தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்ரீரங்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா சண்டை பயிற்சியாளரும் நடிருமான கனல் கண்ணன் பங்கேற்றார்.
அவர் பேசும்போது.. “கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்’ என்று பேசியிருந்தார் கனல் கண்ணன்.
அவர் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று புகார்கள் போலீசில் வந்தன.
மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலர் குமரன் புகார் அளித்தார்.
எனவே இரு பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனால் தலைமறைவான கனல் கண்ணனை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் புதுச்சேரியில் தங்கியிருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் வரவே அங்கு விரைந்து சென்ற போலீசார் கனல் கண்ணனை கைது செய்தனர்.
இந்து முன்னணி நிர்வாகியும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணனுக்கு ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்றக் காவல் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.
Periyar remark Actor Stunt director Kanal Kannan arrested