எந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர் சேத்தன்!

எந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர் சேத்தன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chetan‘மர்மதேசம் ‘தொடரில் அவர் ஏற்று நடித்த பாத்திரம் தூரதேசம் முதல் தூந்திரப் பிரதேசம் வரை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தியது .
சேத்தன் தன் ராஜாங்கத்தைப் பெரிய திரையிலும் விரிவாக்க விரும்பினார்.’தாம் தூம்’ படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு ,கன்னடம் என்று 50 படங்கள் முடித்துவிட்டார்.இருந்தாலும் அவருக்குள் ஓர் ஏக்கம் உள்ளது. அவரை ஒரு வட்டத்தில் அடக்க நினைக்கிறது திரையுலகம். ஆனால் காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி என்கிற கனவுடையவர் சேத்தன்.

இதோ அவரே பேசுகிறார்.
“நான் டிவியில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருந்த போது என்னை வலைவீசித் தேடி வாய்ப்பு கொடுத்தவர் ஜீவா சார் தான். அந்தப் படம் ‘தாம் தூம்’ . அதில் கதாநாயகனின் மாமா பாத்திரம். அப்போது என் டைமிங் முக பாவனைகளைப் பார்த்து உங்களுக்கு காமெடி நல்லா வரும் போல இருக்கே? என்றார்.ஆமாம் சார் அப்புறம் ஏன் சார் என்னை சீரியசாக் காட்ட முயற்சி செய்கிறீர்கள் என்றேன். அதுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. ‘மர்மதேசம்’ தொடர் செய்து வச்சிருக்கிற வேலை இது. என்றார். அந்தளவுக்கு ‘மர்மதேசம்’ தொடர் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அடிப்படையில் எனக்கு நகைச்சுவையுணர்வு அதிகம் உண்டு. ஆனால் சொன்னால் யாரும் இதை நம்ப மாட்டேன் என்கிறார்கள்.

நான் முதலில் ஒப்பந்தமான படம் ‘தாம் தூம்’ என்றாலும் முதலில் வெளியான படம்’ பொல்லாதவன்’. அதன் பிறகு நிறைய படங்கள் .
நான் நடித்தவற்றில் குறிப்பிட்டுப் பெருமைப்பட வைத்த படம் Revelations. இது நான் நடித்து 2016 ல் வெளிவந்தது.இந்தப் படம் மும்பை, கல்கத்தா, புனே என்று பல வெளியூர்களில் திரையிப்பட்டு பலரின் பாராட்டுகளைப் பெற்று நான் மகிழ்ந்த திரைப்படம் என்பேன்,

கடைசியாக வந்த படம் ‘தமிழ்ப்படம் . 2. ‘அதே இயக்குநர் சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படம் என்ற படத்திலும் நடித்தேன். எனக்கு காமெடியும் வரும் என்று கண்டு கொண்டவர்.
.
எனக்கு பாசிடிவ் நெகடிவ் காமெடி என எல்லா கேரக்டரும் செய்ய ஆசை. எந்த ஒரு வட்டத்திலும் சிக்கிக் கொள்ள விருப்பம் இல்லை. இந்த விஷயத்தில் எனக்கு நாசர் சார் தான் முன்னோடி. அவர் எல்லாமும் ஏற்று நடிப்பார். எந்த வட்டத்திலும் சிக்காததால்தான் அவரால் காலம் கடந்து நிற்க முடிகிறது.
நானும் அவர் வழியில் செல்ல விரும்புகிறேன்.” என்கிறார்.

இவரது மனைவி தேவதர்ஷினி மகள் என எல்லாருமே நடிக்கிறார்களே..?

” என் மனைவி தமிழ் தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மகள்’ 96′ படத்தில் நடித்தார். இப்போது 10 ஆம் வகுப்பு படிப்பதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டி யிருக்கிறது. பிறகு பார்க்கலாம் என்று இருக்கிறோம். சினிமா வே குடும்பம். குடும்பமே சினிமா என்றிருக்கிறோம்.” என்கிற சேத்தன் இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் படத்தில் பாரதிராஜா , சசிகுமாரு டன் நடிக்கிறார். சி.வி.குமார் தயாரிப்பில் இரண்டு பபங்கள் உள்பட 5 புதிய படங்களில் நடித்து வருகிறார்.

14 வருடங்களுக்கு பிறகு தனுஷ்-சினேகா இணையும் படம் தொடங்கியது

14 வருடங்களுக்கு பிறகு தனுஷ்-சினேகா இணையும் படம் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

snehaசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான `எதிர்நீச்சல்’, `காக்கிச்சட்டை’ ஆகிய படங்களை தனுஷ் தயாரித்தார்.

இப்படத்தை ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.

இதன்பின்னர் தனுஷ் டபுள் கேரக்டரில் நடித்த `கொடி’ படத்தையும் இயக்கினார்.

தற்போது மீண்டும்தனுஷ் நடிக்கவுள்ள படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு தனுஷ் 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் அப்பா மற்றும் மகனாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முக்கியக் கதாபாத்திரத்தில் சினேகா நடிக்கவிருக்கிறார். மேலும் ஒரு புதுமுக நடிகையும் நடிக்கவுள்ளார்.

`புதுப்பேட்டை’ படத்துக்குப் 14 வருடங்கள் கழித்து தனுஷ்-சினேகா ஜோடி இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யஜோதி றிறுவனம் இப்படத்தை தயாரிக்க விவேக்-மெர்வின் இருவரும் இசையமைக்கின்றனர்.

ரஜினியின் 2.0 பட டைட்டிலை மாற்றி சீனாவில் வெளியிடும் லைகா

ரஜினியின் 2.0 பட டைட்டிலை மாற்றி சீனாவில் வெளியிடும் லைகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini (1)ரஜினிகாந்த், அக்சய்குமார், ‌ஷங்கர், லைகா ஆகியோரது கூட்டணியில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி கடந்த ஆண்டு நவம்பர் 29-ந் தேதி வெளியான படம் 2.0.

இப்படம் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு அமைந்திருந்தது.

இப்படத்தை உலகமெங்கும் வெளியிட்டனர். அனைத்து இடத்திலும் வசூல் வேட்டையாடியது.

தற்போது உலகளவில் மிகப் பெரிய மக்கள் தொகையை கொண்டுள்ள சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் படத்லைப்பை மாற்றி ரிலீஸ் செய்கின்றனர்.

இப்படத்திற்கு பாலிவுட் ரோபோ 2.0 ரிசர்கென்ஸ் (பாலிவுட் ரோபோ 2.0வின் எழுச்சி) எனப் பெயரிட்டுள்ளனர்.

மேலும் சீன ரசிகர்களை கவர்வதற்காக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாம்.

ரஜினி தெளிவா இருக்கார்; மக்கள் சக்தி தீர்மானிக்கும்.. – விவேக்

ரஜினி தெளிவா இருக்கார்; மக்கள் சக்தி தீர்மானிக்கும்.. – விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajiniகோவில்பட்டி அருகே நடந்த ஒரு கோயில் திருவிழாவில் நடிகர் விவேக் கலந்துக் கொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது…

கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்தாலும் பொதுமக்கள் என்ற மகா சக்தி முன்புதான் கூட்டணி வைத்துள்ளனர்.

மக்கள் தீர்மானிப்பவர்கள் தான் ஆட்சிக்கு வர முடியும். தேர்தல் முடிவை கணிக்க முடியவில்லை. இதுவும் சுவாரஸ்யமாகவே உள்ளது. எல்லோரையும் போல நானும் காத்திருக்கிறேன்.

பின்னர் ரஜினி குறித்து கூறியதாவது…

இந்த தேர்தலில் ரஜினி போட்டியிடவில்லை என்பதால் அவர் பின் வாங்கிவிட்டார் என்று அர்த்தமில்லை.

முதலில் இருந்தே சட்டமன்ற தேர்தலில் தான் நிற்க போகிறேன் என அவர் சொன்னார். அவர் தெளிவாக இருக்கிறார்.” என பேசினார் விவேக்.

வடிவேலு-சக்தி சிதம்பரம் இணையும் பேய் மாமா பட டூப்ளிகேட் போஸ்டர்?

வடிவேலு-சக்தி சிதம்பரம் இணையும் பேய் மாமா பட டூப்ளிகேட் போஸ்டர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vadivelu and Sakthi Chidambaram team up for Pei Mamaசினிமாவில் நடிப்பதை வடிவேலு சில காலம் வடிவேலு நிறுத்தி வைத்திருந்தாலும் அவர் இல்லாத காமெடி சேனல்களே இல்லை எனலாம்.

இன்று வரை அவர் அடித்த ஜோக்குகளே மீம்ஸ்களாக வலம் வருகின்றன.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு சக்தி சிதம்பரம் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்துக்கு ‘பேய் மாமா’ என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.

இது தொடர்பாக ஒரு போஸ்டரும் வெளியானது. ஆனால் அது பொய்யான போஸ்டர் என்று சொல்லப்படுகிறது.

எனவே விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

இதற்கு முன்பே என்னம்மா கண்ணு, காதல் கிறுக்கன், இங்கிலீஷ்காரன் உள்ளிட்ட பல படங்களில் வடிவேலுவை இயக்கியிருந்தார் சக்தி சிதம்பரம் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Vadivelu and Sakthi Chidambaram team up for Pei Mama

ப்ரேக் அப் காதலிகளுடன் இணையும் சிம்பு; நேற்று நயன்தாரா; இன்று ஹன்சிகா

ப்ரேக் அப் காதலிகளுடன் இணையும் சிம்பு; நேற்று நயன்தாரா; இன்று ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Again Simbu and Hanshika team up in Mahaசினிமாவில் இணைந்து நடிக்கும் நடிகர் நடிகைகள் நிஜத்திலும் காதலிப்பது உண்டு. சிலரது காதல் திருமணம் வரை செல்கிறது.

அதன்பின்னர் சில திருமண உறவுகள் நீடிக்கிறது. ஆனால் பலர் விவகாரத்தும் பெறுகின்றனர்.

சிலரது காதல் திருமணத்திற்கு முன்பே விரிசலை சந்திக்கிறது. நடிகர் சிம்புவின் காதல் அப்படிதான் பல முறையானது.

முதலில் நயன்தாராவை காதலித்தார் சிம்பு. இவர்கள் வல்லவன் படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பின்னர் சில பிரச்சினைகளால் இருவரும் பிரிந்தனர்.

இருந்தாலும் இது நம்ம ஆளு என்ற படத்தில் ஜோடி போட்டு நடித்தனர்.

அதன்பின்னர் வாலு படத்தில் நடித்த போது ஹன்சிகாவை காதலித்தார் சிம்பு. இந்த காதலிலும் விரிசல் ஏற்பட இருவரும் பிரிந்தனர்.

தற்போது மீண்டும் ஹன்சிகாவுடன் இணைந்து மகா என்ற படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.

ஸ்ரீகாந்த், ஹன்சிகா நடித்துவரும் இந்தப் படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

‘ஷோயப்’ எனும் கேரக்டரில் நடிக்க 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

சிம்பு மற்றும் ஹன்சிகா நடிக்கும் காட்சிகள் இஸ்தான்புல் நாட்டில் படமாக்கப்பட உள்ளது.

இந்த ‘மஹா’ பட போஸ்டரில் ஹன்சிகாவின் புகை பிடிக்கும் டிசைன் வெளியானதால் கோர்ட்டில் வழக்கு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Again Simbu and Hanshika team up in Maha

More Articles
Follows