புது யுக்தியை கையாண்டு வெற்றி பெற்ற “வி 1” படக்குழு

புது யுக்தியை கையாண்டு வெற்றி பெற்ற “வி 1” படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

V1 movie posterஒவ்வொரு படத்திற்க்கும் புதுப்புது விளம்பர யுக்தியை வெளிபடுத்தி அதில் வெற்றி பெறுவது என்பது சுலபமான விஷயமில்லை. அதிலும் முற்றிலும் புதுமுகங்கள் உள்ள படமென்றால் விளம்பர யுக்திகான மெனக்கெடல் அதிகமாகவே இருக்க வேண்டும். அந்த சவாலான பரிட்சையில் “வி 1” படக்குழு சாதுர்யமாக வெற்றி பெற்றுள்ளது.

படத்தின் கதை இன்வஸ்டிகேட்டிவ் திரில்லர் என்பதால் அதையே கருவாக எடுத்துகொண்டு தங்கள் “வி 1” போஸ்டர் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிர் வைத்தனர். குழுந்தை பாலியல் விழிப்புணர்வை தூண்டும் வகையில் அந்த போஸ்டரில் 8 எழுத்துக்கள் மறைந்துள்ளது என்றும் அந்த எழுத்துக்களை ஒன்று சேர்த்தால் ஒரு வார்த்தை உருவாகும் என்றும் கூறியிருந்தனர்.

சரியான விடையை தங்கள் டிவிட்டர் அக்கௌண்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் குலுக்கல் முறையில் வெற்றி பெறுபவருக்கு 8 கிராம் தங்க சங்கிலி அளிக்க படும் என்று கூறியிருந்தனர். விடையை கண்டறிந்த பலர் அந்த சரியான பதிலை அனுப்பிவைத்தனர். “Bad Touch” என்ற பதிலை அனைவரும் டிவிட்டரில் பதிவு செய்ய, அந்த வார்த்தை இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

இந்த நிகழ்வு “வி 1” படக்குழுவிற்கு பெறும் மகிழ்ச்சியை அளித்தது மட்டுமன்றி தங்களின் விளம்பர யுக்தி வெற்றி பெற்றதை எண்ணி அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் தங்களது முதல் போஸ்டரிலும் இது போன்ற புதிர் வைத்து குலுக்கல் முறையில் வென்றவருக்கு “வி 1” படக்குழுவினர் ஏ.சி பரிசாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி கட்ட பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ள படக்குழுவினர் “வி 1” டிசம்பர் 6 அன்று வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் டீசரும் ட்ரைலரும் வெளியாகவுள்ளது.

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா முவ்மண்ட் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் இப்படத்தை வெளியிடுகிறார்

இப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பாளர் – அரவிந்த் தர்மராஜ், N.A.ராமு, சரவணன் பொன்ராஜ்
வெளியிடுபவர் – பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பாவெல் நவகீதன்
ஒளிப்பதிவு – கிருஷ்ணா சேகர் T.S.
இசை – ரோனி ரப்ஹெல்
படத்தொகுப்பு – C.S.ப்ரேம் குமார்
கலை – VRK ரமேஷ்
SFX – ஒளி சவுண்ட் லாப்ஸ்
மிக்ஸிங் – M.R.ராஜகிருஷ்ணன்
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

test

test

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

test 123

முழுசா கபில் தேவ் வாக மாறிய ரன்வீர்

முழுசா கபில் தேவ் வாக மாறிய ரன்வீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ranveer as kapil devநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் விசித்திரமான உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும்.

’83 திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளை படக்குழுவினர் மும்பையில் நிறைவு செய்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், கபிலை ஒத்திருக்கும் வகையில் ரன்வீர் சிங்கின் நடராஜா போஸ் கொண்ட போஸ்டரை வெளியிட்டு மகிழ்ந்தனர். அது டுன்ப்ரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கபில் தேவ் 175 ரன்கள் குவித்த போட்டியின் ஒரு ஆகச்சிறந்த புகைப்படம்.

அந்த இந்தியா – ஜிம்பாப்வே போட்டி, மிகவும் மறக்கமுடியாத போட்டிகளில் ஒன்றாக இன்றும் கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. மேலும் அந்த போட்டியானது எந்த ஒரு தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பப்படவும் இல்லை, பதிவு செய்யவும் பட்டிருக்கவில்லை.

ரன்வீர் சிங்கின் ஒரு வியத்தகு ஒப்பனை, அச்சு அசல் கபில்தேவை ஒத்திருக்கும் வகையில் அமைந்திருந்தது, அது உண்மையான கபில்தேவுக்கும், திரையில் வரும் கபில்தேவுக்கும் உள்ள வித்தியாசங்கள் ஒன்றுமே தெரியாத வகையில் அமைந்திருந்தது.

1983 ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவு அணியை வென்று முதன்முதலாக உலக கோப்பையை வென்று சாதனைப் படைத்த தருணங்களை

ரன்வீர் சிங்க் கபில் தேவாக நடிக்க, தாஜீர் பாசின் சுனில் கவாஸ்கராக நடிக்க, ஹார்டி சாந்து மதன்லாலாக நடிக்க, சகீப் சலீம் மொஹிந்தர் அமர்நாத்தாக நடிக்க, அம்மி வீர்க் பல்வீந்தர் சிங் சாந்துவாக நடிக்க, ஜீவா கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்க, சிராக் படீல் சந்தீப் படீலாக நடிக்க, சாஹில் கட்டார் சையது கிர்மானியாக நடிக்க, ஆதிநாத் கோத்தரே திலீப் வெங்சர்காராக நடிக்க, தைர்யா கார்வா ரவி சாஸ்திரியாக நடிக்க, டின்கர் சர்மா கீர்த்தி ஆஸாத்தாக நடிக்க, ஜதின் சர்மா யஷ்பால் ஷர்மாவாக நடிக்க, நிஷாந்த் தஹியா ரோஜர் பின்னியாக நடிக்க, ஆர் பத்ரி சுனில் வால்சன்னாக நடிக்க, போமன் இரானி பாரூக் என்ஜினியராக நடிக்க, பங்கஜ் திரிபாதி பி ஆர் மான் சிங்காக நடிக்க, தீபிகா படுகோனே ரோமி கபில்தேவாக ஒரு பிரம்மாதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தை ரிலையன்ஸ் எண்டர்டைன்மென்ட் ஒரு விளையாட்டை மையப்படுத்தியிருக்கும் திரைப்படங்களில் இதுவே மிகப் பிரம்மாண்டமான படைப்பாக இருக்க, இதனை வெளியிடுகிறது. கபீர் கான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை தீபிகா படுகோனே, சாஜித் நதியாத்வாலா, கபீர் கான், நிகில் திவேதி, விஷ்ணு இந்தூரி, 83 பிலிம்ஸ் லிட் மற்றும் ஃபாண்டம் பிலிம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்க, வருகின்ற 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உலகெங்கும் திரைக்கு வரவிருக்கிறது.

மிஷ்கின், உதயநிதி ஸ்டாலினின் “சைக்கோ” டிசம்பர் 27 முதல் திரையரங்குகளில் !

மிஷ்கின், உதயநிதி ஸ்டாலினின் “சைக்கோ” டிசம்பர் 27 முதல் திரையரங்குகளில் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

psyco posterஒற்றை டீஸர் மூலம் ரசிகர்களை மயிர்க்கூச்செரியும், திரில்லின் உச்சத்திற்கு எடுத்துசென்ற மிஷ்கினின் “சைக்கோ” உன்னதமான படைப்பு எனும் பாராட்டை எல்லைகள் கடந்து உலகமுழுவதும் பெற்று வருகிறது. பயத்தை விதைக்கும் டீஸரில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் தங்களின் மாறுபட்ட வித்தியாசமான நடிப்பால் பாராட்டை குவித்து வருகிறார்கள். படக்குழுவிடமிருந்து அடுத்த ஆச்சர்ய அறிவிப்பாக “சைக்கோ” டிசம்பர் 27 திரையரங்கில் வெளியாகுமெனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இது பற்றி கூறியதாவது…

நாங்கள் எங்கள் Double Meaning Production தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகின்றோம். ஆனாலும் ஆரம்பம் முதல் “சைக்கோ” திரைப்படம் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் பங்குகொண்ட ஒவ்வொருவருக்குமே இப்படம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்கி வருகிறது. எங்களிடம் மிஷ்கின் கதை சொன்ன நாளிலிருந்து அது உருவான ஒவ்வொரு தருணமும் மிகச் சிறப்பான நினைவலைகள் கொண்டது. ஒரு மிகச்சிறந்த திரைப்படம் தற்காலத்தில் மிகச்சரியான காலத்தில் வெளியிடப்படவேண்டியது அவசியம். சில, பல தேதிகளை பரிசீலித்தபின் டிசம்பர் 27 மிகச்சரியான தேதி என முடிவு செய்தோம்.

இப்படத்தில் பணிபுரிந்தது வாழ்நாளின் மிகச்சிறந்த அனுபவத்தை தந்தது. நிறைய கற்றுக்கொள்ளும் தருணங்கள் படமுழுக்க நிறைந்திருந்தது. படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரையும் இப்படம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.

டீஸர் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதில் பல கலவையான கருத்துக்கள் கொண்டிருந்தோம். ஆனால் ரசிகர்கள் இதை வரவேற்று கொண்டாடிய விதம் எங்களை பெரும் உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. காமெடி, திரில் என எந்தவொரு வகை படைப்பானாலும் அதனை மிகச்சரியாக தரும்போது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு உதாரணம் இந்த டீஸர். மிஷ்கினின் இசை இந்த டீஸருக்கு பெரிய பலமாக இருந்தது. படத்தில் இளையராஜாவின் இசை ரசிகர்களை இன்னும் மிரட்டக்கூடிதயதாக இருக்கும்.

Double Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் “சைக்கோ” திரைப்படம் இந்த வருடத்தில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாகிவிட்டிருக்கிறது. இப்படத்தில் இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி சென், ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகிய முக்கிய நடிகர்களும் நடித்துள்ளார்கள். படத்தின் வெளியீட்டு வேலைகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.

நவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Market Raja MBBSஎல்லையற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய இயக்குநர் சரண் படங்கள், எப்போது பார்த்தாலும் புத்துணர்ச்சியூட்டுவதாகவே அமைந்திருக்கும். சரண் இயக்கத்தில் ஆரவ் மற்றும் காவ்யா தபார் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்துக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்புக்குப் பிறகு, எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க வருகிறது
மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.

இது குறித்து பேசிய தயாரிப்பாளர் சுரபி பிலிம்ஸ் மோகன், நவம்பர் 29ஆம் தேதி படத்தை வெளியிடவிருக்கும் செய்தியை மகிழ்ச்சியுடன் பகிரந்து கொள்கிறேன். தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி, இயக்குநர் சரண் வெகுஜன ரசனைக்கேற்ற வகையில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தை உருவாக்கியிருப்பதைப் பார்த்து மகிழச்சியடைகிறேன். உண்மையில் சொல்லப்போனால், தற்கால ரசிகர்களின் ரசனைக்கேற்ற பொழுதுபோக்குப் படத்தை தனது பாணியிலிருந்து விலகாமல், மேம்பட்ட வடிவில் கொடுத்திருக்கிறார். படத்தின் துவக்கத்திலிருந்து இறுதிவரை ரசிகர்கள் இப்படத்தை வெகுவாக ரசிப்பார்கள் என்று திடமாக நம்புகிறேன்.

அப்பழுக்கற்ற நடிப்பை இப்படத்தில் வழங்கியிருக்கும் ஆரவ், சில சமயங்களில் ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் நடிப்பில் புதிய பரிணாமங்களைத் தொட்டிருக்கிறார். தனித்துவம் வாய்ந்த உடல் மொழி, மேனரிசம், ஆகியவற்றுடன் இரண்டு வகையான வேடங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆரவ். சில சமயங்களில் இரண்டு வகையான பாத்திரங்களையும் ஒரே நாளில் படமாக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோதுகூட பெரு முயற்சி செய்து, பரிபூரணமாக அவற்றைச் செய்தது குறிப்படத்தக்கது என்றார்

ராதிகா சரத்குமார், ரோகிணி, நாசர், நிகிஷா படேல், ஆதித்யா, தேவதர்ஷினி, பாகுபலி புகழ் பிரபாகர், முனீஷ்காந்த், சாயாஜி ஷிண்டே, பிரதீப் ராவத், சாம்ஸ் மற்றும் சில முக்கிய நடிக நடிகையரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். சைமன் கே.கிங் இசை ஏற்கெனவே பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் ஒளிப்பதிவை கே.வி.குகன் கவனிக்க, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்திருக்கிறார். சரண் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரித்திருக்கிறார்.

மனம் மலரும், புத்துணர்வு பயணக்குறிப்புகளை பகிர்ந்து கொண்ட ஆஷிமா நாவல் !

மனம் மலரும், புத்துணர்வு பயணக்குறிப்புகளை பகிர்ந்து கொண்ட ஆஷிமா நாவல் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ashima narwalபயணங்கள் எப்போதும் வாழ்வின் அர்த்தத்தையும், ஆழத்தை கற்றுத்தரும். வாழ்வில் இனிமையான நினைவுகளை, புதுமையான அனுபவங்களை எப்போதும் அளிப்பது பயணங்களே!
பயணம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும். ஆன்மாவை மீட்டெடுக்கும். அப்படியான ஒரு பயணத்தை இயற்கை எழில் கொஞ்சும் நகரான கோவாவின் கடற்கரைகளில் மேற்கொண்டுள்ளார் ஆஷிமா நாவல்

அப்பயணம் பற்றி அவர் பகிர்ந்துகொண்டது….

மனதை ஒருமுகப்படுத்த, உடலை புத்துணர்வூட்ட ஒரு சிறு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டேன். கடற்கரை பயணம் என்பது ஆன்மாவின் தியானம் என்றார்கள். பயணம் எப்போதும் புதிதாய் கற்றுக்கொள்ள, ஆன்மாவை புதிப்பித்துகொள்ள ஒரு அற்புத வாய்ப்பு. பயணங்கள் எப்போதும் உற்சாமூட்டுபவை.

இயற்கையின் எழிலில் கலந்து மனதை ஒருமுகப்படுத்திகொள்வதற்கும், புதிய எண்ணங்கள் மலர்வதற்கும் என்னைப் போன்ற நடிகர் நடிகைகளுக்கு பயணங்களே அற்புத வாய்ப்பு. புதிய வகைள் கற்கும் சாகசங்கள் நிறைந்த, உற்சாகம் தரும் புத்தம் புது நடனகலைகள் கற்க, ஓய்வில் உடலை புதுப்பித்துக்கொள்வதற்கே இப்பயணம்.

என் அம்மா எனது வாழ்வின் தோழி இப்பயணத்தில் என்னுடன் இணைந்திருந்தார். நாங்கள் பல புதிய இடங்களை கண்டடைந்தோம். பல புது மனிதர்களை சந்தித்தோம். கடல் உணவுகள் பலவற்றை சுவைத்தோம். ஓய்வில் தியானம், கடற்கரையில் நீச்சல், புதிய நடன வகைகளை முயற்சித்தல் என இப்பயணம் இனிமையான அனுபவம். இயற்கை எழில் கொஞ்சும் நீல நிறக் கடல், பொன்நிற வெய்யில், பசுமை போர்த்திய மர நிழல் ஆகியவற்றோடு நான், அண்டத்தில் ஒருத்தியாய் கலந்து விட்ட உணர்வை அது தந்தது. அல்லது அப்படியாக நான் உணர்ந்தேன். கடவுள் தந்த வரமாய் அன்பின் வடிவாய் என் தாய் என்னுடனேயே இருந்தார். இப்பயணத்தில் நாங்கள் டாட்டுவையும் முயற்சித்தோம்.

காற்றில் ஈரத்தில் கலந்திருக்கும் உப்பு, நம் உடலிலும் முடியிலும் கலந்திருக்கும். அது பரந்து விரிந்திருக்கும் நீல நிற கடலின் ஒரு துளியாகவே கருதினேன்.

பலரது பாராட்டையும் பெற்ற விஜய் ஆண்டனியின் “கொலைகாரன்” படத்தில் தாரணி மற்றும் ஆராதனாவாக கலக்கிய ஆஷிமா விரைவில் வெளியாகவுள்ள “ராஜபீமா” படத்தில் ஆரவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவரது அடுத்த படங்கள் பற்றிய அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும்.

More Articles
Follows