தனது குழந்தைகளின் முழு தமிழ் பெயரை வெளியிட்ட நயன்தாரா

தனது குழந்தைகளின் முழு தமிழ் பெயரை வெளியிட்ட நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமணம் ஆன நான்கு மாதங்களுக்குப் பிறகு அக்டோபர் 9 ஆம் தேதி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகள் வாடகைத் தாய் மூலம் தங்களுக்கு இரட்டை மகன்கள் பிறந்ததாக அறிவித்தனர்.

விக்கி அவர்களின் பெயர்களை உயிர் மற்றும் உலகம் என சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

தற்போது குழந்தைகளின் முழுப் பெயர்களின் விவரம் தெரிய வந்துள்ளது.

உயிர் ருத்ரோனில் என் சிவன் மற்றும் உலக் தெய்விக் என் சிவன் என தங்கள் குழந்தைகளுக்கு பெயர்களை சூட்டியுள்ளனர்.

Nayanthara and Vignesh Shivan’s twin sons full names revealed

மீண்டும் ‘சுல்தான்’ கூட்டணி.; ராஷ்மிகாவின் ‘ரெயின்போ’ கனவை நிறைவேற்றும் ட்ரீம் வாரியர்ஸ்

மீண்டும் ‘சுல்தான்’ கூட்டணி.; ராஷ்மிகாவின் ‘ரெயின்போ’ கனவை நிறைவேற்றும் ட்ரீம் வாரியர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ். ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தனது அடுத்த தயாரிப்பு ‘ரெயின்போ’ திரைப்படத்தை அறிவித்துள்ளது.

நடிகை ரஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகவுள்ளது.

தங்களின் முதல் படைப்பிலிருந்தே, தனித்துவமான கதைககளன்களுடன், தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். ‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து தங்களின் முத்திரையைப் பதித்து வரும் ட்ரீம் வாரியர், தங்களின் அடுத்த தயாரிப்பாக ராஷ்மிகா நடிப்பில் ‘ரெயின்போ’ படத்தை அறிவித்துள்ளது.

சாந்தரூபன் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் தேவ் மோகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவை கவனிக்கவுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளாராக தேசிய விருது பெற்ற பங்களான் பொறுப்பேற்றுள்ளார்.

“வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு படைப்பாக ‘ரெயின்போ’ இருக்கும் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

எங்களின் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஏகோபித்த வரவேற்பையும், வாழ்த்தையும் தந்து வரும் ரசிகர்கள், ‘ரெயின்போ’வையும் அதே அளவு ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

படத்தின் அற்புதமான நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இதைச் சாத்தியமாக்குவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ். ஆர். பிரபு

படத்தின் அறிமுக இயக்குநர் சாந்தரூபன் பேசுகையில்..

“இதுவரை இந்திய சினிமா பார்த்திராத ஒரு காதல் ஃபேண்டஸி கதையாக ‘ரெயின்போ’ இருக்கும். ராஷ்மிகாவின் வேறொரு பரிமாண நடிப்பை நீங்கள் திரையில் பார்ப்பீர்கள். புதுமையான கதைக்களன் கண்டிப்பாகப் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஆச்சரியப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

நடிகை ரஷ்மிகா பேசுகையில்…

“ஒரு பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படும் கதையில் முதல் முறையாகப் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்துக்குத் திரையில் உயிர் கொடுக்க ஆவலாக இருக்கிறேன். உங்களை பொழுதுபோக்கும், ஆச்சரியப்படுத்தும் ஒரு படமாக ரெயின்போ இருக்கும்.

அந்தப் பெண் கதாபாத்திரத்துடனான ரசிகர்களின் பயணம் உற்சாகமானதாக இருக்கப் போகிறது. அதற்குத் தயாராகுங்கள்” என்று கூறியுள்ளார்.

இன்று பூஜையுடன் ‘ரெயின்போ’ படத்தின் தயாரிப்பு தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு ஏப்ரல் 7 அன்று ஆரம்பமாகிறது.

கூடுதல் தகவல்..

பாக்கியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார் ராஷ்மிகா.

இந்த படத்தை தயாரித்திருந்தது ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவன படத்தில் ராஸ்மிகா நடிப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

DREAM WARRIOR ANNOUNCES ITS 2ND TELUGU Movie FEATURING RASHMIKA

Today marks the start of a colourful journey. Join us as we bring the world of #Rainbow to life! 🌟

@iamRashmika @ActorDevMohan @bhaskaran_dop @justin_tunes @thamizh_editor #Banglan @sivadigitalart @Shantharuban87 @prabhu_sr @DreamWarriorpic @johnsoncinepro

#RainbowFilm https://t.co/E3KOZD9gt8

தைவான் ‘இந்தியன் 2’ செட்டில் இருந்து படத்தை பகிர்ந்த ஷங்கர்

தைவான் ‘இந்தியன் 2’ செட்டில் இருந்து படத்தை பகிர்ந்த ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

8 நாட்கள் படப்பிடிப்பிற்காக தைவான் சென்றுள்ள இந்தியன் 2 குழுவினர், அதன் பிறகு ஒரு மாத கால அட்டவணைக்காக தென்னாப்பிரிக்கா செல்லவுள்ளனர்.

தைவான் செல்லும் விமானத்தின் புகைப்படத்தை கமல்ஹாசன் பகிர்ந்துள்ள செய்தியை நாங்கள் ஏற்கனவே உங்களிடம் கொண்டு வந்துள்ளோம்.

இப்போது இயக்குனர் ஷங்கர், கையில் ஸ்கிரிப்ட்டுடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

Shankar shares enthralling ‘Indian 2’ BTS pic from Taiwan set

இன்ஸ்டாவில் தளபதி. தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்

இன்ஸ்டாவில் தளபதி. தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று விஜய்யின் மேலாளரும் ‘லியோ’ இணை தயாரிப்பாளருமான ஜெகதீஷ் தளபதி விஜய் இன்ஸ்டாகிராமிலும் தனது அதிகாரப்பூர்வ கணக்கைத் திறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

‘லியோ’ படப்பிடிப்பிற்காக காஷ்மீரில் இருக்கும் புகைப்படத்தை “ஹலோ நன்பாஸ் அண்ட் நன்பிஸ்” என்று தனக்கு பிடித்த வார்த்தைகளுடன் பதிவிட்டுள்ளார் விஜய்.

சில நிமிடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் கணக்கில் நுழைந்துள்ளனர், அதைப் பார்க்கும் தளபதி ரசிகர்கள் விஜய் இன்ஸ்டாவிலும் பல சாதனையை முறியடிப்பார் என கூறி வருகின்றனர்

Vijay debuts on Instagram – Fans set to create followers record

‘பொன்னியின் செல்வன்’ நாயகனுக்கு அதிக பட்ஜெட்டை ஒதுக்கிய வேல்ஸ் பிலிம்ஸ்

‘பொன்னியின் செல்வன்’ நாயகனுக்கு அதிக பட்ஜெட்டை ஒதுக்கிய வேல்ஸ் பிலிம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.

இவர் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த படங்களுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் ரவி படங்களை குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது.

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் 1’.

இது பான் இந்தியா படமாக தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மொழிகளில் வெளியானது. இதனால் தற்போது இந்தியா முழுக்க தெரிந்த நடிகராகி விட்டார் ஜெயம் ரவி.

இதனையடுத்து இந்தாண்டு 2023 மார்ச் மாதம் ‘அகிலன்’ படம் வெளியானது.

வரும் ஏப்ரல் 28 அன்று ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.

‘பொன்னியின் செல்வன் 2’-ல் அதிக முக்கியத்துவம் ஜெயம் ரவிக்கு தான் இருக்கும் ஏனெனில் கதையின் நாயகனே அவர் தான்.

இதைத் தொடர்ந்து ரவி நடிப்பில் ‘இறைவன்’, ‘சைரன்’ ஆகிய படங்கள் இந்த வருடமே வெளியாக உள்ளது. தற்போது இயக்குனர் எம். ராஜேஷ் படத்திலும் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி விரைவில் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் இந்த படம் ரூ. 100 கோடி பொருட்செலவில் உருவாக இருக்கிறது.

இதையடுத்து அவர் அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jayam Ravi and Vels films joins for mega budget film

SK 21 இல் நிச்சயம் அது இருக்காது. உண்மையை போட்டுடைத்த சிவகார்த்திகேயன்

SK 21 இல் நிச்சயம் அது இருக்காது. உண்மையை போட்டுடைத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி SK 21 இல் இனைந்து நடிப்பது உறுதியாகிவிட்டது.

இருவரும் நேற்று ஒரு விழா மேடையில் ஒன்றாக அமர்ந்திருந்தனர் .

அவர்கள் ஒன்றாக நடனமாடுவதை பார்வையாளர்கள் பார்க்க முடியுமா என்று தொகுப்பாளர் கேட்டபோது, ​​​​எங்க ரெண்டு பேருக்கும் இடையே நடனம் இல்லை என்று தெரிவித்தார் சிவகார்த்திகேயன் .

“எங்கள் காம்போவில் இருந்து நீங்கள் அனைவரும் நடனம் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள் ஆனால் இந்த படத்தில் அது நடக்கவில்லை.

இது ஒரு வித்தியாசமான மற்றும் சிறப்பான படமாக இருக்கும்” என்றார் அவர் .

Sivakarthikeyan shares interesting fact about SK 21

More Articles
Follows