எந்நிலைக்கு யான் சென்றிடினும் என்னை ஏற்றிவிட்ட ஏணி.; ஆரூர்தாஸ் மறைவுக்கு எம்எஸ். பாஸ்கர் இரங்கல்

எந்நிலைக்கு யான் சென்றிடினும் என்னை ஏற்றிவிட்ட ஏணி.; ஆரூர்தாஸ் மறைவுக்கு எம்எஸ். பாஸ்கர் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (வயது 91) நேற்று மாலை 6:40 மணிக்கு காலமானார்.

தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயர் யேசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் மாற்றிக் கொண்டார்.

1960-70-களில் எம் ஜி ஆர் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரத்தின் படங்களுக்கு ஆரூர் தாஸ் வசனம் எழுதியுள்ளார். இவரது வசனங்கள் அந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளன.

ஆரூர்தாஸ் மறைவுக்கு பிரபல குணச்சித்திர நடிகர் எம் எஸ் பாஸ்கர் தன் இரங்கலை கவிதை வடிவில் தெரிவித்துள்ளார்.

“அப்பாவுக்கு அஞ்சலி”.
————-

தமிழ் ஓய்ந்ததோ?
தன்னிகரற்ற எழுத்து சாய்ந்ததோ?

தமிழை தங்கு தடையின்றி, பிழையறப்பேச இந்த எளியவனுக்கு படிப்பித்த என் ‘ஆசான்’ விண்ணுலகம் சென்றாரோ…?

“டேய்..பாஸ்கரா” என்று என்னை அன்போடு அழைத்த அக்குரலை இனி எப்பிறப்பில் கேட்பேன்?

அரவணைத்தும், கண்டித்தும் என்னை வழி நடத்திய என் குருநாதர் அமரரானாரோ?

இந்நிலையல்ல… எந்நிலைக்கு யான் சென்றிடினும் என்னை ஏற்றி விட்ட ஏணி அவரன்றோ..?

மறக்க இயலுமோ? என் இறுதி மூச்சு உள்ளவரை ‘அப்பா’ தங்களை மறக்க இயலுமோ?

தாங்கள் பேசாவிட்டாலும் தங்கள் வசனங்கள் காலாகாலத்திற்கும் பேசப்படுமன்றோ..?

மீண்டும் தங்கள் வசனங்களை தாங்கள் சொல்லித்தர தங்கள் முன்பு நின்று தங்கள் சீடன் நான் ‘டப்பிங்’ பேசுவேனா?

“சென்று வாருங்கள் அப்பா”…

மாதாவின் நிழலில் இளைப்பாற…

கண்ணீருடன்

தங்கள் மாணாக்கன்
எம்.எஸ்.பாஸ்கர்.

 

குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி அஜித்

குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலே குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாலினி.

ரஜினியுடன் ‘ராஜா சின்ன ரோஜா’ உள்ளிட்ட பல படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

பின்னர் வளர்ந்து குமரி ஆன பிறகு விஜய் உடன் ‘காதலுக்கு மரியாதை’, பிரசாந்துடன் ‘பிரியாத வரம் வேண்டும்’, அஜித் உடன் ‘அமர்க்களம்’, மாதவனுடன் ‘அலைபாயுதே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

அமர்க்களம் படத்தில் அஜித்துடன் நடித்த போது காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு ஷாலினியை நடிக்க அஜித் அனுமதிக்கவில்லை. இவர்களுக்கு அனோஷ்கா ஆதிக் என இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நவம்பர் 20 ஷாலினி தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் ‘வாழை’ படத்தை ‘மாமன்னன்’ தொடங்கி வைத்தார்

மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் ‘வாழை’ படத்தை ‘மாமன்னன்’ தொடங்கி வைத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.

“பரியேறும் பெருமாள், கர்ணன், வெற்றிப்படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “மாமன்னன்” படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக “வாழை” படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார்.

தற்போது நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் “மாமன்னன்” படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் “வாழை” படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது.

Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது.

இப்படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்து கொள்ள, இன்று இனிதே துவங்கியது.

இந்த நிகழ்வில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, படத்தின் படப்பிடிப்பை க்ளாப் அடித்து துவக்கி வைத்தார்.

சிறுவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடிக்க சிறுவர் சினிமாவாக இப்படம் உருவாகிறது.

மேலும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

தொழில்நுட்ப குழு விவரம்

எழுத்து இயக்கம் – மாரி செல்வராஜ்
ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்
இசை – சந்தோஷ் நாராயணன்
கலை இயக்கம் – குமார் கங்கப்பன்
படத்தொகுப்பு – சூரிய பிரதமான்
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
நடனம் – சாண்டி
பாடல்கள் – யுகபாரதி, வெயில் முத்து
உடை வடிவமைப்பு – ஶ்ரீ ஸ்வர்ணா
ஒலி வடிவமைப்பு – சுரேன் G
ஸ்டில்ஸ் – ஜெய்குமார் வைரவன்
உடைகள் – ரவி தேவராஜ்
மேக்கப் – R கணபதி
விளம்பர வடிவமைப்பு – கபிலன் செல்லையா
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – வெங்கட் ஆறுமுகம்
தயாரிப்பாளர் – திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ்.

தயாரிப்பாளர்களாக மாறிய மாரி செல்வராஜ் மற்றும் மனைவி திவ்யா – புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது .

தயாரிப்பாளர்களாக மாறிய மாரி செல்வராஜ் மற்றும் மனைவி திவ்யா – புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது .

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் தற்போது இயக்கி வரும் ‘மாமன்னன்’ முடிவதற்குள், நவ்வி ஸ்டுடியோஸ் என்ற புதிய பேனரைத் தொடங்கி திரைப்படத் தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

நவ்வி ஸ்டுடியோஸின் முதல் படத்திற்கு ‘வாழை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கலையரசன் மற்றும் நிகிலா விமல் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கிராமப்புற பின்னணியில் உள்ள சிறுவர்களின் கூட்டம் பற்றிய கதை என்று சொல்லப்படுகிறது .

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் இணைந்து தயாரிக்க, திவ்யா மாரி செல்வராஜ் இணை தயாரிப்பாளராக உள்ளார்.

‘பாபா’ ரீ-ரிலீஸ் : 2K கிட்ஸின் முதல் ரஜினி படம்; ஃப்ளாப் ஆனாலும் தமிழ் சினிமா பார்த்திடாத பரபரப்பை கிளப்பிய படம்! முழு தகவல்கள்

‘பாபா’ ரீ-ரிலீஸ் : 2K கிட்ஸின் முதல் ரஜினி படம்; ஃப்ளாப் ஆனாலும் தமிழ் சினிமா பார்த்திடாத பரபரப்பை கிளப்பிய படம்! முழு தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2002ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார்.

அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.
மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

குறிப்பாக இந்தப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்தப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது.

இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ‘மாயா மாயா ‘, ‘சக்தி கொடு’, ‘கிச்சு கிச்சு’ என ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரசிகர்களின் மனதில் நீங்காமல் நிறைந்துள்ள இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் புதிதாகவே ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு உள்ளதால் மீண்டும் ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் என்பதில் சந்தேகமே இல்லை. படத்திற்கான சிறப்பு சப்தங்களும் கூட இன்னும் விறுவிறுப்பு கூட்டப்பட்டுள்ளன.

விரைவில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

*தொழில்நுட்பக் குழு*
ஒளிப்பதிவாளர் : சோட்டா K நாயுடு
தொகுப்பாளர்: VT விஜயன்
கலை இயக்குனர்: GK
சண்டை பயிற்சி: FEFSI விஜயன்
வரிகள்: கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து

கூடுதல் தகவல்கள்…

2000 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளுக்கு இதுதான் முதல் ரஜினி படம்.

1999இல் வெளியான ரஜினியின் படையப்பா படத்திற்கு பிறகு வெளியான படம் தான் பாபா. கிட்டத்தட்ட மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு தான் இந்த படம் வெளியானது.

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி படம் வெளியானதால் இந்த படம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. பாபா செய்திகள் என்று பல நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் செய்திகள் வெளியானது.

மேலும் பாபா வெளியான சமயத்தில் பாமக கட்சியால் நிறைய பிரச்சனைகள் உருவானது. ரஜினி புகைப்பிடிப்பதால் இளைஞர்கள் சீரழிவதாக கூறி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது பாமக கட்சி.

மேலும் பாபா வெளியான தியேட்டர்களில் படப்பெட்டியை எடுத்துக்கொண்டு அவர்கள் ஓடியதால் நிறைய திரை அரங்குகளில் படம் நிறுத்தப்பட்டது.

அன்று முதல் ரஜினி ரசிகர்களுக்கும் பாமக கட்சிக்கும் இடையே பெரும் மோதல்கள் உருவானது.

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் தோல்வி அடைந்தது. தனது நிஜ வாழ்க்கையில் ஆன்மீகவாதியாக பார்க்கப்படும் ரஜினிகாந்த் ‘பாபா’ படத்தில் நாத்திகவாதியாக நடித்திருந்தார்.

எப்போதுமே ரஜினி படத்தை ரசிகர்கள் அவரது சொந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டு தான் பார்ப்பார்கள். எனவே இந்த படம் மிகப்பெரும் தோல்வியை அடைந்தது.

இதனால் விநியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் ரஜினியிடம் பணத்தை திருப்பி கேட்டனர். இதனை அடுத்து ரஜினிகாந்த் விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தார்.

உலக சினிமாவிலேயே முதன்முறையாக படம் நஷ்டை அடைந்ததால் பணத்தை திருப்பி கொடுத்து நடிகர் தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தையும் ரஜினிகாந்த் அடைந்தார் என அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.

பாபா படம் தோல்வியால் ரஜினியின் சினிமா பயணம் முடிந்தது என சிலர் பேசத் தொடங்கினர். எனவே தான் சந்திரமுகி பட விழாவில்..” நான் யானை அல்ல குதிரை.. விழுந்தால் டக்குனு எழுந்திருவேன்.” என ரஜினிகாந்த் பரபரப்பாக பேசினார். அதுபோல சந்திரமுகி படமும் மெகா ஹிட் ஆனது நாம் அறிந்த ஒன்றுதான்.

மோடி & ஸ்டாலினை வச்சு செய்த விஜய்ஸ்ரீ.; ‘பவுடர்’ பட டிரைலர் சம்பவம்.; சென்சாரில் கட்.!

மோடி & ஸ்டாலினை வச்சு செய்த விஜய்ஸ்ரீ.; ‘பவுடர்’ பட டிரைலர் சம்பவம்.; சென்சாரில் கட்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கி தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ‘பவுடர்’.

இந்த படத்தில் நிகில் முருகன், வித்யா பிரதீப், மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி ஆதவன், அனித்ரா நாயர், இளையா, வையாபுரி, ஒற்றன்துரை, சதீஷ் முத்து ராமராஜன், சில்மிஷம் சிவா, தர்மா, விக்கி, முருகன், அர்ஜுன், மனோ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

லீயாண்டர் லீ மார்ட்டி இசையமைக்க, ராஜபாண்டி & பிரஹத் ஒளிப்பதிவு செய்ய குணா எடிட்டிங் செய்துள்ளார்.

இந்த படத்தை மோகன்ராஜ் என்பவர் இணை தயாரிப்பாளராக தயாரித்து வருகிறார்.

இந்த படத்திற்கு சென்சாரில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த படத்தின் டீசர் அக்டோபர் 1ஆம் தேதி வெளியானது. இதில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயமாக மனிதக்கறி வேட்டை இடம் பெற்றது.

மனிதக்கறி தமிழகத்திற்கு ஊடுருவி வருவதாக இந்த படத்தில் காட்சிகள் வைத்து இருந்தார் விஜய்ஸ்ரீ.

நவம்பர் 25ஆம் தேதி ‘பவுடர்’ படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

இதனை முன்னிட்டு நவம்பர் 18ஆம் தேதி பவுடர் படத்தின் டிரைலர் வெளியானது.

இதில்.. மோடி அரசை கலாய்த்து சில வசனங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு காட்சியில்… “உங்களுக்கு வேணும்னா கைதட்ட சொல்லுவீங்க.. விளக்கு ஏற்ற சொல்லுவீங்க.. ” என்று கொரோனா காலத்தில் நடந்த சம்பவங்களை ஆதவன் பேசுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த காட்சிகளுக்கு சென்சாரில் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து இந்த காட்சிகளை கட் செய்யாமல் அந்த வசனங்களை மீயூட் செய்துள்ளனர்.

னவே அந்த காட்சிகளை இந்த ட்ரெய்லரில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார் விஜய்ஸ்ரீ.

மேலும் மற்றொரு (படத்தில் இடம் பெற்றுள்ளது) காட்சியில்.. “ஒரு அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டி மொட்ட ராஜேந்திரனிடம்.. “சிசிடிவி கேமரா இருக்கிறதா? என கேட்கிறார் போலீஸ் நிகில் முருகன்.

அதற்கு சிசிடிவி கேபிள் ஒயர்களை அணில் கடித்து விட்டது என்கிறார்.. “யோவ் என்னய்யா சொல்ற என மீண்டும் கேட்கிறார்.. மின்சார ஒயர்களை அணில் கடிக்கும் போது கேபிள் ஒயர்கள் அணில் கடிக்காதா? என ஸ்டாலின் திமுக அரசையும் கலாய்த்துள்ளார் இயக்குனர் விஜய்ஸ்ரீ.

Powder movie Trailer troll Modi and Stalin Governments

Here’s Powder – Official Trailer

Powder – Official Trailer

கூடுதல் தகவல்..

கடந்த 2021ல் திமுக அரசு பதவி ஏற்ற சில மாதங்களிலேயே… “மின் தடைக்கு காரணம் அணில் தான் என புதிய விளக்கத்தை அளித்துள்ளார் மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி. ‘அப்போது்.. ’மின் வழித் தடத்தில் செடி வளர்ந்து கம்பியோடு மோதும், அதில் அணில் வந்து ஓடும், கம்பி ஒன்றாகி பழுது ஏற்படும். இது போல் நேரத்தில் தான் மின் தடை’’ என விளக்கமளித்து இருந்தார் அமைச்சர்.

More Articles
Follows