ரெடியா மக்களே.?.; பிப்ரவரி 4 முதல் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ வரும் படக்குழு

ரெடியா மக்களே.?.; பிப்ரவரி 4 முதல் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ வரும் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சூது கவ்வும்’ திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி ஜானரில், புதுமுகங்களின் உருவாக்கத்தில், அசத்தலான காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ திரைப்படம்.

Head Media works தயாரித்துள்ள, இப்படத்தை Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா, ABI & ABI Pictures சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும் இயக்குநர் நலன் குமாரசாமி இணைந்து வழங்குகிறார்கள்.

நிஷாந்த் & நக்கலைட்ஸ் செல்லா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள்..:

எழுத்து இயக்கம் – பாலா அரன்
ஒளிப்பதிவு – விக்னேஷ் செல்வராஜ்
இசை – சுரேன் விகாஷ்
படத்தொகுப்பு – ராம் சதீஷ்
கலை – சந்தோஷ்
ஒலிக்கலவை – சிவகுமார்
நடனம் – பாபு எரிக்
SFX – சேது
மக்கள் தொடர்பு – நிகில்

இப்படக்குழுவினர் செய்தியாளர்களை 2021 செப்டம்பரில் சந்தித்த போது…

“இந்தப்படக்குழுவினர் இணைந்து இன்னொரு படம் செய்ய வேண்டும், அதை இந்தப்படம் போல் மூன்று மடங்கு பட்ஜெட்டில் நான் தயாரிக்கிறேன் என்பதை இந்த மேடையில் நான் சொல்லிக்கொள்கிறேன்.” என பேசியிருந்தார் தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா.

“சில படங்கள் விமர்சகர்களுக்கு பிடிச்சா ரசிகர்களுக்கு பிடிக்காது.. ரசிகர்களுக்கு பிடிச்சா விமர்சகர்களுக்கு பிடிக்காது. ஆனா இந்தப்படம் விமர்சர்களுக்கும் ரசிகர்களுக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். இனிவரும் தலைமுறைக்கு பேர் சொல்லும் படமாக “பன்றிக்கு நன்றி சொல்லி” படம் இருக்கும்” என பேசியிருந்தார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

இந்த நிலையில் இன்று இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

வருகிற பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி முதல் இப்படம் சோனி லைவில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

Pandrikku Nandri Solli release date announced

நல்ல நட்பை கொண்டாட வரும் துல்கர் சல்மானின் ‘தோழி’ காஜல் அகர்வால்

நல்ல நட்பை கொண்டாட வரும் துல்கர் சல்மானின் ‘தோழி’ காஜல் அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எண்ணற்ற திரைப்பட பாடல்களுக்கு திறம்பட நடனம் அமைத்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள பிருந்தா ‘மாஸ்டர்’, ‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநராகியுள்ளார்.

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், துல்கார் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இதில் துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் பங்கு பெறும் நட்பைக் கொண்டாடும் பாடலான ‘தோழி’ மிகவும் அழகாக உருவாகியுள்ளது.

மதன் கார்க்கியின் மந்திர வரிகளில், கோவிந்த் வசந்தாவின் ஆத்மார்த்தமான இசையமைப்பில், பிரதீப் குமாரின் இனிமையான குரலுடன் உருவாகியுள்ள இந்த பாடல் மெல்லிசை மற்றும் உணர்ச்சிகளின் கொண்டாட்டமாக உள்ளது.

பாடலை பற்றி பிருந்தா மாஸ்டர் கூறுகையில்,…

“ஹே சினாமிகா படத்தின் ‘அச்சமில்லை’ பாடல் ஒரு உற்சாகமான நடனக் கலவை என்றால், ‘தோழி’ உங்களை உணர்ச்சிகளை பிரதிபலிக்கும்.

இந்த பாடல் மிகவும் அழகாக உருவெடுத்துள்ளது. கேட்பவர்களின் சொந்த உறவுகளை நினைவுபடுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. துல்கர் மற்றும் காஜல் மிகவும் அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். நட்புக்கான இந்த இதயப்பூர்வமான இசை அஞ்சலியுடன் ரசிகர்கள் இணைவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா கூறுகையில்,…

“இந்தப் படத்தில் மட்டுமல்ல, என்னுடைய கேரியரிலும் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று ‘தோழி’. படப்பிடிப்பிற்கு 6 மாதங்களுக்கு முன்பு பிருந்தா மாஸ்டரைச் சந்தித்தபோது, ஒரு நல்ல மெலோடியை விரும்புவதாக சொன்னார். இந்த பாடலை அவர் காட்சிப்படுத்தியுள்ள விதம் மிகவும் அருமை. பிரதீப் குமார் இப்பாடலை மிக அழகாகப் பாடியிருக்கிறார்,” என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறும்போது, “பனித்துளி போல தூய்மையான, அழகான நட்பின் பாடல் தான் ‘தோழி’. இதை கேட்பவர்கள் ஆழமான நட்பை அனுபவிக்க முடியும்,” என்றார்.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் பிருந்தா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ 25 பிப்ரவரி 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

ஒளிப்பதிவு: பிரீத்தா ஜெயராமன் ஐ எஸ் சி

இசை: கோவிந்த் வசந்தா

படத்தொகுப்பு: ராதா ஸ்ரீதர்

எழுத்து & பாடல்கள்: மதன் கார்க்கி

கலை இயக்கம்: எஸ் எஸ் மூர்த்தி / செந்தில் ராகவன்

சண்டை பயிற்சி: அஷோக்

நிர்வாக தயாரிப்பு: ஃபிராங்க் மைக்கேல்/ரஞ்சனி ரமேஷ்/எஸ் பிரேம்

இணை தயாரிப்பு: குளோபல் ஒன் ஸ்டூடியோஸ்

தயாரிப்பு: ஜியோ ஸ்டூடியோஸ்

இயக்கம்: பிருந்தா

Fascinating melody #Thozhi is out from Hey Sinamika

OH MY DOG..; நாய்க்கு நாலாவது பொறந்தநாள் கொண்டாடிய ‘யானை’ நட்சத்திரம்

OH MY DOG..; நாய்க்கு நாலாவது பொறந்தநாள் கொண்டாடிய ‘யானை’ நட்சத்திரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும்பாலும் 40-60% வீடுகளில் ஏதாவது ஒரு செல்ல பிராணி இருக்கும்.

கிராம்ப்புறங்களில் இது அதிகமாகவே காணப்படும். அவர்கள் நாய்களை விட ஆடு, மாடு, கோழி, எருமைமாடு ஆகியவற்றை அதிகளவில் வளர்ப்பதுண்டு.

சென்னையை பொறுத்தவரை ப்ளாட் டைப் வீடுகளில் 70% நிச்சயம் வளர்ப்பு பிராணிகள் இருக்கும். பெற்றோர்கள் வேலைக்கு சென்றால் வீட்டு குழந்தைகளுக்கு நாய்கள் தான் நட்பான கம்பெனி.

நாய், பூனை, புறா, கிளி, மீன் உள்ளிட்டவைகளை இவர்கள் வளர்ப்பார்கள்.

வாடகை வீட்டில் சிலர் வசித்தாலும் நாய்களுக்கென்றே சிலர் தனி வீடு பார்ப்பார்கள்.

தனக்கு பல பிரச்சினைகள் இருந்தாலும் நாயை தங்க வைக்க கூடுதல் வாடகை கொடுக்கவும் தயங்க மாட்டார்கள். அப்படியொரு ப்ரியத்தை நாய்கள் மீது வைத்திருப்பார்கள்.

தெருவில் யாரேனும் புதிய நபர்கள் நுழைந்தால் இந்த நாய்கள் குரைத்துக் கொண்டே இருப்பதால் மற்ற வீடுகளில் நிம்மதி இருக்காது.

ஆனால் நாய்களை வளர்ப்பவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாகவே இருக்காது. ஏனென்றால் அவர்களுக்கு இது பழக்கமான ஒன்றாகிவிடும்.

பெரிய பெரிய பங்களா வீடுகளில் நாயை பராமரிக்க வேலையாட்களும் உண்டு.

சினிமா நட்சத்திரங்களை பொறுத்தவரை பலர் நாய் பிரியர்கள் உண்டு. ஆங்கிலத்தில் சொன்னால் டாக் லவ்வர்ஸ்..

நடிகைகளில் த்ரிஷா, அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ், ப்ரியா மணி, நஸ்ரியா, வரலட்சுமி, ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால் என பெரிய லிஸ்ட்டே இருக்கு.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகை காஜல் அகர்வால் தன் நாய்க்கு பிறந்த நாள் கொண்டாடி போட்டோ போட்டு இருந்தார்.

இந்த நிலையில் நடிகர் அருண்விஜய் தன் நாய்க்கு 4வது பிறந்தநாளை கொண்டாடி அந்த படங்களை தன் பிஆர்ஓ மூலம் பகிர்ந்துள்ளார்.

சூர்யா தயாரிப்பில் அருண் விஜய் மகன் அர்னவ் நடிக்கும் படத்தின் பெயர் கூட ’ஓ மை டாக்’ தான்.

இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

சரவ் சண்முகம் இயக்கியுள்ள இந்த படத்தில் அர்னவிற்கு தந்தையாக அருண் விஜய்யே நடித்துள்ளார். சிறுவனுக்கும் அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையேயான நட்புதான் இப்பட கதை.

இத்துடன் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘யானை’ என்ற படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

Arun Vijay celebrates his pet birthday

சிம்பு பிறந்த நாளில் ரசிகர்களுக்கு மெகா ட்ரீட் தர ரெடியாகும் ஸ்டூடியோ க்ரீன்

சிம்பு பிறந்த நாளில் ரசிகர்களுக்கு மெகா ட்ரீட் தர ரெடியாகும் ஸ்டூடியோ க்ரீன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாநாடு’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து சிம்புவின் மார்கெட் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

இப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் வெங்கட் பிரபு, சிம்பு, எஸ்ஜே சூர்யா ஆகியோரை போனில் அழைத்து பாராட்டு தெரிவித்து இருந்தார்.

தற்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார், கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல மற்றும் ஏ.ஜி .எஸ் தயாரிப்பில் ஒரு படம் என படு பிஸியாக வலம் வரத் தொடங்கியுள்ளார் சிம்பு.

இதனிடையில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் ‘பத்து தல’ படத்தில் ‘மாநாடு’ பட புகழ் எடிட்டர் பிரவீன் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர்.

இவர் ‘ஆரண்ய காண்டம்’ படத்துக்காக 2012ல் தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞானவேல் ராஜா தயாரிக்கும் ‘பத்து தல’ படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம் ஆகியோர் இணைந்து நடிிி்த்து வருகின்றனர்.

AR ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் பிப்ரவரி 3ல் சிம்பு தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.

இதனை முன்னிட்டு ‘பத்து தல’ படம் சார்பாக ரசிகர்களுக்கு விருந்தளிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

ஸ்டூடியோ க்ரீன் தன் ட்விட்டர் பக்கத்தில்… #Feb3rd | #Atman ?❤️?என பதிவிட்டுள்ளனர்.

Pathu Thala – Surprise update on STR’s birthday

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..; ரஜினி டயலாக் பேசி கமல் நிகழ்ச்சிக்கு கெத்தா வந்த வனிதா

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..; ரஜினி டயலாக் பேசி கமல் நிகழ்ச்சிக்கு கெத்தா வந்த வனிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிகளையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

இதற்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே எப்போதும் உள்ளது.

இதனையடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாக உள்ளது.

இந்த லோகோவை கமலுடன் இணைந்து சிவகார்த்திகேயன் பிக்பாஸ் 5 ஃபைனல் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.

தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான புரோமோஷன் தொடங்கியுள்ளது.

இது ஜனவரி 30 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில் 16 போட்டியாளர்கள் களமிறங்கவுள்ளனர்.

கவிஞரும் நடிகருமான சிநேகனை முதல் போட்டியாளராக அறிவித்துள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட்டின் 2வது போட்டியாளராக நடிகை ஜூலி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அடுத்த போட்டியாளராக வனிதா விஜயகுமார் பங்கேற்கவுள்ளார்.

இது தொடர்பான புரோமோவில் ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு. சம்பவம் இனிமே தான் ஆரம்பம்’ என கெத்தாக ரஜினியின் கபாலி பட பன்ச் டயலாக் பேசி வருகிறார் வனிதா.

இதுவரை 3 போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்று ஜனவரி 27 மாலை 6 மணிக்கு 4வது போட்டியாளர் அறிவிக்கப்பட உள்ளார்.

இந்த புரோமோவில் டிவி நடிகை மணிமேகலை வருகிறார்.. 4வது போட்டியாளர் யாராக இருக்கும்? என கேட்கிறார்.

Vanitha Vijayakumar joins Bigg Boss Ultimate

ரஜினி-தனுஷ் பட பாடல்களுக்கு பிறகு வைரலாகும் ‘கணம்’ படத்தின் கனமான பாடல்

ரஜினி-தனுஷ் பட பாடல்களுக்கு பிறகு வைரலாகும் ‘கணம்’ படத்தின் கனமான பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சில பாடலைக் கேட்டாலே படத்தின் கதைக்களத்தை நம்மால் உணர்த்துக் கொள்ள இயலும். அப்படி ‘கணம்’ படத்தில் ‘அம்மா’ பாடல் அமைந்திருப்பது சிறப்பம்சம்.

வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கணம்’.

அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் அமலா அக்கினேனி, சர்வானந்த், ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘எங்கேயும் எப்போதும்’,
‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ ஆகிய படங்களுக்குப் பிறகு தமிழில் சர்வானந்த் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘கணம்’.

‘அம்மா’ பாடலில் உமா தேவியின் வரிகளுக்கு,
ஜேக்ஸ் பிஜாய் தனது இசையின் மூலம் உயிரோட்டி இருக்கிறார்.

சித் ஸ்ரீராம் தனது குரல் மூலம் கேட்பவர்களை மயக்கியுள்ளார்.

இந்தப் பாடல் உருவான விதம் குறித்து இயக்குநர் ஸ்ரீகார்த்திக் கூறுகையில்..,

“அம்மா பாடல் தான் ‘கணம்’ படத்தின் ஆன்மா. இது கதையை மேம்படுத்தும் பாடல் மட்டுமல்ல, இந்தப் பாடல் தான்.. இந்தப் படம். ஒரு வகையில் இந்தப் படத்தின் முதுகெலும்பு என்று சொல்வேன்.

3 வருடங்களுக்கு முன்பு, இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னரே இந்தப் பாடலை உருவாக்கினோம். இந்தப் பாடலை முடித்தவுடனேயே இது கதையின் தன்மையை இன்னும் சிறப்பானதாக ஆக்குவதை உணர்ந்தோம்.

இந்த பாடலை கேட்ட பிறகுதான், அடுத்து வரப்போகும் நாட்களில் எந்தப் பார்வையோடு இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை மொத்தக் குழுவும் அறிந்து கொண்டது. படப்பிடிப்பின் போது எல்லோரும் ஒரே நேர்கோட்டில் சிந்திக்க இந்த அம்மா பாடல் தான் உதவியது.

தெலுங்கில், மறைந்த பாடலாசிரியர் சிரிவெண்ணெலா அவர்கள் எழுதிய கடைசி பாடல்களில் ஒன்று இது.

முதலில் நாங்கள் தெலுங்கு மொழியில் பாடலைத் தயார் செய்திருந்தாலும் அதை தமிழுக்கு அப்படியே மாற்றவில்லை.

பாடலின் அதே கருவை வைத்துத் தமிழில் மொத்தமாக புதிய வரிகளை உருவாக்கி இருக்கிறோம். ‘மன்னன்’ படத்தில் வந்த ‘அம்மா என்றழைக்காத…’ ,
‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் இடம்பெற்ற ‘அம்மா.. அம்மா..’ போன்ற சில பாடல்களுக்குப் பிறகு இந்த அம்மா.. பாடல் அனைத்து வயதினரையும் கொண்டாட வைக்கும்.

தனது அம்மாவை இழந்தவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு தாலாட்டாக இருக்கும். மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கை தரும் பாடலாக இது இருக்கும்” என்று தெரிவித்தார்.

பாடல் வெளியாகி சில மணி நேரங்களிலியே பலர் மனங்களையும் தாக்கியுள்ளது. இந்தப் பாடலைக் கேட்டவர்களின் உணர்வுகள் குறித்து ஸ்ரீகார்த்திக் கூறுகையில்..

அம்மா.. பாடலைக் கேட்டவர்கள் அனைவருமே தனது அம்மாவை ஞாபகப்படுத்துவதாக தெரிவித்தார்கள். நிறைய பாராட்டுக்கள் குவிகிறது. அதுவே பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

அதற்காகத் தான் இந்தப் பாடலை நிறைய நாட்கள் மெனக்கிட்டு உருவாக்கியுள்ளோம்” என்று தெரிவித்தார். தற்போது வெளியாகியுள்ள ‘அம்மா’ பாடல் சமூக வலைதளத்தில் பலரும் கேட்டுவிட்டு, தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். பலரும் ‘கணம்’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கணம்’ படத்தில் அமலா அக்கினேனி, சர்வானாந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுஜித் சராங், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக ஸ்ரீஜித் சராங், கலை இயக்குநராக சதீஷ்குமார் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்தப் படம் தயாரித்துள்ளது.

தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’ என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. தெலுங்கில் சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோருக்கு பதிலாக வெண்ணிலா கிஷோர் மற்று ப்ரியதர்ஷி ஆகியோர் நடித்துள்ளனர்.

இரு மொழிகளில் உருவாகி வரும் ‘கணம்’ – ‘ஒகே ஒக ஜீவிதம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Here is the loving first single Amma Song from Kanam

More Articles
Follows