ஓவிய கல்லூரி காதலைப் பற்றிய படம் *பார்த்திபன் காதல்*

ஓவிய கல்லூரி காதலைப் பற்றிய படம் *பார்த்திபன் காதல்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parthiban kadhalஎஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ பார்த்திபன் காதல் “

இந்த படத்தில் யோகி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

படம் பற்றி இயக்குனர் வள்ளிமுத்து..

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதிய களத்தில் இளமை கொஞ்சும் காதல் கதையாக உருவாக இருக்கிறது. அறிமுக நாயகன் யோகி ஓவிய கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இளம் கதாநாயகி வர்ஷிதா கிராமத்து கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.

சமீப கலாமாக தமிழ் சினிமாவில் காமெடிப்பேய் படங்களும், ஆக்ஷன் படங்களும் வந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் “ பார்த்திபன் காதல் “ ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது.

கும்பகோணம், ராஜபாளையம், தென்காசி போன்ற இடங்களில் விரைவில் படபிடிப்பு நடக்க இருக்கிறது என்றார் இயக்குனர் வள்ளிமுத்து.

ஒளிப்பதிவு – தங்கையா மாடசாமி. DF Tech

இசை – பில்லா

பாடல்கள் – யுகபாரதி

எடிட்டிங் – ஸ்ரீகாந்த் NB

கலை – S.M.சரவணன்

ஸ்டன்ட் – மகேஷ்

நடனம் – விஜிசதீஷ்

புகைப்பட கலை – ஜோஷ்வா

தயாரிப்பு மேற்பார்வை – ராஜசேகர்

மக்கள் தொடர்பு – மணவை புவன்

திரைக்கதை, வசனம் – S.குமரேசன் – ஜோ ஜார்ஜ்

கதை, இயக்கம் – வள்ளிமுத்து ( இவர் ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் தயாரித்த என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய P.ராஜபாண்டியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் )

அச்சமின்றி பட இயக்குனருடன் இணையும் அரவிந்த்சாமி

அச்சமின்றி பட இயக்குனருடன் இணையும் அரவிந்த்சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arvind swamiஅரவிந்த் சாமி நடிப்பில் `சதுரங்க வேட்டை-2′, `நரகாசூரன்’ மற்றும் `செக்கச் சிவந்த வானம்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளன.

தற்போது செல்வா இயக்கத்தில் `வணங்காமுடி’ படத்திலும், மாமங்கம் என்ற மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இதன்பின்னர் இமயவர்மன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகி இருக்கிறது.

`என்னமோ நடக்குது’, `அச்சமின்றி’ போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அரவிந்த்சாமி.

இவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

பரத் நடிக்கும் *காளிதாஸ்* பட டீசர் வெளியீட்டு தேதி

பரத் நடிக்கும் *காளிதாஸ்* பட டீசர் வெளியீட்டு தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bharathலீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’.

பரத் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடிகர் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

நாளைய இயக்குநர் சீசன் – 3 இல் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை முன்னேறிய ஸ்ரீசெந்தில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

இதன் இசை உரிமையை டிரெண்ட் மியூசிக் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

வருகிற ஜூலை 6-ஆம் தேதி இப்பட டீசர் வெளியாகவுள்ளது.

சட்டமன்றத்திற்கு சென்ற நடிகர் உதயநிதி.; அடுத்த திட்டம் என்னவோ.?

சட்டமன்றத்திற்கு சென்ற நடிகர் உதயநிதி.; அடுத்த திட்டம் என்னவோ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Udhayanidhi stalin visits legislative assembly todayஅரசியல் குடும்பத்தில் இருந்து வந்தாலும் அதில் ஈடுபடாது திரைத்துறையில் தயாரிப்பாளர் மற்றும், நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின்.

ஆனால் சமீபகாலமாக திமுக மேடைகளில் தலைகாட்டி வருகிறார்.

அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினால் பங்கேற்க முடியாத சில நிகழ்ச்சிகள் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறத் துவங்கியுள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்எல்ஏ-வும், உதயநிதியின் நண்பருமான அன்பில் மகேஷ் இன்று பேசவிருந்தார்.

இதைக் காண்பதற்காக உதயநிதி ஸ்டாலின் சட்டப் பேரவைக்கு வந்தார். பின்னர், அவர் பார்வையாளர்கள் மத்தியில் அவர் அமர்ந்தார்.

இதையடுத்து பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய அன்பில் மகேஷ், எதிர்வரிசையில் அமர்ந்திருக்கும் அமைச்சர்களில் எனக்கு மிகவும் பிடித்தது பாலகிருஷ்ணா ரெட்டியும், பாஸ்கரனும் தான் என்று கூறினார்.

அவர்களில் ஒருவர் சிரித்துக் கொண்டே இருப்பார், ஒருவர் மிக அமைதியாக இருப்பார். இதே நிலையை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனக் கூறினார்.

இதற்கு பதிலளித்த தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் அவர்கள் பாரம்பரிய அரசியல் குடும்பத்திலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக வந்திருக்கும் மகேஷ் வருவதும் தெரியாமல், போவதும் தெரியாமல் அமைதியாக வந்து செல்கிறார்.

அதுபோல, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதிகம் பேசாமல் வந்து செல்ல வேண்டும் எனக் கூறினார்.
இதுபோன்ற நிகழ்வுகளை கண்டு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Actor Udhayanidhi stalin visits legislative assembly today

மும்தாஜ் கண்டிப்பை மீறி மஹத்துக்கு முத்தம் கொடுப்பாரா யாஷிகா.?

மும்தாஜ் கண்டிப்பை மீறி மஹத்துக்கு முத்தம் கொடுப்பாரா யாஷிகா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Mahat Kiss Yaashika in Bigg Boss 2 Homeகமல் நடத்தும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது.

மமதி வெளியேற்றதற்கு பின்பு இது 3 -ஆவது வாரத்தில் 15 போட்டியாளர்களுடன் தொடர்கிறது.

தற்போது வீட்டிற்குள் பாலாஜி – நித்யா இடையே இருந்து வந்த சண்டை முடிவுக்கு வந்து, நண்பர்களாக இருந்த மஹத், யாஷிகா, ஷாரிக், ஐஸ்வர்யா இடையே சண்டையும் மனக்கசப்பும் தொடங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து இதன் இன்றைய புரமோ வீடியோவில் புதுவித டாஸ்க் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

அதன்படி தண்ணீரை டேங்குக்குள் நிரப்பி, அதை வீணாக்காமல் ஒவ்வொருவரும் சேமிக்க வேண்டுமாம்.

இந்த டாஸ்க்கை மஹத் செய்ய, அருகில் இருக்கும் யாஷிகா அவரை அந்த டாஸ்க்கை விட்டு விட சொல்கிறார். இதற்கு பதிலளிக்கும் மஹத் தனக்கு ஒரு முத்தம் கொடுத்தால் விட்டுவிடுகிறேன் என்கிறார்.

ஆனால் இதைப் பார்க்கும் மும்தாஜ் மஹத்தை கண்டிக்கிறார். எனினும், மும்தாஜ் வரும்போது வேண்டுமென்றே யாஷிகாவை அழைத்துப் பேசுவேன் எனவும் மஹத் கூறுகிறார்.

இதனால் மகத்துக்கு யாஷிகாவின் முத்தம் கிடைக்குமா? என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Will Mahat Kiss Yaashika in Bigg Boss 2 Home

கோச்சடையான் விவகாரம்: லதா ரஜினிக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

கோச்சடையான் விவகாரம்: லதா ரஜினிக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Latha Rajinikanth pulled up by SC over non payment of duesலதா ரஜினி தயாரிப்பில், சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு கோச்சடையான் திரைப்படம் வெளியானது.

இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரெடக்சன் பணிகளை செய்த ஆட் பிரு அட்வர்டைசிங் நிறுவனம், 6 கோடியே 20 லட்சம் ரூபாயை லதா ரஜினிகாந்த் செலுத்தவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதை எதிர்த்து, லதா ரஜினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், 3 மாதத்தில் பணத்தை செலுத்துமாறு கடந்த பிப்ரவரி மாதத்தில் உத்தரவிட்டது.

ஆனால், இதுவரை லதா ரஜினி பணத்தை தரவில்லை என ஆட் பிரு அட்வர்டைசிங் நிறுவனம் முறையிட்டது.

இதையடுத்து, இதுவரை பணம் செலுத்தாதது ஏன் என்றும், எப்போது தொகையை செலுத்தப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதுடன் பணத்தை செலுத்தவில்லை என்றால் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Latha Rajinikanth pulled up by SC over non payment of dues

More Articles
Follows