஈரோடு செளந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் “அய்யா உள்ளேன் அய்யா”

ஈரோடு செளந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் “அய்யா உள்ளேன் அய்யா”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)மாபெரும் வெற்றி பெற்ற சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் போன்ற படங்களின் கதை வசனம் எழுதியவர் ஈரோடு செளந்தர்.

அத்துடன் முதல் சீதனம், சிம்மராசி படங்களையும் இயக்கி இருக்கிறார்.

குடும்பக் கதைகளை செண்டிமெண்ட் கலந்து வசங்கள் மூலம் அதற்கு உயிர் கொடுக்கும் வித்தை

அறிந்தவர் இவர். அதனால் தான் சேரன் பாண்டியன், நாட்டாமை படத்தின் கதைக்காகவும்

சிம்மராசி படத்திற்கு வசனத்திற்காகவும் தமிழக அரசு விருது கொடுத்து கெளரவித்தது.

இவர் இயக்கும் புதிய படத்திற்கு ” அய்யா உள்ளேன் அய்யா” என்று தலைப்பு வைத்திருக்கிறார்.

இந்த படத்தில் தனது பேரன் கபிலேஷ் என்பவரை கதா நாயகனாக களம் இறக்குகிறார்.

இன்னொரு எதிர் மறை நாயகனாக தனது தம்பி மகன் பால சபரீஸ்வரன் என்பவரை களம் இறக்குகிறார்.

கதா நாயகியாக பிரார்த்தனா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

மற்றும் மனோபாலா, லிவிங்ஸ்டன், பாவா லட்சுமணன், நளினி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர் 15 வருடங்களுக்கு முன் சமுத்திரம் பட த்திற்கு கதை வசனம் எழுதினார்..கே.எஸ் ரவிகுமாரிடம் உதவியாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

ஒளிப்பதிவு – சந்துரு

இசை – மகேந்திரன்

தயாரிப்பு – வீர ஸ்ரீ சந்தன கருப்பராயன் புரொடக்‌ஷன்ஸ்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஈரோடு செளந்தர்.

படப்பிடிப்பு 4ம் தேதி ஈரோட்டில் துவங்கிறது.

10 ம் வகுப்பு பள்ளிக்கூட கதை என்பதால் இந்த கதைக்கு 10 ம் வகுப்பு படிக்கும் தனது பேரன் சரியாக இருக்கும் என்பதால் நாயகனாக அறிமுகப் படுத்துகிறேன்.

மாணவர்களின் எதிர்காலம் என்பது 10 ம் வகுப்பிலிருந்து 12 ம் வகுப்பு கால கட்டம் தான்..அதை மட்டும் மனதில் வைத்து மாணவர்கள் செயல்பட்டால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்..கொஞ்சம் தடம் மாறினாலும் அவர்கள் வாழ்க்கை திசை மாறி விடும் என்கிற கருத்தை சொல்கிற படமாக “அய்யா உள்ளேன் அய்யா” உருவாகிறது என்றார் ஈரோடு செளந்தர்.

அமெரிக்காவில் முதல் முறையாக யுவன் ஷங்கர் ராஜா – விஜய் சேதுபதி கலக்கும் பிரமாண்ட இசை – நடன நிகழ்ச்சி

அமெரிக்காவில் முதல் முறையாக யுவன் ஷங்கர் ராஜா – விஜய் சேதுபதி கலக்கும் பிரமாண்ட இசை – நடன நிகழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)அமெரிக்க மண்ணில் முதல் முறையாக சான் ஓசே நகரில் தென்னிந்தியை திரை நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடக்கிறது.

யு1ஸ்டார் நைட் (U1Star Nite) என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்வில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி பாடகர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இவர்களுடன் மக்கள் செல்வன், தமிழ் திரையுலகின் நம்பிக்கை நாயகன் விஜய் சேதுபதி கலந்து கொள்கிறார்.

ஜூலை 6-ம் தேதி மாலை 6 மணிக்கு, கலிபோர்னியாவின் சான் ஓசே நகரில் உள்ள சிட்டி நேஷனல் சிவிக் (City National Civeic) அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா, விஜய் சேதுபதி, விஜய் யேசுதாஸ், ஹரிச்சரண், ராகுல் நம்பியார், ரஞ்சித், தன்வி ஷா, ரம்யா என்எஸ்கே, பவதாரிணி, ஆலப் ராஜு மற்றும் குழுவினர் பங்கேற்கின்றனர்.

இவர்களுடன் நடிகர்கள் மிர்ச்சி சிவா, டிடி, ஹரீஷ் கல்யாண், நடிகைகள் ரைசா வில்சன், ஜனனி அய்யர், யாஷிகா ஆனந்த், சஞ்சனா சாரதி, விஷ்ணுப்ரியா ஆகியோரும் கலந்து கொண்டு நடனமாடுகின்றனர்.

அமெரிக்காவில் இதுவரை இப்படியொரு பிரமாண்ட இசைக் கச்சேரி மற்றும் நடன நிகழ்ச்சி நடந்ததில்லை எனும் அளவில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.

8 கே மைல்ஸ் மீடியா ஆதரவில் பினாகின் ஸ்டுடியோஸ், ஹேமா சங்கர் ரியல்டர்ஸ் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

More Articles
Follows