ராம்சரணுக்கு மட்டும் ஓகே சொன்ன நயன்தாரா? கோபத்தில் கோலிவுட்

ராம்சரணுக்கு மட்டும் ஓகே சொன்ன நயன்தாரா? கோபத்தில் கோலிவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ram charan and nayantharaலேடி சூப்பர் ஸ்டார் என அன்பாக அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவரின் கால்ஷீட்டுக்கு கோலிவுட்டே தவம் கிடக்கிறது.

தனக்கு பிடித்த படங்களை ஒப்புக் கொண்டு நடித்தாலும் அப்பட விளம்பர நிகழ்ச்சிகளில் எதுவும் கலந்துக் கொள்ள மாட்டேன் என்ற கொள்கையுடன் வாழ்ந்து வருகிறார் இவர்.

இந்நிலையில் தற்போது அந்த கொள்கையை ராம்சரண் தயாரிக்கு படத்திற்காக காற்றில் பறக்க விட்டுள்ளாராம்.

சீரஞ்சீவி நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’.

இதில் அமிதாப் பச்சன், தமன்னா, விஜய்சேதுபதி, ஜெகபதி பாபு, ஹூமா குரேஷி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்துடன் நயன்தாராவும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி ஹீரோவுமான ராம்சரண் தான் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படம் மிகப்பெரிய பட்ஜெட் என்பதால், படத்தின் புரோமோஷனையும் பிரம்மாண்டமாக செய்ய உள்ளதாம் படக்குழு.

எனவே படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாம்.

இது தொடர்பாக நயன்தாராவிடம் ராம்சரண் பேச, அவரும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

நாம் என்னதான் தலை கீழாக நின்றாலும் நம் பட விளம்பரங்களுக்கு நயன்தாரா முக்கியத்துவம் தருவதில்லையே என்ற கோபத்தில் உள்ளதாம் கோலிவுட் சினிமா.

சர்வதேச திரைப்பட விருதுகளை குவிக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’

சர்வதேச திரைப்பட விருதுகளை குவிக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Otrai Panai Maram movie gets International recognitionநல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும்; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருப்பவர் ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல்.

இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார்.
தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார்.

‘போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இப்படம், சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் முகம் கொடுக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக உருவாக்கி இருக்கிறார்கள்.

யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் உங்களை அழைத்துச் சென்று, ஈழத்தில் கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழ வைத்து வதைத்து விடும் அளவிற்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படத்தை தயாரித்தது குறித்து எஸ்.தணிகைவேல் கூறும்போது…

‘ஒற்றைப் பனை மரம்’ திரைப்படத்தை தயாரித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை இப்படம் கண்டிப்பாக கொடுக்கும். நான் தயாரித்ததில் கிடைத்த மகிழ்ச்சி, நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கு புரியும்’ என்றார்.

இப்படம் 37 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 12 விருதுகளையும் இப்படம் குவித்திருக்கிறது.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அஷ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார். அவரது இசை தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து இசையமைத்திப்பது படத்திற்கு ஒரு உயிரோட்டமாக அமைகிறது.

சிறந்த இயக்குனர் விருது பெற்ற மண் பட இயக்குனர் புதியவன் ராசையா இயக்கத்தையும், தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய பாத்திரங்களாக புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி , மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

Otrai Panai Maram movie gets International recognition

Otrai Panai Maram movie gets International recognition

இந்தியாவின் முதல் தேசிய அளவிலான பெண்கள் கட்சி உதயம்

இந்தியாவின் முதல் தேசிய அளவிலான பெண்கள் கட்சி உதயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Indias First National Level Womens Party Launchedஆண்களின் ஆதிக்கம் நிறைந்த அரசியல் கட்சிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படாமல் இருப்பதை உணர்ந்த மருத்துவர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் ஸ்வேதா ஷெட்டி, 36, ‘தேசிய பெண்கள் கட்சி (NWP)’ யைத் துவங்கி இனி வரும் தேர்தல்களில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறார்.

முழுவதும் பெண்களை மையப் படுத்தி, பெண்களுக்காகவே துவங்கப்பட்ட நாட்டின் முதல் தேசியக் கட்சியான ‘தேசிய பெண்கள் கட்சி’ கடந்த டிசம்பர் 18, 2018 – இல் புதுடெல்லியில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கட்சியின் தலைமைப் பொறுப்பேற்று இருக்கும் நிறுவனர், மருத்துவர், சமூக செயற்பாட்டாளர் மற்றும் பெண்ணியவாதி ஸ்வேதா ஷெட்டி, இந்தக் கட்சி இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முன்னெடுப்பு.

பாராளுமன்றத்தில் பெண்களுக்கு சமஉரிமை பெற்றுத் தருவதே எங்கள் பிரதான நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
ஊடகங்களின் ஒத்துழைப்பு மற்றும் உதவியின் மூலம் நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு, அவர்கள் அரசியல் தளத்தில் தீவிரமாக செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்க பெண்கள் தேசிய கட்சி கடமைப்பட்டுள்ளது.

பெண்கள் தேசிய கட்சியின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியை ஒவ்வொருவருக்கும் சரியான முறையில் கொண்டு சேர்ப்பதற்கும், வாழ்த்துகளைப் பெறுவதற்குமே இந்த சந்திப்பு இப்பொழுது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்காக, முக்கியமாக உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்களுக்காக, தங்கள் நல வாழ்விற்கு ஏதேனும் உதவி கிடைக்காதா என எதிர்பார்த்து ஒவ்வொரு அரசு அலுவலகமாக ஏறி இறங்கியும் உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்களுக்காக, பணியாற்றுவதே கட்சியின் முக்கியமான மற்றும் முதன்மையான நோக்கம் ஆகும்.

மகளிர் அவர்கள் சார்ந்திருக்கும் குழுக்களின், சமூகத்தின் அல்லது பணியிடத்தின் நிர்வாகங்களில் சம உரிமை பெறுவதற்கான பாலின பாகுபாடற்ற சூழலை உருவாக்குவதற்காக பெண்கள் தேசியக் கட்சி பணியாற்றும்.

தேசிய பெண்கள் கட்சி துவங்குவதற்கான பணிகள் 2012 – ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டன. மக்களவையில் பெண்களுக்கான 50% இட ஒதுக்கீட்டைப் பெற வேண்டும் என்பதே அதற்கான உந்துதலாக இருந்தது.

இந்த 2018 – லும் கூட பெண்களின் உரிமைகள் சுலபமாக புறக்கணிக்கப்படுகின்றன. பெண்களுக்கெதிரான கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.ஆனால் குறிப்பிடத்தக்க எந்த சீர்திருத்தமும் கொண்டுவரப்படவில்லை.

இதனால் தான் பெண்கள் தேசிய கட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பெண்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். அவர்களுக்கு பொருளாதார நிலைத்தன்மை இருக்க வேண்டும். எந்த ஒரு பெண்ணும் பாலியல் வன்புணர்வுகளுக்கு ஆளாகக் கூடாது.

பெண்களுக்கெதிரான இத்தகைய சவால்களை துணிந்து எதிர்கொள்ள, அவர்கள் பிரச்சனைகளை மேலும் எளிதாகப் புரிந்து கொள்ள பெண்கள் களத்தில் இருப்பது அவசியமாகிறது என்கிறார் கட்சியின் தலைவர் டாக்டர் ஸ்வேதா.
தெலுங்கானாவில் அரசு சாரா நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தான், அரசியல் தளத்தை மாற்றுவதற்கு நாம் அரசியல் களத்தில் இருக்க வேண்டும் என்று உணர்ந்திருக்கிறார் டாக்டர் ஸ்வேதா. அதனால் தேசிய இயக்கத்தைத் துவங்க விரும்பினார்.

உண்மையான நோக்கத்துடன் சேவை செய்வதற்கு அவருக்கு ஆளும் குழுவிலிருந்து அதிக உறுதிப்பாடு தேவைப்படுகிறது. பெண்களுக்குத் தேவையான சீர்திருத்த திட்டங்களை, சட்டங்களைக் கொண்டு வர பாராளுமன்றத்தில் அவருக்கு ஆதரவு தேவைப் படுகிறது.

தற்போது NWP ‘தெலுங்கானா மகிளா சமிதி’ அமைப்பின் 1.45 லட்சம் மகளிரின் ஆதரவைப் பெற்றுள்ளது. ஆதரவாளர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.

ஏன் நீங்கள் ஏற்கனவே இருக்கும் ஏதோ ஒரு கட்சியின் உறுப்பினராக சேர்ந்து சேவை செய்யலாமே? என்ற கேள்வி வைக்கப்பட்டால், அதற்கு, ‘ நாங்கள் எங்கள் அடையாளத்தை இழக்க விரும்பவில்லை. பெண்களால் படிக்க முடியும், பெண்களால் தலைமைப் பொறுப்பேற்க முடியும், பெண்களால் சுதந்திரமாக செயல் பட முடியும் என நிரூபிக்க விரும்புகிறோம்.’ என்கிறார் டாக்டர் ஸ்வேதா.

இப்போது இருக்கும் கட்சிகள் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான இடம் கொடுக்காமல் அவர்களைப் புறக்கணிக்கின்றன. இதன் விளைவாகத் தான் பாராளுமன்றத்தின் 545 உறுப்பினர்களில் 11 விழுக்காடு தான் பெண்கள் இருக்கின்றனர்.

நாட்டின் ஏனைய கட்சிகளுக்கு பெண்களைத் தங்கள் பட்டியலில் இணைத்துக் கொள்வதற்கான அழுத்தத்தை NWP கொடுக்கும். அதன் மூலம் கணிசமான எண்ணிக்கையில் பெண்கள் மக்களவையில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டாக்டர் ஸ்வேதா கருதுகிறார்.

பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடுக்காக, கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்து, நீதிமன்றம் வரை சென்று போராடி, முடிந்த அளவு அழுத்தங்களைக் கொடுத்து என அனைத்து கதவுகளைத் தட்டிப் பார்த்தும் திறக்காததால் தான் இன்று தேசியப் பெண்கள் கட்சி உருவாகி உள்ளது என்று டாக்டர் ஸ்வேதா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ பாராளுமன்றத்தில் பெண்களை சரிக்கு சமமான அளவு பார்க்கும் வரையில் நாங்கள் பின் வாங்கப் போவதில்லை.’ என்று தீர்க்கமாகத் தெரிவிக்கிறார் டாக்டர் ஸ்வேதா.

சாதாரண பணியிடத்தில் இருந்து இந்திய ராணுவம் வரையிலும் பெண்களுக்கான சம உரிமையைப் பெற்றுத் தர NWP பணியாற்றும்.நாட்டின் ஒவ்வொரு பெண்ணின் ஆதரவையும் தேசிய பெண்கள் கட்சி வரவேற்கிறது.

அனைத்து பெண்களும் ஜாதி, மதம் என்று எந்த பேதமும் இன்றி ஓர் குடையின் கீழ் திரள்வோம். மேலும், எங்கள் கருத்தியலைப் புரிந்து கொண்ட ஆண்களின் அரசியல் ஆதரவையும் தேசியப் பெண்கள் கட்சி வரவேற்கிறது.

Indias First National Level Womens Party Launched

Indias First National Level Womens Party Launched

சலீம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் அரவிந்த் சாமி

சலீம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் அரவிந்த் சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arvind swamyநடிகர் அரவிந்த்சாமி தனது தோற்ற பொலிவினாலும் , தனி பட்ட நடிப்பு திறமையாலும், தனது சீரிய கதை தேர்வு திறமையாலும் தனிஒருவனாகவே அனைத்து தரப்பினரிடமிருந்து உயர்ந்த பாராட்டை பெற்று வருகிறார் என்றால் மிகை ஆகாது. தனது அடுத்த இன்னிங்க்ஸை சிறந்த கதைகளிளும், தேர்ந்த இயக்குனர்கள் மூலம் தொடங்கினார். தரமான கதைகளை தேடி பிடிக்கும் அவரது அடுத்த பெயரிடப்படாத புதிய படத்தை “சலீம்” புகழ் நிர்மல்குமார் இயக்க உள்ளார்.

தனது முந்தைய படைப்பான “சலீம்” மூலம் கதாபாத்திரத்திற்குள் தோன்றும் பல்வேறு உணர்வுகளை மிகவும் நேர்த்தியாக படைத்து மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்ப்பை பெற்ற இயக்குனர், இத்திரைப்படத்தின் மூலம் நடிகர் அரவிந்த்சாமியின் நடிப்புத்திறனோடு கைகோர்க்கிறார்.

படத்தை பற்றி தயாரிப்பாளர் வி.மதியழகன் கூறுகையில்,
” இது ஒரு முழுமையான ஆக்சன் திரைப்படம். கதையில் நாயகன் அரவிந்த்சாமி இரண்டு லுக்கில் வருவதால் தனது உடல் எடையை கணிசமாக கூட்டியிருக்கிறார் .படத்தின் முதல் பார்வை மார்ச் முதல் வாரத்திலும் , படப்பிடிப்பு மார்ச் இறுதியிலும் தொடங்குமென எதிர்பார்க்கலாம்”

கலைப்பற்றையும் நம்பிக்கையையுமே முதலீடாக கொண்ட எக்ஸ்ட்ரா என்டெர்டைன்மெண்டின் 12 வது படைப்பாக இப்படம் தயாராகிறது. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கொலையுதிர் காலம், ஹன்சிகா நடிக்கும் மஹா, மற்றும் நடிகர் அருண் விஜயின் பாக்சர் ஆகிய திரைப்படங்களும் எக் ஸ்ட்ரா எண்டேர்டைன்மெண்ட் சார்பாக 2019 வெளிவரும் என்பது குறிப்படத்தக்கது.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற இசையமைப்பாளர் இமான்

சர்வதேச அங்கீகாரம் பெற்ற இசையமைப்பாளர் இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

D Immanஇந்திய இசை கலைஞர்கள் தங்கள் பயணத்தில் பல்வேறு ரசிகர்களையும் ரசிப்புத்தன்மைகளையும் கடந்து வருகின்றனர். இது அவர்களுக்கு தங்கள் கலையை பட்டை தீட்டவும், உலகத்தரத்துக்கு தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
தற்கால இசை விரும்பிகள் அனைவரும் கலைஞர்களிடமிருந்து தனித்தன்மையை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள், அதை கொண்டாடவும் தயாராக இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் டி. இமான் தனது 16 வருட இசை பயணத்தில் பல புதுமுகங்களையும் திறமையாளர்களையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். கிராமிய இசையை திரை இசையோடு இணைத்த பெருமையும் அவருக்கு உண்டு.
தற்போது இசையமைப்பாளர் டி. இமான், கனடா அரசின் டோரொண்டோ பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை தூதுவராக நியமாகிப்பட்டிருக்கிறார். தமிழ் இருக்கைக்காக அவர் இசையமைத்த ” எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” பாடல் தமிழ் கீதமாக அங்கீகரிக்கபட்டுள்ளது.

இது குறித்து டி. இமான் கூறுகையில் ” கனடாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான டோரண்டோ பல்கலைக்கழகம் வழங்கியிருக்கும் இந்த கவுரவம், உலகமெங்கிருக்கும் தமிழர்களின் பெருமையாகவே கருதுகிறேன். கேம்பிரிட்ஜ் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தை தொடர்ந்து டோரொண்டோ பல்கலைக்கழகமும் “தமிழ்” மொழியை அங்கீகரிப்பது மிகவும் வரவேற்கத்தக்கது” என்று கூறினார்.

இப்பெருமைக்குரிய நிகழ்வு தமிழ் இசையமைப்பாளர்களை உலகத்தரதிற்கு கொண்டுசெல்வதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். தமிழ் வட்டாரத்தில் இமானின் வெற்றி இன்னும் பல திறமைமிக்க இசைகளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையும் உத்வேகத்தையும் தரும் என்று ஆணித்தரமாக நம்புகின்றனர்.

ஜிப்ஸி அரசியல் படமல்ல.; நியாயமான படம்… ராஜு முருகன் ஓபன் டாக்

ஜிப்ஸி அரசியல் படமல்ல.; நியாயமான படம்… ராஜு முருகன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

raju murugan’குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை தொடர்ந்து ராஜு முருகன் இயக்கும் மூன்றாவது படம் ‘ஜிப்ஸி’.

இதில் ஜீவா, நடாசா சிங், ஸன்னி வைய்ன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ரம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சே என்ற குதிரை ஒன்றும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது.

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் இடம்பெறும் ”வெரி வெரி பேட்…” என்ற ஒரு பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் ஜீவா, இயக்குநர் ராஜு முருகன், பாடலாசிரியர் யுகபாரதி, தயாரிப்பாளர் அம்பேத் குமார், ஒளிப்பதிவாளர் எஸ்.கே.செல்வகுமார், படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்டா ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பாடலாசிரியர் யுகபாரதி பேசுகையில், “இயக்குநர் ராஜு முருகனை நான் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கிறேன்.

ஆனால் அவரோ என்னை ‘உள்ளே’வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அது இந்த படத்தில் நடைபெறுகிறதா? அல்லது அடுத்து வரும்படங்களில் நடைபெறவிருக்கிறதா? என்று தெரியவில்லை.

இந்த பாடலில் சொல்லப்பட்டிருக்கும் விசயம் தான் படம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கும். அதையும் கடந்து இயக்குநர் ராஜு முருகனின் முந்தைய இரண்டு படங்களில்லாத காட்சிபடிமத்தை இந்த படத்தில் பார்க்கமுடியும்.

இந்த படத்தின் கதை, ஏறக்குறைய தமிழ் திரையுலகில் அனைத்து தயாரிப்பாளர்களாலும் கேட்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட கதை. அதனை பல தடைகளையும் கடந்து தயாரித்ததற்காகவும், இந்த படம் இனிமேல் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கலுக்காகவும், அதனை எதிர்கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதற்காகவும் தயாரிப்பாளர் அம்பேத்குமார் அவர்களுக்கு படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

திட்டமிட்டதை விட கூடுதலான பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. அத்துடன் எங்களையெல்லாம் ஜாமீனில் எடுக்கவேண்டிய செலவும் இருக்கிறது.

இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காக நடிகர் ஜீவாவை பாராட்டுகிறேன். அவர் ஏற்கனவே ஈ, கற்றது தமிழ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

அந்த வரிசையில் இந்த ஜிப்ஸி படமும் அமையும். அவருடைய திரையுலக பயணத்தில் இந்த படம் முக்கியமான படமாக அமையும். அந்த படத்தில் அவர் கதைக்குள் பயணித்திருக்கிறார். அதற்காக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டவிதம் ஆச்சரியத்தை அளித்தது.

அவரை ஆறு மாதம் தலைமுடி, தாடியை வளர்க்க வைத்து, முகபாவனையை மாற்றியமைத்து, இந்தியா முழுவதும் நடக்க வைத்து, குதிரையிடம் உதை வாங்க வைத்து.. இப்படி பல விசயங்களை அவர் எதிர்கொண்டு, அற்புதமாக நடித்திருக்கிறார்.

‘ஜிப்ஸி’ யில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நீள் இந்தியாவின் குறுக்குவெட்டு தோற்றத்தைப் பார்க்கலாம். இதன் பின்னணியில் உள்ள அரசியல், அதிகாரம் எளிய மக்களை எப்படி வதைக்கிறது? என்பதையும் பார்க்க முடியும்.

அத்துடன் நாம் மனிதநேயத்தை நோக்கி நகர வேண்டியதன் கட்டாயச் சூழலையும் இந்த படம் உணர்த்தும். தேர்தலுக்கு முன் இந்த படம் வெளியாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வந்தால் ஆரோக்கியமான முறையில் மாற்றம் ஏற்படலாம் என்று நம்புகிறேன்.

இயக்குநர் ராஜுமுருகன் இந்த சமூகத்தில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் எழுத்து போராளி. உண்மையான கலைஞனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருப்பவர்.

இந்த திரைத்துறையில் சமூக அரசியலையும், மக்கள் விடுதலையையும் பேசும் அவரை வாழ்த்துகிறேன்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் அவர்களை இசையமைக்க ஒப்பந்தம் செய்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அவருடைய இசையமைப்பில் வெளியான பாடல்களில் ஒரு நாடோடி மனப்பான்மை பரவியிருக்கும்.

இந்த படமும் ஒரு நாடோடியின் கதை என்பதால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி அவரை இசையமைக்க கேட்டுக்கொண்டோம்.இந்த படத்தில் இடம் பெறும் பாடல்களின் சந்தத்திற்காக இசையமைக்காமல், இசையாலும், காதலாலும் நிரம்பி வழியக் கூடிய ஒரு நாடோடியின் வாழ்க்கைக்கு பொருத்தமான இசையை அவர் கொடுத்திருக்கிறார்.” என்றார்.

இயக்குநர் ராஜுமுருகன் பேசுகையில், “இந்த படத்திற்கு அடையாளமாக இருக்கும் இந்த பாடலை முதன்முதலாக ஊடகவியலாளர்கள் முன் திரையிடவேண்டும் என்று விரும்பினேன்.

தயாரிப்பாளர் அம்பேத்குமார் அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் இந்த படத்தை இந்த தரத்தில் தற்போது எடுத்திருக்க இயலாது. அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படம் அரசியல் படமல்ல. ஒரு அமைப்பு சார்ந்து எடுக்கப்பட்ட படமல்ல. ஒரு நியாயமான படம். என்னைப் பொருத்தவரை வாழ்க்கையும் அரசியலும் வேறுவேறு அல்ல.

இந்த படத்திற்கு ‘தோழர் சந்தோஷ் நாராயணன் இசையில்’ என்று விளம்பரப்படுத்தினேன். உடனே சிலர் என்னைத் தொடர்பு கொண்டு ஏன் சந்தோஷ் நாராயணனை தோழர் ஆக்கிவிட்டீர்கள்? என கேட்டார்கள்.

தோழர் என்பது உலகின் உன்னதமான வார்த்தை. தோழர் என்பது ஒரு கட்சி சார்ந்த வார்த்தையல்ல. தோழர் என்பது அன்பின் வார்த்தை. அதன் பொருளை தற்போது மாற்றிவிட்டார்கள்.

யாரெல்லாம் நீதிக்காக போராடுகிறார்களோ அவர்களையெல்லாம் தோழர் என்று அழைக்கலாம். அநீதிக்கு எதிராக தன்னை ஏதேனும் ஒரு தளத்தில் நிறுத்தி போராடுகிறார்களோ அவர்களையெல்லாம் தோழர் என்று அழைக்கலாம். அந்த வகையில் இந்த படத்தில் ஜிப்ஸியும் ஒரு தோழன் தான். ஒரு தோழனின் குரலாகத் தான் ஜிப்ஸி இருக்கிறது.

இந்த படம் லவ் வித் மியூசிக்கலி படம். இந்த படத்தில் ஒன்பது பாடல்கள் இருக்கிறது. அதில் சிறிது அரசியல் கலந்திருக்கிறது. அதிலும் எளிய மக்களின் நியாயமான அரசியல் பேசப்பட்டிருக்கிறது.

இந்த படம் வெளியாகி தயாரிப்பாளர் செய்த முதலீடு அவருக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான அனைத்து கமர்சியல் அம்சங்களும் இதில் இருக்கிறது. இதற்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.

இந்த பாடலில் தோன்றிய தோழர் நல்லக்கண்ணு ஐயா உள்ளிட்ட உண்மையான கள போராளிகளுக்கும் நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசுகையில், “நான் வந்தவாசி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், இயக்குநர் ராஜு முருகனின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன்.

ஒரு முறை சென்னையின் முன்னாள் மேயரும், சைதைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா சுப்ரமணியம் அவர்கள் ஒரு விழாவிற்காக ராஜுமுருகனை சிறப்பு விருந்தினராக அழைக்க பணித்த போது, அவருடன் பயணித்தேன்.

அப்போது ஜிப்ஸி படத்தின் கதையைச் சொன்னார். பட்ஜெட்டையும் சொன்னார். ஆனால் சொன்ன பட்ஜெட்டை விட அதிகம் செலவாகியிருந்தாலும், ஜோக்கர் போன்ற படத்தை இயக்கிய இயக்குநர் படம் என்பதால் அதன் தரத்திற்காக முழு ஒத்துழைப்பு அளித்தேன். இந்த படம் ஒலிம்பியா மூவிசுக்கு சிறந்த படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

More Articles
Follows