நாச்சியார் ஜோதிகாவின் அடுத்த படம்; மீண்டும் மொழி இயக்குனருடன் கூட்டணி

நாச்சியார் ஜோதிகாவின் அடுத்த படம்; மீண்டும் மொழி இயக்குனருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Naachiyaar Jothika will act in Hindi remake of Tumhari Sulu‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி ஆனார் நடிகை ஜோதிகா.

அந்த படம் மாபெரும் வெற்றி பெற மகளிர் மட்டும் படத்திலும் நடித்தார்.

சில தினங்களுக்கு முன் வெளியான ‘நாச்சியார்’ படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் மணிரத்தினத்தின் செக்கச்சிவந்த வானம் படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகிய ‘தும்ஹரி சுளு’ என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணான வித்யா பாலனின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் படத்தின் கதையாம்.

இதில் ஜோதிகா நடிப்பார் என தெரிகிறது.

இப்படத்தை ராதா மோகன் இயக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

இவர் ஏற்கெனவே பிரித்விராஜ், ஜோதிகா, பிரகாஷ் ராஜ் நடித்த `மொழி’ படத்தை இயக்கியவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Naachiyaar Jothika will act in Hindi remake of Tumhari Sulu

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சத்யராஜ்-அருண்ராஜாகாமராஜ் & ஐஸ்வர்யா

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சத்யராஜ்-அருண்ராஜாகாமராஜ் & ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Sivakarthikeyanசிவகார்த்திகேயன் தன் சினிமா பயணத்தை ஆரம்பித்து 6 வருடங்களே ஆகிறது. இதில் இதுவரை 12 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

அவரின் அசாத்திய திறமையால் இன்று முன்னணி நடிகர்களின் வரிசையில் அவரின் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்க தற்போது தயாரிப்பாளராகி விட்டார்.

அவரது சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற சொந்த பேனரில் தயாரிக்கும் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.

இவர் ரஜினியின் கபாலி படத்தில் இடம் பெற்ற நெருப்புடா என்ற பாடலை எழுதி பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இயக்கவுள்ள இந்த படத்த்தில் சத்யராஜ் மற்றும் இளவரசு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

இந்த படத்தின் சூட்டிங் இன்று காலை லால்குடியில் தொடங்கியுள்ளது.

இந்த தகவல்களை சிவகார்த்திகேயனின் நண்பரான தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தெரிவித்துள்ளார்.

விமலுக்கு இனி வில்லங்கம் இருக்காது; கைகொடுக்கும் விநியோகஸ்தர் சிங்காரவேலன்

விமலுக்கு இனி வில்லங்கம் இருக்காது; கைகொடுக்கும் விநியோகஸ்தர் சிங்காரவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vemal and Singara Velanகடந்த ஜனவரியில் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியாகி 25 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

அதன்பிறகு வெளியான படங்கள் கூட தியேட்டரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையிலும், போட்டிக்கு புதிதாக பல படங்கள் வெளியான நிலையிலும் ‘மன்னர் வகையறா’வுக்கான வரவேற்பு இன்னும் குறையவே இல்லை என்கிறார்கள் வினியோகஸ்தர்கள்.

மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய விமலும், படத்தை இயக்கிய பூபதி பாண்டியனும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்றாலும் இதன் பின்னணியில் வெற்றிக்கான முக்கிய தூணாக இருந்துவருபவர் தான் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்கார வேலன். குறிப்பாக ‘மன்னர் வகையறா’ பட ரிலீசின்போது விமலின் ‘ஜன்னலோரம்’ பட இழப்பீடு விவகாரம் தலைதூக்க, தனது கையில் இருந்து 2 கோடி ரூபாய் கொடுத்து எந்தவித சிக்கலுமின்றி ‘மன்னர் வகையறா’ வெளிவர உதவினார் சிங்காரவேலன்.

அடுத்ததாக விமலின் நடிப்பில் தயாராகிவரும் ‘கன்னிராசி’ படத்தை வெளியிடும் உரிமையையும் சிங்காரவேலனே வாங்கியுள்ளார். படம் மார்ச் மாதம் வெளியாகிறது.

அதுமட்டுமல்ல, இனி விமல் நடிக்கும் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் கொடுத்து உதவிக்கரமும் நீட்ட முன்வந்துள்ளார் சிங்காரவேலன்.

மேலும் அப்படி தயாராகும் விமலின் படங்களை வெளியிடும் உரிமையையும் தானே வாங்கிக் கொள்ளவும் செய்கிறாராம் சிங்காரவேலன்.

தனுஷ்-சிம்புவை பின்னுக்கு தள்ளிய அனிருத்-சிவகார்த்திகேயன்

தனுஷ்-சிம்புவை பின்னுக்கு தள்ளிய அனிருத்-சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anirudh and SKசென்னை டைம்ஸ் பத்திரிகை 2017ம் ஆண்டில் மிகவும் விரும்பப்பட்ட ஆண்கள் யார் என்பது குறித்து வாசகர்கள் மத்தியில் கருத்துக்கணிப்பை நடத்தியது.

அந்த பட்டியலில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியோருக்கு இடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தவிர 30 ஆண்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இசையமைப்பாளரான அனிருத் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

2வது இடத்தில் சிவகார்த்திகேயன் உள்ளார். 3வது இடத்தில் ஹரிஷ் கல்யாண்.

4வது இடம் பிடித்த நடிகர்தான் மிக வியப்பாக உள்ளது. ஏனென்றால் அவர் இன்னும் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இப்போதுதான் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

அவர்தான் நடிகர் விக்ரமின் மகன் துருவ்.

5வது இடத்தில் துல்கர் சல்மான், 6வது இடத்தில் ராணா உள்ளார்.

தனுஷுக்கு 7வது இடமும், பிக் பாஸ் புகழ் ஆரவுக்கு 8வது இடமும் கிடைத்துள்ளது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி 9வது இடத்திலும், அதர்வா 10வது இடத்திலும், கிரிக்கெட் வீரர் அஸ்வின் 11வது இடத்திலும், சிம்பு 12வது இடத்திலும் உள்ளார்கள்.

கமலின் அரசியல் (ஆரம்ப) பயணத்தில் ஆர்வமில்லாத ஸ்ருதி..?

கமலின் அரசியல் (ஆரம்ப) பயணத்தில் ஆர்வமில்லாத ஸ்ருதி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan and Shruti Haasanநாளை மறுநாள் பிப்ரவரி 21ஆம் தேதி தனிக்கட்சி தொடங்கி தன் கட்சி பெயர் மற்றும் கட்சி கொள்கைகளை அறிவிக்க உள்ளார் கமல்ஹாசன்.

இதனால் பட சூட்டிங்கை நிறுத்தி வைத்துவிட்டு பல அரசியல் பிரபலங்களை சந்தித்து வருகிறார்.

மேலும் தன் மன்ற நிர்வாகிகள், ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் அரசியல் பயணத்திற்கு அவரது மகள் ஸ்ருதிஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது…

“எனக்கு அரசியல் தெரியாது. அப்பாவின் அரசியலுக்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு.

ஆனால், அவருடன் பயணிக்கும் திட்டம் எதுவுமில்லை. பிப்ரவரி 21ஆம் தேதி எனக்கு சூட்டிங் இருப்பதால் அன்று நான் ராமேசுவரம் செல்லவில்லை” என்று தெரிவித்தார்.

காலா-வுக்கு முன் காத்திருக்கும் சவால்கள்

காலா-வுக்கு முன் காத்திருக்கும் சவால்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaalaa posterசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் ரஜினி படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். இந்த முறை ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டதால் காலாவிற்கு விண்ணை முட்டும் உச்சகட்ட எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படமும் அரசியல் சார்ந்தே இருக்கும் என கூறப்படுகிறது.

எனவே தமிழகத்தில் ‘காலா’வுக்கு போட்டியாக வேறெந்த படமும் வெளியாகப் போவது கிடையாது.

இதற்கு முன் அறிவிக்கப்பட்டு இருந்த ‘மிஸ்டர். சந்திரமௌலி’ படத்தின் வெளியீடு தேதியை மாற்றிக்கொள்வதாக அந்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்துவிட்டது.

தமிழ்நாட்டை தாண்டி ஆந்திராவிலும் ரஜினிக்கு மிகப்பெரிய மார்கெட் உள்ளது.

ஆனால் மகேஷ்பாபுவின் அரசியல் த்ரில்லர் படமான ‘பரத் அனே நேனு’ படமும் (ஏப்ரல் 26ம் தேதி) வெளியாகிறது.

இதில் மகேஷ்பாபு முதல்வராக நடித்து இருப்பதால் இந்த தேதியை மாற்ற முடியாது என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டிஸ்னி, ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிடி வார்’ என்ற தங்களின் பிரம்மாண்ட படைப்பை அமெரிக்காவில் வெளியிடும் முன்னரே ஏப்ரல் 27 அன்று இந்தியாவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ‘அவெஞ்சர்ஸ்’ படம் திரையிடப்படவுள்ளது.

மேலும் சில ஹிந்தி திரைப்படங்களும் காலாவுக்கு போட்டியாக வரும் என சொல்லப்படுகிறது.

More Articles
Follows