பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ்.; சுசீந்திரன் – ஜிவி. பிரகாஷ் கூட்டணி

பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ்.; சுசீந்திரன் – ஜிவி. பிரகாஷ் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க உள்ளார்.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையம் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜி வி பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் முதல் பார்வையை மார்ச் 31 அன்று 10 முன்னணி இயக்குநர்கள் வெளியிட உள்ளார்கள்.

பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

இயக்குநராக தனது முதல் படத்தை தயாரிப்பதற்காக சுசீந்திரனுக்கு நன்றி தெரிவித்துள்ள மனோஜ் பாரதிராஜா, இயக்குனர் மணிரத்னத்திடம் பம்பாய் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது அதனையொட்டி அவரை சந்தித்து ஆசி பெற்றார்.

இப்படம் அனைவரும் ரசித்து பாராட்டும் வகையில் இத்திரைப்படம் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் ஜி வி பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கிய பங்காற்றும் என்றும் மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார்.

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

Manoj to direct Bharathiraja to be produced by Suseeenthiran

IPL தீம் – வாரணம் ஆயிரம் – துப்பாக்கி கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் மரணம்

IPL தீம் – வாரணம் ஆயிரம் – துப்பாக்கி கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்களுக்கு கிட்டார் வாசித்த பிரபல கிட்டார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ்.

2008 ஆம் ஆண்டு விக்ரம் நடித்த ‘பீமா’ படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கிடாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு கௌதம் மேனனின் ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் கிடாரிஸ்டாக பணியாற்றினார்.

விஸ்வரூபம், துப்பாக்கி, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், டி இமான் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

இவர் கடந்த 2015- வெளியான ‘உப்பு கருவாடு’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இவர் கடந்த சில மாதங்களாக மூளைக் கட்டியால் மற்றும் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது

இந்த நிலையில், நேற்று இரவு கிட்டார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Guitarist Steeve Vatz passes away

லைக்கா தயாரிப்பில் 2 ஹீரோயினுடன் ‘தீராக் காதல்’ செய்யும் ஜெய்

லைக்கா தயாரிப்பில் 2 ஹீரோயினுடன் ‘தீராக் காதல்’ செய்யும் ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தீராக் காதல்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தீராக் காதல்’.

இந்தப்படத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் G. R. சுரேந்தர்நாத் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார்.

தீராக் காதல்

கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா G.K. மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு G.R.சுரேந்தர்நாத் வசனம் எழுத, T. உதயக்குமார் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

சுப்ரமணியன் நாராயணன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், G.K.M. தமிழ் குமரன் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருக்க,ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்து விரைவில் திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தின் தலைப்பும், தோற்றமும், லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இதனிடையே தமிழகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’, ‘இந்தியன் 2’, ‘லால் சலாம்’, ‘தலைவர் 170’ என பிரம்மாண்ட பொருட் செலவில் திரைப்படங்கள் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தீராக் காதல்

Theera Kaadhal movie first look released of lyca

பொன்னியின் செல்வன் 2 டிரைலர் அப்டேட்டை வெளியிட்ட லைக்கா

பொன்னியின் செல்வன் 2 டிரைலர் அப்டேட்டை வெளியிட்ட லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பொன்னியின் செல்வன் 2’ இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. சமீபத்தில் ‘அக நக’ என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் மார்ச் 29-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே கூறப்பட்டது. டிரெய்லரின் நேரம் சுமார் 3 நிமிடங்கள் மற்றும் 25 வினாடிகள் என்று கூறப்படுகிறது.

Mani Ratnam’s ‘Ponniyin Selvan 2’ trailer to arrive on this date?

மூத்த நடிகையை திருமணம் செய்த ‘பசங்க’ கிஷோர்

மூத்த நடிகையை திருமணம் செய்த ‘பசங்க’ கிஷோர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பசங்க’ புகழ் நடிகர் கிஷோர் சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்டார். ​​’வானத்தைப் போல’ சீரியல் மூலம் பிரபலமானவர் டிவி நடிகை ப்ரீத்தி குமார், ‘ப்ரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், புதுமணத் தம்பதிகளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சென்னையில் ப்ரீத்தி மற்றும் கிஷோர் திருமணம், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்ட பிரமாண்டமாக நடந்தது.

கிஷோர் அவரை விட நான்கு வயது மூத்த ப்ரீத்தியை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘Pasanga’ fame Kishore and serial actress Preethi Kumar get married

JUST IN அஜித் தந்தை மறைவுக்கு நேரில் விஜய் அஞ்சலி?!; கமல் – விக்ரம் சிம்பு இரங்கல்

JUST IN அஜித் தந்தை மறைவுக்கு நேரில் விஜய் அஞ்சலி?!; கமல் – விக்ரம் சிம்பு இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்.

நடிகர் அஜித்தின் தந்தை பி சுப்ரமணியம். இவருக்கு மோகினி என்கிற மனைவியும், அனில் குமார், அனூப் குமார் மற்றும் அஜித் குமார் என மூன்று மகன்களும் உள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் அஜித்தின் தந்தை சுப்ரமணியம்.

எனவே சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் அஜித்தின் தந்தை இன்று காலமானார்.

தந்தையின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியுள்ள அஜித்திற்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

சுப்ரமணியத்தின் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் அஜித்தின் சக போட்டியாளராக சினிமாவில் கருதப்படும் நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் என தகவல் வந்தது.

ஆனால் விஜய் நேரில் வரவில்லை என்றும் அவரது காரில் ரசிகர் மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்த் வந்தார் எனவும் கூறப்படுகிறது.. விஜய் சார்பாக அவர் அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார் என சொல்லப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அஜித்தின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில்…

தம்பி #Ajithkumar அவர்களின் அப்பா திரு. சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்..

‘விக்ரம் தன் ட்விட்டர் பதிவில்…

My heartfelt condolences to Ajith, his mother and family. The loss of one’s dad .. especially someone as caring and sweet as Subramaniam uncle can never be compensated. May his soul rest in peace. Stay strong Ajith. https://t.co/eY081S4WQG

சிம்பு தன் ட்விட்டர் பதிவில்…

My sincere condolences to Ajith sir & his family on the demise of his father
MR P.S Mani.

May god give you & your family strength through this difficult time & may his soul rest in peace

Vijay and Kamal Haasan condolence message for Ajith’s father

More Articles
Follows