தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் (சத்தியமா அப்படின்னு நாங்க சொல்லல) இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தை போலவே கர்நாடகாவிலும் டெல்லியிலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக சினிமா தியேட்டர்களிலும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் புதிய ஊரடங்கு தளர்வால் தமிழ் திரையுலகினர் உற்சாகமடைந்து தங்கள் படங்களின் வெளியீட்டை அறிவித்து வருகின்றனர்.
இந்த வாரம் பிப்ரவரி 4ல் விஷால் நடித்துள்ள ‘வீரமே வாகை சூடும்’ ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
துபா. சரவணன் இயக்கியுள்ள இதில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைக்க கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பாலா அரனின் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ஒரு டார்க் காமெடி படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’. இப்படத்திற்கு விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய சுரேன் விகாஷ் இசையமைத்துள்ளார்.
ஹெட் மீடியா ஒர்க்ஸ் சார்பாக விக்னேஷ் செல்வராஜ் தயாரிக்க ஸ்டூடீயோ கிரீன் நிறுவனம் வெளிய்யிடுகிறது. எடிட்டிங் பணிகளை ராம்-சதீஷ் செய்துள்ளனர்.
இந்த படத்தை வரும் பிப்ரவரி 4ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்கின்றனர்.
Pandrikku Nandri Solli movie to clash with Vishal film