தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் மோகன் நடித்த வெளியான முதல் திரைப்படம் ‘கோகிலா’.
இந்த படத்தில் கமல்ஹாசன் ஷோபா உள்ளிட்டோர் ஒரு நடிக்க பாலுமகேந்திரா இயக்கியிருந்தார்.
இந்த படம் வெளியாகி 45 ஆண்டுகள் நிறைவான நிலையில் இன்று இதனை கொண்டாடும் விதமாக மோகன் ரசிகர்கள் பிரம்மாண்டமான விழாவை சென்னையில் நடத்தினர்.
இந்த விழா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சீனுராமசாமி கலந்துக் கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது…
” நான் எங்கள் ஊரில் மோகனுக்கு ரசிகர் மன்றம் வைத்தவன். மோகன் திரைப்படங்களை பார்த்து வளர்ந்தவன்.
கடந்த மூன்று வருடங்களாக தான் அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் 30 வருடங்களாக அவரது படங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
நான் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படத்தை இயக்கும்போது அதில் குரு சோமசுந்தரம் கேரக்டருக்கு நடிகர் மோகனை அணுகினேன். ஆனால் அவர் மிகவும் யோசித்தார். அந்த கேரக்டரில் நடிக்கவில்லை.
அதன் பின்னர் தான் அவர் நாயகனாக நடிக்க காத்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். எனவே மோகனுக்காக அடுத்த படத்தை நான் இயக்க உள்ளேன்.
என் அடுத்த படத்தில் மோகன் நடிக்க இருக்கிறார்.
ஹரா இயக்குனர் விஜய் ஸ்ரீயை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். மைக் பிடித்துக் கொண்டிருந்த மோகன் கையில் துப்பாக்கி கொடுத்து இருக்கிறார்.படத்தின் காட்சிகள் பிரமாதமாக உள்ளது.”
இவ்வாறு சீனு ராமசாமி பேசினார்.
ரஜினி கமல் கூடி இழுத்த தேர் பொன்னியின் செல்வன் – Seenu Ramasamy l Ponniyin Selvan Rajini Kamal – PS1 ??filmistreet