முதன்முறையாக அரசு கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை

முதன்முறையாக அரசு கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arts collegeகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் சினிமா தியேட்டர்கள், சினிமா சூட்டிங், ஜிம், பார்க் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை திறக்கப்படாமல் உள்ளன.

தற்போது வரை +2 மற்றும் 10 வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.

விரைவில் இது வழங்கப்பட உள்ள நிலையில் கல்லூரிகள் திறப்பது குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுவரை அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பங்கள் பெறவும் மாணவர் சேர்க்கைக்காகவும் நேரடியாக கல்லூரிகளுக்கு மாணவர்கள் வருவது வழக்கம்.

ஆனால் கொரோனோ தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரிகளில் கூடுவதை தவிர்க்க முதன்முறையாக ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாம்.

இதற்கான மென்பொருள் ஒன்றை வடிவமைக்கும் பணியில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஈடுபட்டுள்ளது.

அரசு கல்லூரிகளுக்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பின் இடஒதுக்கீடு அடிப்படையில் கல்லூரியில் சேருவதற்கான அழைப்பானைகள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிய வந்துள்ளது.

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க ரூ. 75 ஆயிரம் கோடி முதலீடு.. – சுந்தர் பிச்சை

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க ரூ. 75 ஆயிரம் கோடி முதலீடு.. – சுந்தர் பிச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sundar pichaiவருகிற 2021 முதல் 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

Google For India 2020 அதாவது… 2020-ம் ஆண்டுக்கான கூகுள் இந்தியா நிகழ்ச்சியில் இன்று அவர் பேசினார்.

அப்போது… கூட்டு முதலீடு மற்றும் செயல்பாட்டு, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் இதைச் செய்வோம்” என தெரிவித்தார்.

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்குவதில் முக்கிய நான்கு பகுதிகளில் இந்த முதலீடு இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சுந்தர் பிச்சை உரையாடிள்ளார்.

அப்போத சுந்தர் பிச்சையுடன் தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்து உரையாடியதாக பிரதமர் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இவையில்லாமல் சுமார் 2.6 கோடி சிறுகுறு தொழில் நிறுவனங்களை ஆன்லைன் பிஸினஸ்-க்கு கொண்டு வருவதை இலக்காக கொண்டுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் ஐஸ்வர்யா போல பாசமலராகும் விஜய்சேதுபதி மஞ்சிமா

சிவகார்த்திகேயன் ஐஸ்வர்யா போல பாசமலராகும் விஜய்சேதுபதி மஞ்சிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project - 2020-07-13T192414.494பாசமலர் படம் வந்த காலம் முதல் அண்ணன் தங்கை சென்டிமெண்ட்டுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் மவுசுதான்.

நம் குடும்பத்திலும் அப்படியொரு அண்ணன் தங்கை இருக்கமாட்டார்களா? என பலரும் ஏங்குவதால் இதுபோன்ற சென்டிமெண்ட் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுகிறது.

விஜய்ய்கு வேலாயுதம், திருப்பாச்சி படங்களை சொல்லலாம். அஜித்துக்கு வேதாளம் படத்தையும் சிவகார்த்திகேயனுக்கு நம்ம வீட்டு பிள்ளை படத்தை சொல்லாம்.

தற்போது இந்த தங்கை சென்டிமெண்ட் ரூட்டில் விஜய்சேதுபதியும் இணைந்துள்ளார்.‘

விஜய்சேதுபதி நடித்து வரும் துக்ளக் தர்பார் படத்தில்தான் இந்த அண்ணன் தங்கை செண்டிமெண்ட்.

டில்லி பிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கும் இந்த படத்தில் பார்த்திபன் வில்லனாகவும் அதிதிராவ் நாயகியாக நடித்துள்ளனர்.

இதில் விஜய்சேதுபதிக்கு தங்கையாக மஞ்சிமா மோகன் நடித்திருக்கிறாராம்.

விஜய் படத்தில் நடித்தற்காக வருத்தப்படும் அஜித் பட நடிகை

விஜய் படத்தில் நடித்தற்காக வருத்தப்படும் அஜித் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

akshara gowda in thuppaki movieநடிகர் விஜய் படத்தில் நாம் நடிக்க மாட்டோமா? என பல கலைஞர்கள் காத்திருக்கும் நிலையில் விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக தான் வருத்தப்படுவதாக அக்‌ஷரா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

அவரின் சமீபத்திய பேட்டியில்… துப்பாக்கி படத்தில் நடந்த ஒரே நல்ல விஷயம் விஜய், முருகதாஸ், சந்தோஷ் சிவன் ஆகியோரது அறிமுகம் நட்பு கிடைத்தது.

அதில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன். காஜல் அகர்வாலின் தோழியாக நடிக்க என்னை அழைத்தனர். ஆனால் படத்தில் அப்படி இல்லை.

அது பற்றி எந்த கோபமும் இல்லை. இப்போதும் அவர்கள் அழைத்தாலும் நடிக்க நான் ரெடி” என கூறியுள்ளார்.

உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமானவர் அக்‌ஷரா கவுடா. பிறகு விஜய்யின் துப்பாக்கி மற்றும் அஜித்தின் ஆரம்பம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் ஜெயம் ரவியின் போகன், ஜீவாவின் சங்கிலி புங்கிலி கதவ திற, சந்தீப் கிஷானின் மாயவன் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் பெயரில் சாலை & ரவுண்டானா

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் பெயரில் சாலை & ரவுண்டானா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sushant singh rajputகிரிக்கெட் வீர்ர் எம்எஸ் தோனியின் வாழ்க்கை படத்தில் தோனியாக வாழ்ந்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்.

35 வயதான இவர் கடந்த ஜூன் 14-ந் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

பாலிவுட் வாரிசு நடிகர்கள் கொடுத்த மன அழுத்தத்தினால் அவர் தற்கொலை செய்துக் கொண்டார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனையடுத்து தற்கொலைக்கான உண்மை காரணத்தை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது இந்தியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பீகாரில் அமைந்துள்ள சுஷாந்தின் சொந்த ஊரான புர்னியாவில் இருக்கும் ஒரு சாலைக்கு சுஷாந்த் சிங்கின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

மேலும் அங்கு அமைந்துள்ள போர்டு நிறுவனத்தின் ரவுண்டானாவிற்கு சுஷாந்த் சிங் ராஜ்புட் ரவுண்டானா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.

பெயர் மாற்றப்பட்ட சாலையை அந்த பகுதி மக்கள் திறந்து வைத்துள்ளனர்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

சத்யா பட கமல்ஹாசன் கெட்அப் ஏன்..? விஜய்சேதுபதி விளக்கம்

சத்யா பட கமல்ஹாசன் கெட்அப் ஏன்..? விஜய்சேதுபதி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi reveals about Sathya Kamal get up stills சினிமாவில் தான் நடிக்கும் கேரக்டருக்காக தன்னையே மாற்றி கொள்ளும் திறமையான நடிகர்கள் ஒரு சிலரே உள்ளனர்.

அதில் குறிப்பிடும் படியாக வளர்ந்து வருபவர் நடிகர் விஜய்சேதுபதி.

தனக்கென எந்த ஹீரோ இமேஜ்ஜீம் வைத்துக் கொள்ளாமல் வில்லன், கெஸ்ட் ரோல் என எந்த கேரக்டர் என்றாலும் பின்னியெடுக்கிறார்.

கடந்த மாதத்தில் சத்யா பட கமல்ஹாசன் கெட்டப்பில் விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

எனவே கமலின் சத்யா படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதி நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவியது.

இதுகுறித்து தன் சமீபத்திய பேட்டியில் விளக்கமளித்துள்ளார் விஜய் சேதுபதி.

அதில்… “தென்மேற்கு பருவக்காற்று கிளைமேக்ஸ் காட்சிக்காக மொட்டை அடித்தேன். அதன் பிறகு மணிகண்டன் இயக்கும் படத்தில் நான் நடிப்பதாக இருந்தது.

எனவே அந்த படத்திற்கான போட்டோஷூட் நடைபெற்றது. அப்போது கொஞ்சம் முடி வளர்ந்திருந்தது.

அப்போது எடுத்த படங்களை சமீபத்தில் நானும் சில நண்பர்களுக்கு அனுப்பினேன். அது சமூகவலைதளங்களில் பரவிவிட்டது” என தெரிவித்துள்ளார் மக்கள் செல்வன்.

Vijay Sethupathi reveals about Sathya Kamal get up stills

More Articles
Follows