தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், நயன்தாரா, விஜய்சேதுபதி, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் சைரா நரசிம்மா ரெட்டி நேற்று வெளியானது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிரஞ்சீவி படம் வெளியாவதால் ஆந்திரா, தெலுங்கானாவில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஆந்திராவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் 7 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களின் வேலைக்கே இநத் படம் ஆப்பு வைத்துள்ளது.
நேற்று காந்தி ஜெயந்தி என்பதால் நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன. ஆந்திர மாநிலத்தில் சமூக நலத்துறை சார்பாக பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டன. எனவே போலீஸ் பணியில் இருக்க வேண்டும் என்றும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இருந்தபோதிலும் கர்னூல் பகுதியை சேர்ந்த ரச்சர்லா, கோஸ்படு உள்ளிட்ட 7 போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை விட்டுவிட்டு முதல் நாள் முதல் காட்சி பார்க்க சென்றுவிட்டனர்.
இது உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றுவிட்டது.
எனவே 7 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சொல்லி டிஎஸ்.பிக்கு உத்தரவு போய் இருக்கிறது.
தற்போது 7 பேரின் வேலையும் கேள்விக்குறிக்குள்ளாகியுள்ளது.