தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிராக 20,000-த்துக்கு அதிகமான தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு 13 பேரை சுட்டுக்கொன்றனர்.
மேலும், இந்த கலவரம் தொடர்பாக ஏராளமானோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
எனவே அந்த ஆலை மூடப்பட்டது. தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் தயாரிக்க தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையின் இடைக்கால அறிக்கையை முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், கடந்த 14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
இந்த நிலையில் 2018ல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை இன்று மதுரையில் வழங்கினார் முதல்வர் முக. ஸ்டாலின்.
மேலும் அந்த சம்பவத்தில் தீவிர காயம் அடைந்த 3 பேருக்கும் பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இத்துடன் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்கு காயங்களும், பலருக்கு மன உளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
அதனடிப்படையில், 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும்.
இதுதவிர ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டாராம்.
அவரை இழந்துவாடும் அவரது 72 வயது தாயாருக்கு இரண்டு லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது.
மேலும் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
MK Stalin gives govt jobs to kin of Thoothukudi police firing victims